<?xml version="1.0" encoding="UTF-8"?>
<rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	xmlns:media="http://search.yahoo.com/mrss/"
	>

<channel>
	<title></title>
	<atom:link href="http://chithran.wordpress.com/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>http://chithran.wordpress.com</link>
	<description>’மூச்சை மூச்சென்று உணர்ந்து மூச்சை மூச்சாக ஒரு கணகம் சிந்திக்கையில் மூச்சுத் திணறுகிறது’ -அபிதா நாவலில் லா.ச.ரா</description>
	<lastBuildDate>Sun, 20 Sep 2009 17:56:04 +0000</lastBuildDate>
	<generator>http://wordpress.com/</generator>
	<language>en</language>
	<sy:updatePeriod>hourly</sy:updatePeriod>
	<sy:updateFrequency>1</sy:updateFrequency>
	<cloud domain='chithran.wordpress.com' port='80' path='/?rsscloud=notify' registerProcedure='' protocol='http-post' />
<image>
		<url>http://www.gravatar.com/blavatar/c99975fa1774ea4cfad123448cb400b0?s=96&#038;d=http://s.wordpress.com/i/buttonw-com.png</url>
		<title></title>
		<link>http://chithran.wordpress.com</link>
	</image>
			<item>
		<title>சித்ரன் படைப்புகள்</title>
		<link>http://chithran.wordpress.com/2009/08/08/%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%b0%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%9f%e0%af%88%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/</link>
		<comments>http://chithran.wordpress.com/2009/08/08/%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%b0%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%9f%e0%af%88%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/#comments</comments>
		<pubDate>Sat, 08 Aug 2009 08:47:38 +0000</pubDate>
		<dc:creator>சித்ரன்</dc:creator>
				<category><![CDATA[Uncategorized]]></category>
		<category><![CDATA[சித்ரன்]]></category>
		<category><![CDATA[சித்ரன்.காம்]]></category>
		<category><![CDATA[சிறுகதை]]></category>
		<category><![CDATA[சிறுகதைகள்]]></category>
		<category><![CDATA[வலைப்பதிவுகள்]]></category>
		<category><![CDATA[chithran]]></category>
		<category><![CDATA[chithran.com]]></category>
		<category><![CDATA[chitran]]></category>

		<guid isPermaLink="false">http://chithran.wordpress.com/?p=139</guid>
		<description><![CDATA[

என்னைப்பற்றி


1995-ல் ஒரு சிறுகதை மூலமாக கல்கி இதழில் அறிமுகமான பிறகு இலக்கிய, கதையார்வ விதைகள் தூவப்பட்டு தொடர்ந்து சிறுகதைகள் எழுத ஆரம்பித்தேன். இது வரை சுமார் முப்பது சிறுகதைகள் கல்கி, ஆனந்த விகடன், மங்கையர் மலர், அமுத சுரபி போன்ற&#8230;
மேலும் படிக்க..




வலைப்பதிவுகள்




சிறுகதைகள்

 நீரோட்டம்
 தனி வலி
 லிஃப்ட்
 வீடு
 அறை
 ஜனனம்
 விரல்கள்
 திருப்பம்
 ஆரஞ்சுப்பழங்கள்
 இன்னுமொரு ஞாபகம்
 பேறு
 அழகிய தீயே



சிறுகதைத் தொகுப்பு


மனதில் உனது ஆதிக்கம்
வெளியீடு: கிழக்கு பதிப்பகம்



மற்றவை
தொடர்கதை

மரத்தடி.காமில் எழுதியவை


ஓடிக்கொண்டிருத்தல்
முன்பதிவு
ஆண்களுக்கு மட்டும்
கோட்டை




Posted in Uncategorized Tagged: [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=chithran.wordpress.com&blog=235394&post=139&subd=chithran&ref=&feed=1" />]]></description>
			<content:encoded><![CDATA[<div class='snap_preview'><br /><div style="border:1px solid #666666;width:483px;height:900px;background-color:#423a2b;margin:5px;padding:5px 0 0 5px;">
<div style="border:1px solid #544b3b;position:relative;float:left;width:448px;height:150px;margin:3px;padding:10px;">
<div style="width:auto;height:20px;background-color:#2e291e;font-weight:bold;font-size:13px;color:#ac9d57;padding:5px;">என்னைப்பற்றி</div>
<div>
<div style="border:1px solid #999933;width:75px;height:75px;float:left;margin:3px 5px 0 0;"><img src="http://img.photobucket.com/albums/v727/chithran/rag_75x75.jpg" border="none" alt="" /></div>
<div style="position:absolute;right:10px;top:50px;width:355px;height:auto;font-family:Arial,Helvetica,sans-serif;font-style:normal;font-variant:normal;font-weight:normal;font-size:11px;line-height:normal;color:#cbcbad;">1995-ல் ஒரு சிறுகதை மூலமாக கல்கி இதழில் அறிமுகமான பிறகு இலக்கிய, கதையார்வ விதைகள் தூவப்பட்டு தொடர்ந்து சிறுகதைகள் எழுத ஆரம்பித்தேன். இது வரை சுமார் முப்பது சிறுகதைகள் கல்கி, ஆனந்த விகடன், மங்கையர் மலர், அமுத சுரபி போன்ற&#8230;</p>
<div style="font:normal 11px Arial, Helvetica, sans-serif;color:#fff;text-align:right;"><a href="http://chithran.wordpress.com/2008/06/06/aboutme/">மேலும் படிக்க..</a></div>
</div>
</div>
</div>
<div style="border:1px solid #544b3b;position:relative;float:left;width:210px;height:350px;margin:3px;padding:10px;">
<div style="width:auto;height:20px;background-color:#2e291e;font-weight:bold;font-size:13px;color:#ac9d57;padding:5px;">வலைப்பதிவுகள்</div>
<div style="position:absolute;top:60px;left:10px;"><a href="http://chithran.blogspot.com" target="_blank"><img src="http://img.photobucket.com/albums/v727/chithran/puLLi_image.gif" border="none" alt="" /></a></div>
<div style="position:absolute;top:130px;left:10px;"><a href="http://inru.wordpress.com/category/சித்ரன்" target="_blank"><img src="http://img.photobucket.com/albums/v727/chithran/inru_image.gif" border="none" alt="" /></a></div>
</div>
<div style="border:1px solid #544b3b;position:relative;float:left;width:210px;height:350px;margin:3px;padding:10px;">
<div style="width:auto;height:20px;background-color:#2e291e;font-weight:bold;font-size:13px;color:#ac9d57;padding:5px;">சிறுகதைகள்</div>
<ul style="margin:0;padding:2px;">
<li style="list-style:none;padding-top:3px;"> <a style="font:normal 11px Arial, Helvetica, sans-serif;color:#cbcbad;padding-left:20px;text-decoration:underline;" href="http://chithran.wordpress.com/2009/08/01/neerottam/">நீரோட்டம்</a></li>
<li style="list-style:none;padding-top:3px;"> <a style="font:normal 11px Arial, Helvetica, sans-serif;color:#cbcbad;padding-left:20px;text-decoration:underline;" href="http://chithran.wordpress.com/2009/07/31/thanivali">தனி வலி</a></li>
<li style="list-style:none;padding-top:3px;"> <a style="font:normal 11px Arial, Helvetica, sans-serif;color:#cbcbad;padding-left:20px;text-decoration:underline;" href="http://chithran.wordpress.com/2007/08/28/lift">லிஃப்ட்</a></li>
<li style="list-style:none;padding-top:3px;"> <a style="font:normal 11px Arial, Helvetica, sans-serif;color:#cbcbad;padding-left:20px;text-decoration:underline;" href="http://chithran.wordpress.com/2007/08/28/veedu">வீடு</a></li>
<li style="list-style:none;padding-top:3px;"> <a style="font:normal 11px Arial, Helvetica, sans-serif;color:#cbcbad;padding-left:20px;text-decoration:underline;" href="http://chithran.wordpress.com/2007/08/28/arai">அறை</a></li>
<li style="list-style:none;padding-top:3px;"> <a style="font:normal 11px Arial, Helvetica, sans-serif;color:#cbcbad;padding-left:20px;text-decoration:underline;" href="http://chithran.wordpress.com/2007/08/28/jananam">ஜனனம்</a></li>
<li style="list-style:none;padding-top:3px;"> <a style="font:normal 11px Arial, Helvetica, sans-serif;color:#cbcbad;padding-left:20px;text-decoration:underline;" href="http://chithran.wordpress.com/2007/08/27/viralgal">விரல்கள்</a></li>
<li style="list-style:none;padding-top:3px;"> <a style="font:normal 11px Arial, Helvetica, sans-serif;color:#cbcbad;padding-left:20px;text-decoration:underline;" href="http://chithran.wordpress.com/2007/08/28/thiruppam">திருப்பம்</a></li>
<li style="list-style:none;padding-top:3px;"> <a style="font:normal 11px Arial, Helvetica, sans-serif;color:#cbcbad;padding-left:20px;text-decoration:underline;" href="http://chithran.wordpress.com/2007/08/28/aaranjupazangal">ஆரஞ்சுப்பழங்கள்</a></li>
<li style="list-style:none;padding-top:3px;"> <a style="font:normal 11px Arial, Helvetica, sans-serif;color:#cbcbad;padding-left:20px;text-decoration:underline;" href="http://chithran.wordpress.com/2007/08/28/innumorugnabagam">இன்னுமொரு ஞாபகம்</a></li>
<li style="list-style:none;padding-top:3px;"> <a style="font:normal 11px Arial, Helvetica, sans-serif;color:#cbcbad;padding-left:20px;text-decoration:underline;" href="http://chithran.wordpress.com/2007/08/28/paeru">பேறு</a></li>
<li style="list-style:none;padding-top:3px;"> <a style="font:normal 11px Arial, Helvetica, sans-serif;color:#cbcbad;padding-left:20px;text-decoration:underline;" href="http://chithran.wordpress.com/2007/08/28/azhagiya-theeye">அழகிய தீயே</a></li>
</ul>
</div>
<div style="border:1px solid #544b3b;clear:both;position:relative;float:left;width:210px;height:302px;margin:3px;padding:10px;">
<div style="width:auto;height:20px;background-color:#2e291e;font-weight:bold;font-size:13px;color:#ac9d57;padding:5px;">சிறுகதைத் தொகுப்பு</div>
<div style="position:absolute;top:60px;left:30px;"><a href="http://www.anyindian.com/product_info.php?products_id=26024" target="_blank"><img src="http://img.photobucket.com/albums/v727/chithran/wrapper-manadhil.jpg" border="none" alt="Manadhil Unadhu Aadhikkam - மனதில் உனது ஆதிக்கம் - &lt;/p&gt; &lt;p&gt;    சித்ரன் - சிறுகதைத் தொகுப்பு" width="132" /></a></div>
<div style="position:absolute;top:260px;left:30px;">
<p><a style="font:normal 12px Arial, Helvetica, sans-serif;color:#cbcbad;text-decoration:underline;" href="http://www.anyindian.com/product_info.php?products_id=26024" target="_blank">மனதில் உனது ஆதிக்கம்</a></p>
<p style="font:normal 11px Arial, Helvetica, sans-serif;color:#cbcbad;">வெளியீடு: கிழக்கு பதிப்பகம்</p>
</div>
</div>
<div style="border:1px solid #544b3b;position:relative;float:left;width:210px;height:302px;margin:3px;padding:10px;">
<div style="width:auto;height:20px;background-color:#2e291e;font-weight:bold;font-size:13px;color:#ac9d57;padding:5px;">மற்றவை</div>
<div style="position:absolute;top:60px;left:20px;font-size:11px;font-weight:bold;color:#cbcbad;">தொடர்கதை</div>
<div style="position:absolute;top:80px;left:20px;"><a style="font:bold 11px Arial, Helvetica, sans-serif;color:#cbcbad;text-decoration:underline;" href="http://www.tamiloviam.com/unicode/thodargalpage.asp?folder=chitran1&amp;taid=1" target="_blank"><img src="http://img.photobucket.com/albums/v727/chithran/kotitta_itangal.gif" border="0" alt="கோடிட்ட இடங்கள் - தமிழோவியம்" /></a></div>
<div style="position:absolute;top:150px;left:20px;font-family:Arial,Helvetica,sans-serif;font-style:normal;font-variant:normal;font-weight:bold;font-size:11px;line-height:normal;color:#cbcbad;">மரத்தடி.காமில் எழுதியவை</div>
<div style="position:absolute;top:170px;left:20px;font-family:Arial,Helvetica,sans-serif;font-style:normal;font-variant:normal;font-weight:bold;font-size:12px;line-height:normal;color:#cbcbad;">
<ul>
<li style="padding-top:3px;"><a style="font:normal 11px Arial, Helvetica, sans-serif;color:#cbcbad;text-decoration:underline;" href="http://chithran.wordpress.com/2007/08/26/running">ஓடிக்கொண்டிருத்தல்</a></li>
<li style="padding-top:3px;"><a style="font:normal 11px Arial, Helvetica, sans-serif;color:#cbcbad;text-decoration:underline;" href="http://chithran.wordpress.com/2007/08/26/reservation">முன்பதிவு</a></li>
<li style="padding-top:3px;"><a style="font:normal 11px Arial, Helvetica, sans-serif;color:#cbcbad;text-decoration:underline;" href="http://chithran.wordpress.com/2007/08/26/aangalukkumattum">ஆண்களுக்கு மட்டும்</a></li>
<li style="padding-top:3px;"><a style="font:normal 11px Arial, Helvetica, sans-serif;color:#cbcbad;text-decoration:underline;" href="http://chithran.wordpress.com/2007/08/26/fort">கோட்டை</a></li>
</ul>
</div>
</div>
</div>
Posted in Uncategorized Tagged: சித்ரன், சித்ரன்.காம், சிறுகதை, சிறுகதைகள், வலைப்பதிவுகள், chithran, chithran.com, chitran <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/chithran.wordpress.com/139/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/chithran.wordpress.com/139/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/chithran.wordpress.com/139/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/chithran.wordpress.com/139/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/chithran.wordpress.com/139/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/chithran.wordpress.com/139/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/chithran.wordpress.com/139/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/chithran.wordpress.com/139/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/chithran.wordpress.com/139/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/chithran.wordpress.com/139/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=chithran.wordpress.com&blog=235394&post=139&subd=chithran&ref=&feed=1" /></div>]]></content:encoded>
			<wfw:commentRss>http://chithran.wordpress.com/2009/08/08/%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%b0%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%9f%e0%af%88%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:content url="http://1.gravatar.com/avatar/167f258ca8d521ae05fbc12e6086f005?s=96&#38;d=identicon&#38;r=G" medium="image">
			<media:title type="html">சித்ரன்</media:title>
		</media:content>

		<media:content url="http://img.photobucket.com/albums/v727/chithran/rag_75x75.jpg" medium="image" />

		<media:content url="http://img.photobucket.com/albums/v727/chithran/puLLi_image.gif" medium="image" />

		<media:content url="http://img.photobucket.com/albums/v727/chithran/inru_image.gif" medium="image" />

		<media:content url="http://img.photobucket.com/albums/v727/chithran/wrapper-manadhil.jpg" medium="image">
			<media:title type="html">Manadhil Unadhu Aadhikkam - மனதில் உனது ஆதிக்கம் - &#60;/p&#62; &#60;p&#62;    சித்ரன் - சிறுகதைத் தொகுப்பு</media:title>
		</media:content>

		<media:content url="http://img.photobucket.com/albums/v727/chithran/kotitta_itangal.gif" medium="image">
			<media:title type="html">கோடிட்ட இடங்கள் - தமிழோவியம்</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>நீரோட்டம்</title>
		<link>http://chithran.wordpress.com/2009/08/01/neerottam/</link>
		<comments>http://chithran.wordpress.com/2009/08/01/neerottam/#comments</comments>
		<pubDate>Sat, 01 Aug 2009 16:04:37 +0000</pubDate>
		<dc:creator>சித்ரன்</dc:creator>
				<category><![CDATA[சிறுகதைகள்]]></category>
		<category><![CDATA[கல்கி]]></category>
		<category><![CDATA[சித்ரன்]]></category>
		<category><![CDATA[சிறுகதை]]></category>
		<category><![CDATA[நீரோட்டம்]]></category>

		<guid isPermaLink="false">http://chithran.wordpress.com/?p=184</guid>
		<description><![CDATA[சிறுகதை
கல்கி &#8211; 16.8.2009
“ஆகாஷை மறுபடி எங்கேயாவது மீட் பண்ணியா?” என்றாள் பிரமிளா.
அப்பாடா! ஒரு வழியாகக் கேட்டுவிட்டாள். இந்தக் கேள்வியை அவள் நிச்சயம் கேட்காமல் இருக்க மாட்டாள் என்று அவனுக்கு ஏதோ ஒரு உள்ளுணர்வு சொல்லிக்கொண்டேயிருந்தது. இதோ கேட்டேவிட்டாள்! அதைக் கேட்கும்போது அவள் குரலில் ஏதேனும் ஆர்வம் தென்பட்டதா என்பதை அறிய முற்பட்டான் அருண். ஆனால் ரொம்ப சாதாரணமான குரலில்தான் அவள் அதைக் கேட்டாள். அவள் கேட்காமல் இருந்தால்கூட அவன் ஆகாஷைப் பற்றி அவளிடம் சொல்வதாகத்தான் இருந்தான்.
மத்ய கைலாஸில் [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=chithran.wordpress.com&blog=235394&post=184&subd=chithran&ref=&feed=1" />]]></description>
			<content:encoded><![CDATA[<div class='snap_preview'><br /><p><em><strong>சிறுகதை<br />
கல்கி &#8211; 16.8.2009</strong></em></p>
<p>“ஆகாஷை மறுபடி எங்கேயாவது மீட் பண்ணியா?” என்றாள் பிரமிளா.</p>
<p>அப்பாடா! ஒரு வழியாகக் கேட்டுவிட்டாள். இந்தக் கேள்வியை அவள் நிச்சயம் கேட்காமல் இருக்க மாட்டாள் என்று அவனுக்கு ஏதோ ஒரு உள்ளுணர்வு சொல்லிக்கொண்டேயிருந்தது. இதோ கேட்டேவிட்டாள்! அதைக் கேட்கும்போது அவள் குரலில் ஏதேனும் ஆர்வம் தென்பட்டதா என்பதை அறிய முற்பட்டான் அருண். ஆனால் ரொம்ப சாதாரணமான குரலில்தான் அவள் அதைக் கேட்டாள். அவள் கேட்காமல் இருந்தால்கூட அவன் ஆகாஷைப் பற்றி அவளிடம் சொல்வதாகத்தான் இருந்தான்.</p>
<p>மத்ய கைலாஸில் கிரீன் சிக்னல் விழுந்ததும் சட்டென்று கியர் மாற்றி காரைக் கிளப்பினான் அருண். சீரான வேகத்தைத் தொட்டுவிட்டு முன்னிருக்கையிலிருந்த அவளைத் திரும்பிப் பார்த்தான். அவளும் அவனைத் திரும்பிப் பார்த்தாள். அந்தக் கேள்வியைக் கேட்டதன் மிகப் பெரிய தயக்கத்தோடு அவள் கண்கள் அவனை கூர்ந்து கவனித்ததைப் பார்த்தான். அவனால் சிரிப்பை அடக்க முடியவில்லை.</p>
<p>“ஏன் சிரிக்கறே? தேவையில்லாத கேள்வியக் கேட்டுட்டனா?” என்றாள். அவன் பதில் சொல்லாமல் மறுபடி சிரித்தது அவளை லேசாய் தர்மசங்கடப் படுத்தியது போலிருந்தது. திடீரென அவள் மெளனமாகி கண்ணாடிக்குப் பின் நகரும் கட்டிட வெளிச்சங்களை வெறிக்க ஆரம்பித்தாள். காருக்குள் ஏதோ எஃப்.எம்-மின் RJ மொக்கைகளுக்கப்புறம் ”கண்கள் இரண்டால்..” என்று ஒரு வழியாய் பாட்டைப் போட்டார்கள்.</p>
<p>“ஆகாஷைப் பத்தி நீ எப்படியும் என்கிட்ட கேட்பேன்னு தெரியும் பிரமி! பரவாயில்லயே.. இத்தனை வருஷம் கழிச்சும் நீ அவனை ஞாபகம் வெச்சிருக்கிற.. கிரேட்! யெஸ்.. ஆகாஷை நான் மறுபடி பாத்தேன். ஆனா அவன் என்ன நிலைமைல இருந்தான் தெரியுமா?” என்றான்.</p>
<p>அவன் அப்படிச் சொன்னது அவளை லேசாய் திடுக்கிட வைத்திருந்தது. குழப்பமாய் அவன் முகம் நோக்கினாள். ஏன் அவனுக்கு என்ன ஆயிற்று என்பதுபோல பார்த்தாள். சாலையிலிருந்து கண்களை எடுக்காமல் காரை ஓட்டியபடியே அருண் சொன்னான். ”எப்படி இருந்தவன்.. எப்படியோ ஆயிட்டான்.”</p>
<p>திடீரென்று அவன் அடுக்கிக்கொண்டேபோன சஸ்பென்ஸின் கனம் தாங்காதவளாக பிரமிளா “அருண்.. இன்னும் இருபது நிமிஷத்தில ஏர்போர்ட் வந்துரும். ஃப்ளைட் ஏறி நான் பெங்களூரூக்குப் போயிருவேன். அப்றம் அங்கிருந்து அமெரிக்கா. அங்க போயிட்டேனா அப்றம் ஒரு மாதிரி அங்கயே ஹஸ்பெண்ட், குழந்தைகள்னு செட்டில் ஆயிருவேன்னு தோணுது. அதான் ப்ளான். சரி கிடைச்ச கேப்ல எல்லா ஃப்ரெண்ட்ஸையும் ஒரு தடவை பாத்துட்டு போயிரலாம்னு வந்தேன்.”</p>
<p>கொஞ்சம் நிறுத்திவிட்டு போக்குவரத்தை வேடிக்கை பார்த்தபடி மேலும் தொடர்ந்தாள். ”ஆகாஷையும் உன்னை மாதிரி நல்ல ஃப்ரெண்டாதான் நினைச்சேன். ஆனா அவன் தான் எம் மேல காதல் அது இதுன்னு ரொம்ப ஸீன் போட்டான். அதான் அவனை கண்டுக்காம விட வேண்டியதா போச்சு. இப்போ ஜஸ்ட் லைக் தட் அவனைப் பத்தி விசாரிக்கலாம்னு தோணிச்சு. எங்க இருக்கான் என்ன பண்றான்னு. அதான் கேட்டேன். அவனுக்கு என்ன ஆச்சுன்னு சொல்லு.”</p>
<p>சட்டென்று சாலையைக் கடக்க முயன்ற ஒருவனை ஹார்னால் திட்டிவிட்டு அருண் சொன்னான். “சொல்றேன் பிரமி! அதுக்கு முன்னால என்னோட ஒரு கேள்விக்கு பதில் சொல்லு”</p>
<p>’என்னடா கேள்வி! கேட்டுத்தொலை’ என்கிற மாதிரி அவள் அசுவாரஸ்யமாய் அருணைப் பார்த்தாள்.</p>
<p>அருண் ஸ்டியரிங்கில் தாளம் போட்டபடி “உனக்கு ஆகாஷை ஏன் புடிக்காமப் போச்சு?.” என்றான். “அவன் ரொம்ப நல்ல டைப்பாதானே இருந்தான்?. ரொம்ப அமைதியா அவனுண்டு அவன் வேலையுண்டுன்னு இருப்பான். அவன் பேசினாக் கூட யாருக்கும் கேக்காது. அவ்ளோ ஸாஃப்ட். ஆளு வேற ரொம்ப ஹாண்ட்சம்மா இருப்பான். பொண்ணுங்க எல்லாம் அவன்கிட்ட வழிஞ்சு வழிஞ்சு போய்ப் பேசுவாங்க. ஆனா அவந்தான் பொண்ணுங்கன்னா கொஞ்சம் கூச்சப்படுவான். தங்கமான பையன். எல்லார் கூடவும் ரொம்ப ஃப்ரெண்ட்லியா இருப்பான். உன்னை லவ் பண்றேன்னு உங்கிட்ட சொல்றதுக்கு எவ்ளோ தவிச்சான் தெரியுமா? ஆனா அவன் லக்கி ஃபெல்லோ. நல்லவேளை நீ அவன் காதலை ஏத்துகிகிட்டு அவனுக்கு வாழ்வு குடுக்கலை. இப்ப நீ ரெண்டு மடங்கு குண்டாகி மாமி மாதிரி ஆயிட்டே. தப்பிச்சான் அவன்!” என்று பலமாகச் சிரித்தான்.</p>
<p>பிரமிளா அவனை பொய்யாக முறைத்து “இந்த கிண்டலெல்லாம் வேணாம். நீ மட்டும் என்ன?” என்றாள். அப்புறம் கொஞ்சம் ஸீரியசாக நெற்றியைத் தேய்த்து யோசித்தாள். அப்புறம் சொன்னாள்.</p>
<p>”ஆகாஷ் ரொம்ப நல்லவன்தான். அவன் என்னை லவ் பண்றேன்னு தயங்கித் தயங்கி லெட்டர் எழுதினப்போ அவன் மேல லேசா க்ரஷ் மாதிரி ஏதோ ஒரு எழவு எனக்கும்கூட வந்துச்சு. அது சும்மா லேசாதான். ஆனா அவனோட கூச்ச சுபாவம் இருக்கு பாரு. அதான் பிரச்சனையே. ஐயோ! அதான் என்னை எப்பவும் கடுப்பாக்கற விஷயம். அது என்ன பொம்பள ஆம்பளன்னு யார்கிட்ட பேசறதுன்னாலும் அப்படி தயங்கறது?. பொண்ணுங்க கூட பரவால்ல. நேரா நிமிர்ந்து நின்னுகூட பேசமாட்டான் அவன். ஸ்விம்மிங் பூல்-க்கு போனாக் கூட சட்டையை கழட்டக் கூச்சப்படுவான்-னு ராஜூ ஒரு தடவை சொல்லி கேள்விப்பட்டிருக்கேன். அது தவிர புவர் கம்யூனிகேஷன் ஸ்கில்ஸ். அது எனக்கு ஒத்து வரும்னு தோணல. நான் முழுக்க முழுக்க அப்பா கவனிப்பில வளர்ந்த பொண்ணு. அவரோட கம்பீரம், தோரணையெல்லாம் பாத்துப் பழகின பொண்ணு. எங்கேயும் ரொம்ப போல்டா நின்னு பேசுவார். அவர் கண்ணைப் பாத்துப் பேசறதுக்கு அவர் கிட்ட வேலை செஞ்சவங்க ரொம்ப தயங்குவாங்க. அவ்ளோ பவர்ஃபுல். தன் அப்பா மாதிரி இருக்கிற கணவரைத்தான் பொண்ணுங்க விரும்புவாங்கன்னு எங்கேயோ படிச்சிருக்கேன். நானும் அப்படித்தான் விரும்பினேன். ரொம்ப ப்ராக்டிக்கலா அவர் மாதிரி ஒரு ஆளை ஹஸ்பண்டா கற்பனை பண்ணினேன். அதனால ஆகாஷ் மாதிரி கூச்ச சுபாவமான பசங்க எனக்கு கொஞ்சம் அலர்ஜி. அதெல்லாம் என் கேரக்டருக்கு ஒத்து வராதுன்னு தோணிச்சு. அதுவுமில்லாம பெரிசா இந்த காதல் மேல எல்லாம் பிடிப்பு வர்ரதுக்குள்ள அப்பா ஒரு நல்ல பிஸினஸ் மேனா பாத்து கல்யாணமும் பண்ணி வெச்சுட்டார். அப்றம் அவன் என்ன பண்ணினான்னு எனக்கு நிஜமாவே தெரியாது. தாடி விட்டுட்டு அலைஞ்சானா?”</p>
<p>சில நிமிடங்கள் இருவரும் மெளனமாயிருந்தார்கள். கார் கத்திப்பாரா ஜங்ஷனைக் கடந்து விரையும்போது எஃப் எம்மில் அடுத்த பாடலான “அடியே கொல்ல்ல்லுதே”-வை கொஞ்சம் சத்தம் குறைத்தான். பாடலுடன் லேசாய் விசிலடித்தான்.</p>
<p>“பிரமி.. நீ சொல்றது கொஞ்சம் லாஜிக்கலாதான் இருக்கு. இந்த லவ் சமாச்சாரமெல்லாம் ரெண்டு சைடும் இருக்கவேண்டிய அவசியமில்ல. ஆனா அவன் உன்ன நெனச்சு ரொம்ப உருகினான். ஆனா தாடி வளத்தானான்னு ஞாபகமில்ல. நான்கூட அவன் சார்பா உன்கிட்ட பேசலாம்னு நினைச்சிட்டிருந்தேன். ஆனா ’தோ’ன்னு சுதாரிக்கறதுக்குள்ள நீ மேரேஜ் இன்விடேஷன் நீட்டிட்டே. ஒண்ணும் செய்ய முடியாம போச்சு. ப்ச்! அவன் உடைஞ்சு போயி ரொம்ப அழுதான்னு நினைக்கிறேன்.”</p>
<p>”ஓ” என்றாள். லேசாய் வருத்தம் சூழ்ந்தமாதிரி ஒரு பாவனைக்கு அவள் முகம் மாறியது.</p>
<p>அதை கவனித்துவிட்டு அருண் அவளிடம் கேட்டான். “ஆனா பிரமி.. உங்கிட்ட ஒண்ணு கேக்கறேன். நீ நினைக்கிற மாதிரி எல்லாரும் எல்லா சமயத்திலேயும் ஒரே மாதிரியே மாறாம அப்படியே இருப்பாங்கன்னு நினைக்கிறியா?”</p>
<p>அருணின் கேள்வி புரியாததுபோல புருவங்களை நெரித்துப் பார்த்தாள். அவன் விளக்குகிற தொணியில் மேலும் சொன்னான்.</p>
<p>”அதாவது.. இப்போ நீ நம்ம ஸ்வாதியை எடுத்துக்கோ.. அவளை மாதிரி பயந்தாங்குள்ளியை உலகத்திலேயே பாக்க முடியாது. அவளுக்கு லேடி தெனாலினு பேர் வெச்சுருந்தோம் ஞாபகமிருக்கா? ரோட்ல தனியா போக பயப்படுவா. யாராவது எப்பவும் அவ கூடப் போகணும். பஸ்ல கண்டக்டர்கிட்ட டிக்கெட் கேக்கறதுக்குகூட பயந்துக்குவா. எப்பவும் எல்லாத்துக்கும் பயம்.”</p>
<p>“தெரியும். அவளுக்கு என்ன இப்ப?”</p>
<p>“அவ திடீர்னு பி.ஈ படிக்கணும்னு முடிவு பண்ணி தஞ்சாவூர் இன்ஜினீயரிங் காலேஜ்ல சேந்தா. நாலு வருஷம் ஹாஸ்டல்-ல தங்கிப் படிச்சா. கோயமுத்தூருக்கும் தஞ்சாவூருக்கும் தனியா ட்ராவல் பண்ணுவா. அப்றம் ஒரு ஸாஃப்ட்வேர் கம்பெனில ஜாயின் பண்ணி அங்கிருந்து ஒரு ப்ராஜக்ட்டுக்கு நியூஜெர்ஸி போயி தனியா ஒரு வருஷம் இருந்தா. அப்பா அம்மாவை எதுத்துக்கிட்டு ஒரு கிறிஷ்டியன் பையனை கல்யாணம் பண்ணிக்கிட்டா..”</p>
<p>“ஓ.. ஈஸிட்?. நிஜமாவா? அவளா? எப்ப நடந்தது இதெல்லாம். எனக்குத் தெரியாமயே போச்சு!” மிகுந்த ஆச்சரியத்துடன் பிரமிளா கேட்டாள்.</p>
<p>“அது ஆச்சு நாலஞ்சு வருஷம். நான் என்ன சொல்ல வர்ரேன்னா.. யார் யார் எப்போ எப்படியெல்லாம் மாறுவாங்கன்னு யாராலயும் சொல்ல முடியாது.”</p>
<p>“அப்ப ஆகாஷூம் மாறிட்டான்னு சொல்ல வர்றியா?”</p>
<p>”அஃப்கோர்ஸ்”</p>
<p>மீனம்பாக்கம் விமான நிலையம் வந்துவிட்டிருந்தது. அருண் காரை உள்ளே திருப்பிச் செலுத்தி பார்க்கிங் செய்தான். இன்னும் சம்பாஷணை முடியாததால் இருவரும் காரைவிட்டு இறங்காமல் அப்படியே உட்கார்ந்துகொண்டிருந்தார்கள். தொண்டையை செருமிவிட்டு ஒரு புதிரான புன்னகையுடன்  “ஆகாஷை நான் பாத்தேன்னு சொன்னேன் இல்லையா?. ஆனால் அவனை நான் நேர்ல பாக்கல.” என்றான்.</p>
<p>“ஓ! அப்றம்?.”</p>
<p>“அவன்தான்னு என்னால நம்பவே முடியல. ஆனா அவனை அப்படிப் பாத்து ஷாக் ஆனேன் பாரு. மை காட்! அதுக்கப்புறம் அவனை ஒரு தடவை டி.வில கூட அதே மாதிரி பாத்தேன். எப்படியிருந்தவன் எப்டியாயிட்டான்னு ஒரே ஆச்சரியம்.”</p>
<p>“ஐயா.. சாமி!.. திரும்பத் திரும்ப இதையே சொல்லாத. சஸ்பென்ஸ் போதும். சீக்கிரம் விஷயத்துக்கு வா!. எனக்கு டைம் ஆகுது”</p>
<p>அருண் தயக்க சிரிப்புடன் “ஒரு நாள் ஒரு கடைல போய் இன்னர் வேர் வாங்கினேன். அதோட பேக்கிங் அட்டைப்பெட்டில&#8230;” என்று சொல்லிக்கொண்டே பின் சீட்டிலிருந்து அதை எடுத்தான். “நீ சென்னைக்கு வர்ரேன்னதும் உனக்கு காமிக்கணும்னு எடுத்து வெச்சிருந்தேன். இதப் பாரு இது ஆகாஷ்தான?”</p>
<p>அவன் நீட்டின அட்டைப்பெட்டியின் மேற்புற கவர் டிசைனில் ஆகாஷ் கட்டான வெற்றுடம்புடன் கொஞ்சமும் கூச்சமில்லாமல் இடுப்பில் மட்டும் உள்ளாடை அணிந்து ஸ்டைலாக சிரித்துக் கொண்டிருந்தான்.</p>
Posted in சிறுகதைகள் Tagged: கல்கி, சித்ரன், சிறுகதை, நீரோட்டம் <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/chithran.wordpress.com/184/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/chithran.wordpress.com/184/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/chithran.wordpress.com/184/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/chithran.wordpress.com/184/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/chithran.wordpress.com/184/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/chithran.wordpress.com/184/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/chithran.wordpress.com/184/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/chithran.wordpress.com/184/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/chithran.wordpress.com/184/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/chithran.wordpress.com/184/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=chithran.wordpress.com&blog=235394&post=184&subd=chithran&ref=&feed=1" /></div>]]></content:encoded>
			<wfw:commentRss>http://chithran.wordpress.com/2009/08/01/neerottam/feed/</wfw:commentRss>
		<slash:comments>2</slash:comments>
	
		<media:content url="http://1.gravatar.com/avatar/167f258ca8d521ae05fbc12e6086f005?s=96&#38;d=identicon&#38;r=G" medium="image">
			<media:title type="html">சித்ரன்</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>தனி வலி</title>
		<link>http://chithran.wordpress.com/2009/07/31/thanivali/</link>
		<comments>http://chithran.wordpress.com/2009/07/31/thanivali/#comments</comments>
		<pubDate>Fri, 31 Jul 2009 17:16:52 +0000</pubDate>
		<dc:creator>சித்ரன்</dc:creator>
				<category><![CDATA[சிறுகதைகள்]]></category>

		<guid isPermaLink="false">http://chithran.wordpress.com/?p=227</guid>
		<description><![CDATA[சிறுகதை
தமிழோவியம்.காம் &#8211; ஆகஸ்டு 2009
நிரஞ்சன் அவன் மொபைலை எடுத்து அந்த எஸ்.எம்.எஸ்ஸை மறுபடி திறந்து பார்த்தான். &#8220;உன்னை உடனே பாக்கணும் போல இருக்கு&#8221; என்றொரு வாசகம். அதற்கடுத்த எஸ்.எம்.எஸ்-ஸை படித்தான். அதே வாசகம். அடுத்ததும் அதற்கடுத்ததும் அதே. இதே மாதிரி பதினைந்து இருபது. எல்லாம் வேறு வேறு தினங்களில் அவனுக்கு அனிதா அனுப்பிய செய்திகள்.
உன்னை உடனே பாக்கணும்போல இருக்கு. அந்த வாசகம் அவன் மண்டைக்குள் ஒரு காட்டு வண்டின் அதீத ரீங்காரம்போல இப்போது கேட்க ஆரம்பித்தது. ஏற்கெனவே [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=chithran.wordpress.com&blog=235394&post=227&subd=chithran&ref=&feed=1" />]]></description>
			<content:encoded><![CDATA[<div class='snap_preview'><br /><p><strong><em>சிறுகதை<br />
தமிழோவியம்.காம் &#8211; ஆகஸ்டு 2009</em></strong></p>
<p><em></em>நிரஞ்சன் அவன் மொபைலை எடுத்து அந்த எஸ்.எம்.எஸ்ஸை மறுபடி திறந்து பார்த்தான். &#8220;உன்னை உடனே பாக்கணும் போல இருக்கு&#8221; என்றொரு வாசகம். அதற்கடுத்த எஸ்.எம்.எஸ்-ஸை படித்தான். அதே வாசகம். அடுத்ததும் அதற்கடுத்ததும் அதே. இதே மாதிரி பதினைந்து இருபது. எல்லாம் வேறு வேறு தினங்களில் அவனுக்கு அனிதா அனுப்பிய செய்திகள்.</p>
<p>உன்னை உடனே பாக்கணும்போல இருக்கு. அந்த வாசகம் அவன் மண்டைக்குள் ஒரு காட்டு வண்டின் அதீத ரீங்காரம்போல இப்போது கேட்க ஆரம்பித்தது. ஏற்கெனவே கொஞ்சமாய்க் குடித்திருந்த போதையில் அவனுக்கு மனது பிசைய ஆரம்பித்து கண்ணிமைகளில் சட்டென துளிகள் தளும்பி நிற்க ஒரு விம்மலுக்கான தருணமாய் வெடித்து நின்றது.</p>
<p>பாட்டிலில் மீதியிருந்த விஸ்கியை ஒரே மடக்கில் குடித்துக் காலிசெய்தான். அப்படியே கண்களை மூடி சுவற்றில் சாய்ந்துகொண்டான். அவன் கன்னங்கள் வழியே கண்ணீர் கரகரவென்று மெளனமாய் வழிய லேசாய் உடல் குலுங்கி ஒரு தேம்பல் புறப்பட்டது.</p>
<p>சிவா ஹாலில் சண்டே இண்டியன் படித்துக் கொண்டிருந்தாலும் அவன் கவனம் நிரஞ்சன் மேலேயே இருந்தது. அவன் இப்போதெல்லாம் தனியாகக் குடிக்க ஆரம்பித்துவிட்டான். சிவாவுக்குக் கவலையாக இருந்தது. போதை அதிகமானால் என்ன செய்வான் என்று அவனுக்குத் தெரியும். அவன் நினைத்த மாதிரியே நிரஞ்சன் தள்ளாட்டத்துடன் எழுந்து அறை மூலையிலிருக்கும் பீரோவின் இரு கதவுகளையும் அகலமாய்த் திறந்தான். அதில் அடுக்கிவைக்கப்பட்டிருக்கும் ஏராளமான புடவைகளை சுழலும் கண்களுடன் பார்த்தான். அப்புறம் உள் லாக்கரிலிருந்து அந்த தாலிச் செயினை எடுத்துப் பார்த்தான். எல்லாமே அனிதாவுக்காக வாங்கிச் சேகரித்தது. பிறகு பீரோவிலிருந்து புடவைகளை கலைத்து உருவி மூலைக்கொன்றாய் வெறியுடன் வீச ஆரம்பித்தான்.</p>
<p>&#8220;டேய் நிரஞ்சா!&#8221; என்று பதட்டமாய் ஹாலிலிருந்து குரல் கொடுத்தான் சிவா!</p>
<p>நிரஞ்சன் அந்த தாலிச் செயினை மார்போடு வைத்து அழுத்தி அணைத்து வைத்துக் கொண்டான். அப்போது அவனிடமிருந்து தாங்க முடியாததோர் கதறல் வெளிப்பட்டு அப்படியே பீரோவின் கீழே சரிந்து படுத்தான். இப்போது அவன் உடல் ரொம்பக் குலுங்கியது.</p>
<p>&#8220;டாமிட்&#8221; என்றான் சிவா. அவனுக்கு சர்ரென்று ஒரு கோபம் தலைக்கேறியது. இவனுக்கு எத்தனை எடுத்துச் சொல்லியும் புரியாதா? இன்னும் எத்தனை நாளைக்கு அனிதா அனிதா என்று உருகிக் கொண்டிருப்பான். ஒரு பத்துப் பதினைந்து எஸ்.எம்.எஸ்-களை மொபைலில் வைத்துக் கொண்டு அதை அழிக்காமல் திரும்பத்திரும்ப பைத்தியம் போல் படித்துக் கொண்டு குடித்து அழுது தினம் கதறி&#8230;</p>
<p>அவன் தற்கொலை மாதிரி எதுவும் முடிவுக்குப் போய்விடுவானோ என்ற பயம் மட்டும் சிவாவுக்கு அடிக்கடி எழுந்து பயமுறுத்தியது. இரண்டு மூன்று முறை நடு இரவில் எழுந்து அவன் தூங்குவதை உறுதிப்படுத்திக் கொண்டான். அவனைப் பின் தொடர்ந்து சென்று அவன் விபரீதமாய் எதுவும் செய்கிறானா என்று கண்காணித்தான். அறை நண்பனாய்  இருக்கிற பாவத்துக்கு இதெல்லாம் செய்து தொலைக்க வேண்டியிருந்தது.</p>
<p>&#8220;ஏண்டா இப்டி இருக்க? ப்ளடி இடியட். பி பிராக்டிகல்&#8221; என்று ஒரு நாள் சிவா உணர்ச்சி வசப்பட்டுக் கத்தினான். அன்றைக்கு அவனை ஓங்கி அறைந்துவிடலாமா என்றுகூடத் தோன்றியது.</p>
<p>சிவா தரையில் முதுகு காட்டிக் கொண்டு படுத்திருந்த நிரஞ்சனின் மேல் ஒரு சில நிமிடங்கள் பார்வையை வெறித்தான். அவன் சாப்பிடாமல் அப்படியே தூங்கினாலும் தூங்கிவிடுவான். அவன் இப்போதெல்லாம் ஒழுங்காகச் சாப்பிடுவதுகூட இல்லை.</p>
<p>புத்தகத்தை வைத்துவிட்டு அவன் மெல்ல யோசனையுடன் எழுந்தான். சட்டையை அணிந்து கொண்டு கதவை லேசாக சாத்தி வைத்துவிட்டு வெளியே வந்தான். ’சோ’ என்று மரங்களை பலமாய் அசைத்துக் காற்று வீசியது. ஒரு சின்ன தூறல் மழையை எதிர்பார்க்கலாம் என்று தோன்றியது. ரோடு திருப்பத்தில் திரும்பி ஆச்சி மெஸ்ஸைப் பார்த்து நடந்தான். யோசனை பூராவும் நிரஞ்சனையும் அனிதாவையும் சுற்றி அவன் மூளையில் அடர்ந்து படர்ந்தது.</p>
<p>முட்டாள்கள்!</p>
<p>அனிதா முன்பு கோயமுத்தூரில்தான் இருந்தாள். நிரஞ்சனும் அவளும் எப்படி எங்கே சந்தித்துக் கொண்டு காதல் வலையில் விழுந்து தொலைத்தார்கள் என்ற விவரங்களை ஒரு மலைச்சிகரமேறி உலகை வென்ற சிலாகிப்புடன் ஒரு நாள் நிரஞ்சன் சொன்னான். அது ஒரு சுமாரான ஓடாத சினிமாவின் பிசுத்துப் போன திரைக்கதை மாதிரிதான் தெரிந்தது சிவாவுக்கு. அவனுக்கு இந்த மாதிரி புறாக்கள் சிறகடிக்கிற, சிலீர் என்று அலைகள் எழும்பி ஆர்ப்பரிக்கிற, பூக்கள் மந்தகாசமாய் சிலுப்பிக் கொள்கிற, பட்டாம்பூச்சிகள் படபடக்கிற காதல்களில் சிறிதும் சுவாரஸ்யமோ நம்பிக்கையோ இல்லாமலிருந்தது. ஓரமாய் நின்று பார்த்தோமா, ரசித்தோமா, கிடைத்த சந்தர்ப்பங்களில் கிளர்ச்சியுடன் கடலை போட்டு முடிந்தால் தொட்டுப்பார்த்து&#8230; என்று போய்க் கொண்டிருக்கவேண்டியதுதான் என்பது அவன் கட்சி. நினைந்துருகிக் கவிதையெழுதி, கைகோர்த்துப் படம் பார்த்து, பூங்காக்களில் தோள் சாய்ந்தமர்ந்து புற்களைக் கிள்ளிக்கொண்டிருப்பது அவனைப் பொறுத்த வரையில் நேரவிரயம். ‘ஹைலி இடியாட்டிக்’.</p>
<p>நிரஞ்சன் இதையெல்லாம் செய்து கொண்டு கால் தரையில் படாமல் மிதந்து கொண்டிருந்தான் என்று தெரியும். செல்போனை எடுத்துக் காதில் வைத்தான் என்றால் அவளுடன் நான்கு மணிநேரம் தொடர்ந்து பேசுவான். தினம் காலை 6 மணியிலிருந்து அவனுக்கு அவளிடமிருந்து எஸ்.எம்.எஸ்கள் வர ஆரம்பித்துவிடும். அசட்டுப் பிசட்டாக பரஸ்பரம் எதையாவது அனுப்பிக்கொண்டு இரவு ஒரு மணிக்குத் தூங்கப் போவது வரை மொபைலை நோண்டிக் கொண்டிருப்பான். அறைக்குள் குசுகுசுவென்று நடந்து நடந்து பேசுவான்.</p>
<p>இந்தக் காதல் துள்ளலும் கிளு கிளுப்பும் உருகலுமாய் கிடந்த அவர்களின் தினங்கள் திடீரென்று ஒரு நாள் முடிவுக்கு வந்தது. ட்ரான்ஸ்ஃபர் ஆர்டரைக் கையில் எடுத்துக் கொண்டு அனிதாவின் அப்பா சென்னைக்கு குடி புக லாரி பிடித்தார். கண்ணீர் மல்க அனிதா விடைபெற்றுக் கொண்டாள். &#8220;மிஸ் யூ வெரி மச் டியர். கொஞ்ச நாள் பொறு. வீட்டில் சொல்லி எல்லோரும் ஒத்துக் கொண்டதும் நம் கல்யாணம். டோண்ட் எவர் ஃபர்கெட் மி. லவ் யூ சோ மச். உம்ம்ம்மா.&#8221; என்று செய்தி அனுப்பினாள். நிரஞ்சன் இந்தப் பிரிவை ஜீரணிக்க இயலாமல் உறைந்து போய்க் கிடந்தான். &#8220;லைஃப் இஸ் லைக் தட். பி பிராக்டிகல் மேன்.&#8221; என்று வழக்கமாய் இரைந்தான் சிவா. நிரஞ்சனுக்கு அன்றிரவு சோகமின்றித் தூங்க ஒரு குவாட்டர் தேவைப்பட்டது.</p>
<p>பிறகு திடீரென்று ஒரு நாள் அவளிடமிருந்து வந்த எஸ். எம். எஸ்ஸை சிவாவிடம் காட்டினான். &#8220;உன்னை உடனே பாக்கணும்போல இருக்கு&#8221;</p>
<p>ஒரு நிமிடம் யோசித்து மறு நிமிடமே முடிவு செய்தான். ‘நான் சென்னைக்குப் போய் அனிதாவைப் பார்க்கப் போறேன்’ என்று சடுதியில் இரண்டு நாள் உடைகளை ட்ராவல் பேகில் திணித்துக் கொண்டு ஏதோ ஒரு பஸ்ஸில் கிளம்பினான். இரண்டு நாள் கழித்து நிரம்பி வழிந்த உற்சாகத்துடன் திரும்பிவந்தான். மொபைலில் அவளுடன் மெரீனா பீச்சில் எடுத்துக் கொண்ட புகைப்படங்களைக் காட்டினாள். இரண்டு மெகா பிக்ஸல்களில் மலர்ந்து சிரிக்கும் ஆதர்ச காதலர்கள். &#8220;கூடிய சீக்கிரம் அவ அப்பா அம்மாகிட்ட சொல்லி எப்பாடு பட்டாவது ஓகே வாங்கிருவேன்னு சொல்லியிருக்கா. ஆனா அவ அம்மாவை கன்வின்ஸ் பண்றதுதான் கஷ்டம்கிறா!&#8221; என்றான் ஒரு இரண்டு சதவிகிதக் கவலையுடன்.</p>
<p>ஒரு மாதம் கூட ஆகவில்லை. மறுபடி அவளிடமிருந்து செய்தி வந்தது. ‘உன்னப் பாக்கணும் போல இருக்கு’. நிரஞ்சன் மறுபடியும் பஸ்ஸோ ட்ரெயினோ பிடித்தான். இப்படி மறுபடி மறுபடி இரண்டு வாரங்களுக்கொருமுறை இந்த &#8220;உன்னப் பாக்கணும்போல..&#8221; செய்திகள் வருவதும் அவன் ட்ராவல் பேகை தூக்கிக் கொண்டு சென்னைக்கும் கோவைக்கும் அலைவதும் தொடர்ந்து கொண்டிருந்தன. அப்படியாக அவன் ஒரு பத்துப் பதினைந்து தடவைகள் போய் வந்தும் விட்டான்.</p>
<p>‘இது முட்டாள்தனத்தின் உச்சகட்டம் நண்பா!. நீ பேசாமல் சென்னையிலேயே வேலை தேடி செட்டில் ஆகிக் கொள்வது உத்தமம். அது உனக்கும் அனிதாவுக்கும் ஏன் எனக்கும்கூட நல்லது’ என்று அவனிடம் சொன்னான் சிவா.</p>
<p>போறாக்குறைக்கு ராகவேந்திரா எம்போரியத்துக்கு சிவாவை அழைத்துச் சென்று அவளுக்கு அடிக்கடி எல்லா ரகத்திலும் புடவைகள் வாங்கிக் கொண்டு அதையெல்லாம் அறை மூலை பீரோவில் அடுக்க ஆரம்பித்தான். திருமணத்திற்குப் பிறகு ஒரு நாள் சஸ்பென்ஸாக அவளுக்கு அதையெல்லாம் காட்டவேண்டுமாம். உச்சபட்சமாக ஆலுக்காஸூக்குப் போய் ஒரு தாலிச் சரடு ஒன்றையும் வாங்கி வைத்துக் கொண்டான். அம்மாக்களும் அப்பாக்களும் அவர்கள் காதலை அங்கீகரித்து அவர்கள் தலைகளை ஆட்டுவது மட்டும்தான் பாக்கி. மற்றபடி நிரஞ்சன் அவன் மண வாழ்க்கைக்கான தயார் நிலையில் இருந்தான்.</p>
<p>கொஞ்ச நாட்களில் அனிதாவிடமிருந்து மொபைல் அழைப்புகளும், குறுஞ்செய்திகளும் சோகங்களைத் தாங்கி வந்ததைக் கவலையுடன் சொன்னான் நிரஞ்சன். அவள் அப்பா அம்மாவிடம் தெரிவித்துவிட்டாளாம். அப்பா செய்தியின் உக்கிரத்தில் தளர்ந்துபோய்க் கிடக்கிறார். அம்மா பத்ரகாளி மாதிரி தாண்டவமாடிக் கொண்டிருக்கிறாள். காதல் கீதல் என்று ஏடாகூடாமாய் எதையாவது உளறிக் கொட்டிக் கொண்டிருந்தால் நிச்சயம் என் பிணத்தைத்தான் பார்க்க வேண்டியிருக்கும் என்று உறுமலாய் சொல்லிவிட்டாளாம் அவள் அம்மா. இனிமேல் வேலை மண்ணாங்கட்டிக்கெல்லாம் போகவேண்டாம் என்றும் தடா போட்டுவிட்டார்களாம்.</p>
<p>‘எனக்கு பயமாயிருக்கிறது. என்ன செய்வது?. எனக்கு உன்ன உடனே பாக்கணும்போல இருக்கே! என்று அனிதா வரிசையாய் செய்தியனுப்பிக் கொண்டிருக்க நிரஞ்சன் உறக்கம் கெட்டு அலைந்தான். நடுராத்திரி திடீரென்று எழுந்து பீரோவைத் திறந்து பார்க்க ஆரம்பித்தான். திடீரென்று கிளம்பி சென்னை போனான். வழக்கம்போல் பீச்சோ, பார்க்கோ, தியேட்டரோ என்றில்லாமல் வளசரவாக்கத்தில் அவள் வசிக்கும் தெருவில் தூரத்திலிருந்து அனிதா அவள் வீட்டு மொட்டை மாடியில் நிற்பதைப் பார்த்து ஃபோனில் பேசிவிட்டு திரும்பிவந்தான். &#8220;இப்ப என்னடா செய்யறது சிவா?&#8221; என்றான் கலவரமடைந்த குரலில்.</p>
<p>அவனுக்கு இடுக்கண் களைய உடுக்கையாய் ஆலோசனைகள் எதுவும் என் கைவசம் இல்லையென்றான் சிவா. அப்படியே இருந்தாலும் கொடுப்பதாயில்லை. &#8220;இதெல்லாம் இப்படித்தான் முடியுமென்று முன்பே தெரியும்டா. இந்த லவ் புண்ணாக்குச் செண்டிமெண்ட் எல்லாம் உதறித் தள்ளு. பேசாமல் அந்தப் புடவைகளை சஹாய விலைக்கு விற்றுவிட்டு..&#8221; என்று முடிக்குமுன் சிவாவைக் கன்னத்தில் அறைந்தான் நிரஞ்சன். சிவா திகைத்து நின்றுவிட்டான்.</p>
<p>அப்புறம் ஒருநாள் இரவு அனிதா நிரஞ்சனுக்கு தொலைபேசினாள். பேசும்போது அவன் ரொம்பவும் பதட்டம் அடைந்திருந்தான். &#8220;என்ன அனிதா சொல்றே..&#8221; நீயா இப்படிப் பேசறே..&#8221; &#8220;அப்ப அவ்ளோதானா&#8221; என்கிற வாக்கியங்கள் காதில் விழுந்தன. பேசி முடித்தபின் பாலிவினைல் சேரை ஆத்திரமாய் எட்டி உதைத்தான். பிரமை பிடித்தது போல மொபைலையே வெறித்துப்பார்த்தவாறு நின்றிருந்தான். சிவா கலவரமடைந்து என்ன நிலவரம் என்று லேசாய் விசாரித்ததில் தழுதழுப்பாக விஷயத்தைச் சொன்னான். அனிதாவின் அப்பா இறுதியாக மிகப் பெரிதாக &#8220;நோ&#8221; சொல்லிவிட்டாராம். அம்மாவின் தற்கொலை மிரட்டல் தொடர்கிறதாம். &#8220;ஸோ இது நடக்காது&#8230; அவளை மறந்துடறதுதான் ஒரே வழின்னு சொல்றா..&#8221;</p>
<p>அப்புறம் அவளிடமிருந்து ஃபோன் மற்றும் எஸ்.எம்.எஸ்கள் வருவது சுத்தமாய் நின்று போனது. இவன் கூப்பிட முயற்சித்தபோது அவள் செல் நம்பரை மாற்றியிருந்தாள். அதிர்ச்சியில் பித்துப் பிடித்தவனைப் போலத் திரிந்த நிரஞ்சன் கடைசியில் ஆறுதல் தேடி பாட்டிலைப் பிடித்தான்.</p>
<p>மெஸ்ஸிலிருந்து பரோட்டா குருமா வாங்கிக் கொண்டு தூறலில் நனைந்து திரும்பிவந்தபோது நிரஞ்சன் இறைந்து கிடந்த புடவைகளுக்கிடையே கொஞ்சமாய்த் தெளிந்து உடகார்ந்து மோட்டுவளையை வெறித்துக் கொண்டிருந்தான். சிவா கொடுத்த பரோட்டா பொட்டலத்தைப் பிரித்து மெளனமாய் சாப்பிட்டான். &#8220;சிகரெட் இருக்கா..&#8221; என்று கேட்டு வாங்கிப் பற்றவைத்துக் கொண்டான். பிறகு சிவாவை ஒரு மிகப் பெரிய கலக்கத்துடன் நிமிர்ந்து பார்த்துக் கேட்டான்.</p>
<p>&#8220;ஸாரிடா உன்னை ரொம்ப கஷ்டப்படுத்தறேன் இல்ல?&#8221;  என்றான். கொஞ்சம் நிறுத்தி விழுங்கிவிட்டு &#8220;நாம ஒரேயொருதடவை போய் அனிதாவை எப்படியாவது பார்த்து பேசிட்டு வந்துரலாமா? ப்ளீஸ்!&#8221; கேட்கும் போது அவன் கண்கள் கெஞ்சலாய்ப் பனித்திருந்தது. சிவா அவனது முகத்தை ஊடுருவிப் பார்த்தான். குடித்ததினாலும் அழுததினாலும் அவன் முகம் வெகுவாகக் களைத்திருந்தது.</p>
<p>&#8220;யோசிக்கலாம்.. நீ தூங்கி ரெஸ்ட் எடு.. காலைல பேசலாம்.&#8221; என்றான் சிவா.</p>
<p>அவன் தூங்கியபின் அவனையே கொஞ்ச நேரம் பார்த்துக் கொண்டிருந்தான் சிவா. மனதளவில் இத்தனை கஷ்டப்படுகிற அவனுக்கு ஏன் ஒரு சின்ன ஆறுதலைக்கூடத் தன்னால் தர முடியவில்லை என்று யோசித்தான். அவனுக்கு முதன் முதலாக நிரஞ்சன் மேல் அதீதமாக ஒரு பரிதாபம் எழுவதையும், அவன் மனதின் ஏதோ ஒரு கோடியில் ஒரு சின்ன வலியையும் உணர்ந்தான். அவனுக்குள் சின்னதாக ஒரு இனம் புரியாத குற்ற உணர்வு எழுந்தது.</p>
<p>&#8220;டாமிட். பி பிராக்டிகல்&#8221;  என்று தன் கன்னத்தில் ஒரு முறை அறைந்து கொண்டான்.</p>
Posted in சிறுகதைகள்  <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/chithran.wordpress.com/227/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/chithran.wordpress.com/227/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/chithran.wordpress.com/227/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/chithran.wordpress.com/227/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/chithran.wordpress.com/227/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/chithran.wordpress.com/227/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/chithran.wordpress.com/227/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/chithran.wordpress.com/227/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/chithran.wordpress.com/227/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/chithran.wordpress.com/227/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=chithran.wordpress.com&blog=235394&post=227&subd=chithran&ref=&feed=1" /></div>]]></content:encoded>
			<wfw:commentRss>http://chithran.wordpress.com/2009/07/31/thanivali/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:content url="http://1.gravatar.com/avatar/167f258ca8d521ae05fbc12e6086f005?s=96&#38;d=identicon&#38;r=G" medium="image">
			<media:title type="html">சித்ரன்</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>என்னைப் பற்றி..</title>
		<link>http://chithran.wordpress.com/2008/06/06/aboutme/</link>
		<comments>http://chithran.wordpress.com/2008/06/06/aboutme/#comments</comments>
		<pubDate>Fri, 06 Jun 2008 09:28:45 +0000</pubDate>
		<dc:creator>சித்ரன்</dc:creator>
				<category><![CDATA[Uncategorized]]></category>
		<category><![CDATA[சித்ரன்]]></category>
		<category><![CDATA[சித்ரன்.காம்]]></category>

		<guid isPermaLink="false">http://chithran.wordpress.com/?p=143</guid>
		<description><![CDATA[
1995-ல் ஒரு சிறுகதை மூலமாக கல்கி இதழில் அறிமுகமான பிறகு இலக்கிய, கதையார்வ விதைகள் தூவப்பட்டு தொடர்ந்து சிறுகதைகள் எழுத ஆரம்பித்தேன். இது வரை சுமார் முப்பது சிறுகதைகள் கல்கி, ஆனந்த விகடன், மங்கையர் மலர், அமுத சுரபி போன்ற பத்திரிக்கைகளிலும், தமிழோவியம், செந்தமிழ் போன்ற இணையப் பத்திரிக்கைகளிலும் வெளியாகியுள்ளன. கல்கியில் ஒரு குறுந்தொடரும், தமிழோவியம்.காம்-ல் ஒரு தொடர்கதையும் எழுதியுள்ளேன். என் எழுத்துக்களை ஊக்குவித்து வளர்த்தியதில் கல்கி இதழுக்கு ஒரு முக்கிய பங்கு உண்டு. 2004-ல் வலைப் [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=chithran.wordpress.com&blog=235394&post=143&subd=chithran&ref=&feed=1" />]]></description>
			<content:encoded><![CDATA[<div class='snap_preview'><br /><p><img class="alignleft size-full wp-image-172" title="சித்ரன்" src="http://img.photobucket.com/albums/v727/chithran/rag_75x75.jpg" alt="சித்ரன்" width="75" height="75" /></p>
<p>1995-ல் ஒரு சிறுகதை மூலமாக கல்கி இதழில் அறிமுகமான பிறகு இலக்கிய, கதையார்வ விதைகள் தூவப்பட்டு தொடர்ந்து சிறுகதைகள் எழுத ஆரம்பித்தேன். இது வரை சுமார் முப்பது சிறுகதைகள் கல்கி, ஆனந்த விகடன், மங்கையர் மலர், அமுத சுரபி போன்ற பத்திரிக்கைகளிலும், தமிழோவியம், செந்தமிழ் போன்ற இணையப் பத்திரிக்கைகளிலும் வெளியாகியுள்ளன. கல்கியில் ஒரு குறுந்தொடரும், தமிழோவியம்.காம்-ல் ஒரு தொடர்கதையும் எழுதியுள்ளேன். என் எழுத்துக்களை ஊக்குவித்து வளர்த்தியதில் கல்கி இதழுக்கு ஒரு முக்கிய பங்கு உண்டு. 2004-ல் வலைப் பதிவுகள் பக்கம் என் கவனம் திரும்பியதில் &#8216;<a href="http://chithran.blogspot.com"><strong>புள்ளி</strong></a>’ என்ற வலைப்பக்கத்திலும், எழுத்தாளர் சத்யராஜ்குமாருடன் இணைந்து “<a href="http://inru.wordpress.com/category/சித்ரன்"><strong>இன்று</strong></a>” என்ற பக்கத்திலும் வலைப் பதிவுகள் எழுதி வருகிறேன். கிழக்கு பதிப்பக வெளியீடாக ’மனதில் உனது ஆதிக்கம்’ என்கிற எனது சிறுகதைத் தொகுப்பு ஒன்றும் வெளிவந்துள்ளது. இங்கே என் சிறுகதைகள் சிலவற்றையும், மற்ற படைப்புகளையும் படிக்கலாம்.<br />
<strong>மின்னஞ்சல் :</strong> <a href="mailto:chithranji@gmail.com">chithranji@gmail.com</a></p>
<img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/categories/chithran.wordpress.com/143/" /> <img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/tags/chithran.wordpress.com/143/" /> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/chithran.wordpress.com/143/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/chithran.wordpress.com/143/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/chithran.wordpress.com/143/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/chithran.wordpress.com/143/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/chithran.wordpress.com/143/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/chithran.wordpress.com/143/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/chithran.wordpress.com/143/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/chithran.wordpress.com/143/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/chithran.wordpress.com/143/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/chithran.wordpress.com/143/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=chithran.wordpress.com&blog=235394&post=143&subd=chithran&ref=&feed=1" /></div>]]></content:encoded>
			<wfw:commentRss>http://chithran.wordpress.com/2008/06/06/aboutme/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:content url="http://1.gravatar.com/avatar/167f258ca8d521ae05fbc12e6086f005?s=96&#38;d=identicon&#38;r=G" medium="image">
			<media:title type="html">சித்ரன்</media:title>
		</media:content>

		<media:content url="http://img.photobucket.com/albums/v727/chithran/rag_75x75.jpg" medium="image">
			<media:title type="html">சித்ரன்</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>லிஃப்ட்</title>
		<link>http://chithran.wordpress.com/2007/08/28/lift/</link>
		<comments>http://chithran.wordpress.com/2007/08/28/lift/#comments</comments>
		<pubDate>Mon, 27 Aug 2007 20:33:28 +0000</pubDate>
		<dc:creator>சித்ரன்</dc:creator>
				<category><![CDATA[Uncategorized]]></category>
		<category><![CDATA[கல்கி]]></category>
		<category><![CDATA[சித்ரன்]]></category>
		<category><![CDATA[சிறுகதைகள்]]></category>

		<guid isPermaLink="false">http://chithran.wordpress.com/2007/08/28/%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%83%e0%ae%aa%e0%af%8d%e0%ae%9f%e0%af%8d/</guid>
		<description><![CDATA[சத்யானந்த் அபார்ட்மெண்ட்ஸின் லிஃப்டுக்குள்தான் நான் மாட்டிக் கொண்டது. எல்லாம் ஒரு ஐந்தாயிரம் ரூபாயின் பொருட்டு. அதை என்னிடம் கடன் வாங்கியவன் அந்த அப்பார்மெண்ட்ஸின் நான்காவது மாடியில் இருந்தான். அருந்ததியின் குடும்ப வகையில் ஏதோ ஒரு தூரத்து உறவு அவன். இருந்தாலும் கொடுத்த பணத்தை வாங்காமல் விட்டுவிடுவதா என்று அவள் விவாதத்தை முன் வைத்துத்தான் இங்கு வந்ததே.<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=chithran.wordpress.com&blog=235394&post=21&subd=chithran&ref=&feed=1" />]]></description>
			<content:encoded><![CDATA[<div class='snap_preview'><br /><p>சத்யானந்த் அபார்ட்மெண்ட்ஸின் லிஃப்டுக்குள்தான் நான் மாட்டிக் கொண்டது. எல்லாம் ஒரு ஐந்தாயிரம் ரூபாயின் பொருட்டு. அதை என்னிடம் கடன் வாங்கியவன் அந்த அப்பார்மெண்ட்ஸின் நான்காவது மாடியில் இருந்தான். அருந்ததியின் குடும்ப வகையில் ஏதோ ஒரு தூரத்து உறவு அவன். இருந்தாலும் கொடுத்த பணத்தை வாங்காமல் விட்டுவிடுவதா என்று அவள் விவாதத்தை முன் வைத்துத்தான் இங்கு வந்ததே.</p>
<p>போகும்போது கீழ்த்தளத்தில் ஓரிருவர் லிஃப்ட் பொத்தானை அமுக்கிவிட்டுக் காத்திருக்க, நான் அதை உதாசீனம் செய்துவிட்டுப் படிவழியாகவே ஏறினேன். ஒவ்வொரு தளத்துக்கும் செல்லும் படிகளின் எண்ணிக்கையைச் சற்றுக் கூடுதலாகவே வைத்திருக்கிறார்களோ என்று தோன்றியது பிறகுதான். லேசாய் மூச்சிரைக்கவுமம், கால்கடுக்கவும் செய்ய, மூன்றாவது தளம் வருவதற்குள்ளாகவே மூன்று நாளாகிவிட்ட மாதிரி ஒரு ஆயாசம்.</p>
<p>நாலாவதில் அந்த ஆள் வீட்டிலேயே இருந்தான். நான் வருவது தொரிந்திருந்தால் பின் சாளரம் வழியாகக் கயிறுகட்டிக் குதித்தோடியிருப்பான். கதவு திறந்து எதிர்பாராமல் என்னைப் பார்த்தும் அதிர்வுகளையெல்லாம் அழித்து மறைத்துவிட்டு ‘வாங்க’ என்றான், ரொம்ப நாள் கழித்து வந்த விருந்தினரை வரவேற்பதைப் போல, நிர்ப்பந்தமாய் தன் முகத்தை ஒளிரவிட்டுக் கொண்டான். காசு கொடுத்தவன் கொஞ்சிவிட்டுப் போக வரமாட்டானன் என்று அவனுக்குத் தெரியாதா என்ன? இருந்தாலும் இலங்கை வேந்தன் மாதிரி அவன் கலங்கியதாய்த் தொரியவில்லை.</p>
<p>“கலா, காப்பி கொண்டா&#8230;” என்றான்.</p>
<p>ஐயயோ! ஒரு காபி குடித்ததற்காக இன்னும் ஒரு மூன்று மாதத்துக்கு என்னுடைய பணத்தைத் திரும்பப் பெற அலைய வேண்டியதிருக்கும்.</p>
<p>“காபியெல்லாம் வேண்டாம். காசுதான் வேணும்.” கறாரில் முக்கியெடுத்த தடித்த குரல் என்னிடமிருந்து வெளிப்பட்டது. அப்புறம் கேள்விகள். பதில்கள். சமாதானங்கள். சமாளிப்புகள். பணக் கஷ்டம். மனக் கஷ்டம். ‘என் மேல் நம்பிக்கையில்லையா?’ என்றான் “மூன்று மாதங்களுக்கு முன் இருந்தது” என்றேன்.</p>
<p>சில மன்றாடல்களுக்குப் பிறகு புதன்கிழமை தருவதாக ஒப்புக் கொண்டான். புதன்கிழமை பணம் வராவிட்டால் நான் உன் வீட்டிலேயே வந்து குடியிருக்க நேரிடும் என்று மிரட்டிவிட்டு எழுந்தேன்.</p>
<p>எந்த புதன்கிழமை என்று கேட்காமல்விட்டு விட்டோம் என்று திரும்பும்போது தோன்றியது. அவனுடன் விவாதித்ததில் மிக்க களைப்பாகிவிட்டது. மிக நீண்டு இறங்கும் படிகளை நினைத்ததும் மேலும் களைப்பாகிவிட்டது.</p>
<p>காரிடார் காலியாய் இருந்தது. படிகளைப் புறக்கணிக்க முடிவு செய்து பொத்தானை அமுக்கினேன். ஒரு மகா முனகலுடன் லிஃப்ட் மேலேறி வந்து வாய் பிளந்து நின்றது.</p>
<p>நான் அதனுள் நுழையும்போது ஏதேச்சையாய் மணி பார்த்தேன். 8.59 P.M. உள்ளே வரிசையாய் இருந்த பொத்தான்களில் எழுத்துக்கள் அழிந்திருந்தன. நான் ஒருவிதமாய் அனுமானித்து ‘G’யை அமுக்கினேன். மறுபடி கதவுகள் சாத்திக் கொள்ள ஒரு பிரபஞ்சப் பயணம் மாதிரி ’ம்ம்ம்’என்று அது கீழிறங்கியது. கீழிறங்குகிறதா அல்லது மேலே ஏறுகிறதா என்று ஒருகணம் குழப்பமாயிருந்தது. மேலே மின்னணுத் திரையில் 3 என்று எழுத்து தெரிகிறது. அப்படியெனில் இறங்குமுகம்தான். கவனித்துக் கொண்டிருக்கும்போதே அது 2 ஆக மாற, எதிர்பாராத ஒரு கணத்தில் ஒரு குலுங்கலுடன் லிஃப்ட் நின்றது.</p>
<p>தலைக்கு மேலே குண்டு பல்ப் சட்டென்று அணைய, திடீர் இருள். திரை மறைந்திருந்தது. மின்விசிறி வேகம் குறைந்து நிற்கப் போவதை கடக் கடக் என்ற சப்தம் உணர்த்தியது. இது என்ன? மின் தடையா? மின் வெட்டா? நான் எந்தத் தளத்திலிருக்கிறேன்? இப்போது நான் என்ன செய்ய வேண்டும்? ஏதேனும் நிகழக் காத்திருப்பதா? உதவிக்கு யாரையாவது விளிப்பதா?</p>
<p>லிஃப்ட் அமைதி காத்தது. ஆட்டமில்லை, அசைவில்லை, பிரபஞ்சப் பேரமைதி. எதிர்பாராத இந்த நிகழ்வில் நான் உடல் பரபரத்து நின்றிருப்பதை சலனங்களற்றுப் பார்த்துக் கொண்டிருந்தது அது. தன் இந்தச் செய்கைக்கு எந்த விளக்கமும் தர அது தயாரில்லாமலிருந்தது.</p>
<p>இறந்தவருக்கு அஞ்சலி செய்பவன் மாதிரி ஒரு நிமிடம் மெளன அனுஷ்டிப்பில் நின்றேன். பதற்றப்படாமல் யோசிக்கலாம். இதிலிருந்து வெளியேறுவதற்கான சாத்திய கூறுகள் என்னென்ன? அந்தரத்தில் மாட்டிக் கொண்டு விட்டேன் என்ற இத்தனை நேரத்தில் நன்றாக புரிந்துவிட்ட பிறகு, வெறுமனே கால் மாற்றி நின்று கொண்டிருப்பதில் என்ன பயன்? இந்த லிஃப்ட் மறுபடி இதோ இப்போது தரையிறங்கிவிடும் என்ற என் எதிர்பார்ப்பிற்கு நான் நிர்ணயித்திருந்த கால அளவு தீர்த்து போனபின் இனி நான்தான் எதையாவது முயற்சிக்க வேண்டும் என்ற உணர்வு மீண்டது.</p>
<p>கையைத் திரும்பி கடிகாரத்தை உற்றுப் பார்த்தேன் ரேடியம் தொட்ட முட்களின் உபயம். 9.07. கிட்டத்தட்ட எட்டு நிமிடங்கள் ஆகிவிட்டது. நான் இதற்கு அகப்பட்டுக்கொண்டு.</p>
<p>தடதடவென்று கதவைத் தட்டினேன். “ஹலோ&#8230;ஓ&#8230;ஓ&#8230;” என்று மூன்று நான்கு முறை கூவினேன். யாருக்காவது கேட்குமா என்று சந்தேகமாகத்தான் இருந்தது. அதுவும் என் அபயக்குரல் எட்ட வேண்டிய திசை பற்றித் தீர்மானமில்லாமல் இருந்தது. மீண்டும் மீண்டும் கூப்பிட்டுக் கொண்டேயிருந்தேன்.</p>
<p>நதிமூலம் மாதிரி நெற்றியிலிருந்து வேர்வை கசியத்தொடங்கியது. குப்பென்று அறைக்குள் வெப்பம் தாக்கியது. புகைபிடிக்கலாமா என்று யோசித்தேன். காற்று வரவும் போகவும் வழியில்லாத இதற்குள் அது உசிதமல்ல. மேலும் ‘புகை பிடிக்காதீர்கள்’ அறிவிப்பை லிஃப்டுக்குள் பார்த்ததாகவும் ஞாபகம். ஆ! என்னிடம் தீப்பெட்டி இருக்கிறது. பாக்கெட்டிலிருந்து அதை எடுத்தேன். ஒரு குச்சி உரசி எழுந்த கந்தக நெடி மூக்கில் நுழைந்து சுவாச திணறலை ஏற்படுத்தியது. ஆடி அசைந்த வெளிச்சத்தில் எதற்கும் இருக்கட்டும் என்று எல்லாப் பொத்தான்களையும் ஒருமுறை தட்டிப் பார்த்தேன். உலகம் ஸ்தம்பித்து நின்றிருந்தது. தீக்குச்சி அணைந்து இருள் அவசரமாக அந்த அறை தனது என்பதுபோல் மறுபடியும் நிறைத்துக் கொண்டது.</p>
<p>மின்சாரம் போயிருந்தால் என்ன? ஜெனரேட்டர் இருக்க வேண்டுமே? அது ஏன் இன்னும் இயக்கப்படவில்லை? மறுபடி கதவை ‘தட்தட்’ என்று தட்டினேன். இந்த முறை பதிலுக்கு ஈனமான குரலொன்று கேட்டது. ஒரு குரல். இரு குரல். பல குரல்கள். நன்றி! நான் இந்தப் பொறிக்குள் ஒரு எலியைப் போல மாட்டிக் கொண்டிருப்பதை சக மனிதர்கள் எப்படியோ அறிந்துகொண்டு விட்டார்கள் என்று உறுதிப்பட்டு விட்டது. நான் நிச்சயம் காப்பாற்றப்பட்டு விடுவேன்.</p>
<p>பொங்கும் வியர்வையைத் துடைத்து ஈரமாகிவிட்டது கர்சீப். அப்படி இப்படியாக ஒரு அரை மணி நேரம் ஓடிவிட்டது என்ன ஆயிற்று இதற்கு? முழுசாய் இரையை விழுங்கிக் கொண்டு கிடக்கிற மலைப்பாம்பு மாதிரி அசையாமல் கிடக்கிறது. அதன் வயிற்றுக்குள் பாதி இறந்த நான் துருவப் பிரதேசப் பனிபோல என் இயக்கங்கள் உறைய ஆரம்பித்திருந்தன.</p>
<p>எப்படியாவது இதிலிருந்து விடுபடும்வரை ஹென்றி ஷாரியர் மாதிரி இதற்குள் நடந்து கொண்டிருக்கலாம் என்று தோன்றியது. வெறும் ஆறுக்கு நாலு அடி அளவில் இருக்கிற இந்தப் பெட்டிக்குள் இரண்டு எட்டு வைக்கக்கூட இடமில்லை. பிறகு அதை எப்படி நடத்தல் என்று சொல்ல முடியும்? ஆகவே, நான் நகர்ந்தேன். ஒரு நான்கு முறை இப்படியும் அப்படியுமாக. பட்டாம்பூச்சி நாவலில் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்ட ஹென்றி ஷாரியர் இப்பபோது ஞாபகத்துக்கு வந்ததும் தவிர்க்க இயலாத எண்ணமாயிருந்தது. இரு வருடங்கள் ஒரு சிறு அறையில் எப்படித் தனித்துக் கழித்தான் என்று ஆச்சரியம் விரிந்து நின்றது. ஒரு நாள் இதற்குள் நான் இருந்தாலே மனச்சிதைவு அடைந்துவிடுவேன் என்று தோன்றியது.</p>
<p>எதற்காக இந்த நேரம் பார்த்து இந்த இடத்துக்கு வந்தேன்? கடன்காரனின் பொருட்டு. சிரமம் பார்க்காமல் வரும்போது படி வழியாகவே இறங்கியிருக்கலாம். இதற்குள் ஏறித் தொலைய நேரிட்டது எதனால்? கடந்து கொண்டிருக்கிற நம்பிக்கையின் பிடியைத் தளர்த்திக் கொண்டிருந்தது. இன்று நான் கீழிறங்கி வீடு போய்ச் சேர்வேன் என்று தோன்றவில்லை. இத்தனைநேரமாகியும் காணோமே என்று அருந்ததி குழந்தையை மடியில் இருத்திக் கொண்டு வாசற்படியிலேயே கலவரமாய் காத்துக் கொண்டிருப்பாள். கம்பெனிக்கு ரமேஷூக்கும் போன் செய்து கேட்டிருப்பான். ‘இங்கே வரலையே’ அல்லது அவர் அப்பவே கிளம்பிட்டாறே என்ற பதில்களில் அவள் பதற்றம் மேலும் கூடியிருக்கும்.</p>
<p>கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்துக்கும் மேலான என் வாழ்நாளில் உன்னதப் பொழுதை இந்த லிஃப்ட் களவாடிவிட்டது அநியாயமாகப்பட்டது. இந்த நேரத்தை எப்படி நான் வழந்ததாய்க் கணக்கில் எடுத்துக் கொள்வது இவ்வுலகின் கவனங்களிலிருந்து நான் தொலைந்து போய் விட்டானோ? ஒரு தொல்பொருள் ஆராய்ச்சியாளாரின் சிரத்தையோடு என்னை யாராவது கண்டெடுப்பார்களா?</p>
<p>மனத்திலும் உடலிலும் ஒரு போர்வையாகக் கவிந்து கொண்டது சோர்வு. ஏதேதோ எண்ணங்கள் கோர்வையற்று தோன்றி மறைந்தன. நேரமாக ஆக கவலையின் கனம் அதிகா¢த்துக் கொண்டே போனது. கேட்கும் சிறுசிறு சப்தங்களைக் காது உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருந்தது. நிறைய சலசலப்புக் கேட்டது. அதல பாதளங்களைதத் தாண்டி மனிதர்கள் நடமாடுகிற வெளியில் என் குரல் கேட்டுவிட்டது என்றே நினைக்கிறேன். ஒரு போர்க்கால நடவடிக்கை மாதிரி என்னை உயிருடன் மீட்டெடுக்க ஆயத்தங்கள் நிச்சயம் நடைபெற்றுக் கொண்டிருக்கத்தான் வேண்டும்.</p>
<p>நாளை மறுநாள் ஐஸ்வர்யாவுக்கு ஸ்கூல் அட்மிஷன். எலெக்ட்ரிசிடி பில் இன்னும் கட்டவில்லை. சீனுவுக்கு கல்யாண ரிசப்ஷன் 27-ஆம் தேதி மாலை. சொத்தைப் பல்பிடுங்க டாக்டர். ராஜ்குமார் அடுத்த வாரம் வரச் சொல்லியிருக்கிறார். நாலாவது மாடி கடனாளியிடமிருந்து ஐந்தாயிரம் வரப்பெற வேண்டும்.</p>
<p>இதற்கெல்லாம் முன்பாக நான் இந்தக் கன செவ்வகத்துக்குள் மடிந்துபோய் விடுவேனா என்ன?</p>
<p>நடக்கென்ற சப்தத்துடன் லிஃப்ட் குலுங்கியது அதிர்ந்து கண் திறந்தேன். தலைமேல் குண்டு பல்ப் எரிய, மின்விசிறி சுழன்று குளிர்காற்று இறங்கியது. சுதாரித்து எழ ஒரு கணமேனும் தராமல் வயிற்றில் ஒரு சுழற்சியை ஏற்படுத்திவிட்டு ஜிவ்வென்று கீழிறங்கியது லிஃப்ட் மறுபடி ஒளிர்ந்த மின்னணுத் திரையில் இறங்குமுகமாக எண்கள் மாறியது. தரைத்தளம் வந்து லிஃப்ட் நின்று&#8230;</p>
<p>‘அவ்வளவுதான் வெளியே போ’ என்கிற மாதிரி கதவுகள் அகலத் திறந்தன. சட்டை, பனியனுடன் வியர்வையில் உடலோடு ஒட்டியிருந்தது. காதோரம் ஒரு துளி வழிந்து தரை தட்டியது. குளுமைக் காற்று முகம் தாக்கியது.</p>
<p>வெளியே நிறைய தலைகள் தென்பட்டன. ‘நல்வரவு’ என்றான் எவனோ சிரித்தபடி. மத்திய சிறையிலிருந்து விடுதலையானவன் போல் லிஃப்ட்டுக்குள்ளிருந்து வெளி வரும் என்னை அயல் கிரகவாசியைப் பார்ப்பதுபோல் பார்த்து, ஒரு அயல்நாட்டுத் தூதுவருக்கான வரவேற்பைக் கொடுத்தார்கள். மணி பார்த்தேன். 11.06 பிரமை பிடித்த மாதிரி இருந்தது. நான் இயல்பு நிலைக்குத் திரும்பிவிட்டதை சுற்றியிருப்பவர்கள் எனக்கு அறிவித்தபடி இருந்தார்கள்.</p>
<p>முழுசாய் நூற்றி இருபத்தேழு நிமிடங்கள். இதோ நான் காப்பாற்றப்பட்டு விட்டேன். மின்சாரம் போகவில்லையாம். ‘லிஃப்டின் இயக்க கோளாறு’ என்று யாரோ சொன்னார்கள்.</p>
<p>யார் யாரோ என்னென்னமோ பேசினார்கள். அந்தக் கூட்டத்தில் கடனாளியின் முகமும் தெரிந்தது. என்னைப் பார்த்ததும் எல்லோரையும் விலக்கி முன் வந்தான்.</p>
<p>“நானும் கொஞ்சம் கீழே போய்விட்டு வரலாம்னு லிஃப்ட்டுக்கு வந்தேன் சார் லிஃப்ட் மேல வரலை அப்புறம் லேசா சந்தேகம் வந்துச்சு. எங்கேயோ மாட்டிக்கிச்சுன்னு &#8211; இதுக்கு முன்னாடி ஒரு தடவை ஆயிருக்கு இது மாதிரி. ஆனா இப்ப மாட்டிக்கிட்டது. நீங்கதான்னு தெரியலை. எப்படியோ கஷ்டப்பட்டு எறக்கிட்டோம். மணி பதினொண்ணே கால் ஆயிடுச்சு. நான் வேணா வீட்ல ட்ராப் பண்ணட்டுங்களா?” என்றான்.</p>
<p>“இல்ல. வேண்டாங்க நான் ஆட்டோ புடிச்சு போய்க்கறேன். எல்லோருக்கும் ரொம்ப நன்றி&#8230;”</p>
<p>நான் விடுவிடுவென்று கொலாப்ஸிபின் கேட்டைக் கடந்து வெளியே வந்தேன். எனக்கென்னமோ அவன் புதன்கிழமை பணத்தைத் திருப்பி தருவான் என்று தோன்றவில்லை.</p>
<img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/categories/chithran.wordpress.com/21/" /> <img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/tags/chithran.wordpress.com/21/" /> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/chithran.wordpress.com/21/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/chithran.wordpress.com/21/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/chithran.wordpress.com/21/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/chithran.wordpress.com/21/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/chithran.wordpress.com/21/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/chithran.wordpress.com/21/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/chithran.wordpress.com/21/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/chithran.wordpress.com/21/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/chithran.wordpress.com/21/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/chithran.wordpress.com/21/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=chithran.wordpress.com&blog=235394&post=21&subd=chithran&ref=&feed=1" /></div>]]></content:encoded>
			<wfw:commentRss>http://chithran.wordpress.com/2007/08/28/lift/feed/</wfw:commentRss>
		<slash:comments>5</slash:comments>
	
		<media:content url="http://1.gravatar.com/avatar/167f258ca8d521ae05fbc12e6086f005?s=96&#38;d=identicon&#38;r=G" medium="image">
			<media:title type="html">சித்ரன்</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>இன்னுமொரு ஞாபகம்</title>
		<link>http://chithran.wordpress.com/2007/08/28/innumorugnabagam/</link>
		<comments>http://chithran.wordpress.com/2007/08/28/innumorugnabagam/#comments</comments>
		<pubDate>Mon, 27 Aug 2007 20:30:24 +0000</pubDate>
		<dc:creator>சித்ரன்</dc:creator>
				<category><![CDATA[Uncategorized]]></category>
		<category><![CDATA[கல்கி]]></category>
		<category><![CDATA[சித்ரன்]]></category>
		<category><![CDATA[சிறுகதைகள்]]></category>

		<guid isPermaLink="false">http://chithran.wordpress.com/2007/08/28/%e0%ae%87%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%81%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b0%e0%af%81-%e0%ae%9e%e0%ae%be%e0%ae%aa%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d/</guid>
		<description><![CDATA[கல்கி : மே 1995
பஸ் கோவையை நெருங்கிக் கொண்டிருந்தது. அரைகுறை தூக்கம் கலைந்து விழித்தேன். இடுப்பெல்லாம் வலித்தது. சென்னையிலிருந்து கோயமுத்தூருக்கு பன்னிரண்டு மணி நேரப் பயணமாகிவிட்டது. நிமிர்ந்து உட்கார்ந்தேன். சின்னக் கொட்டாவி ஒன்று நிதானமாய் ரிலீஸ் ஆனது.
கண்கள் அனிச்சையாய்த் திரும்பி என் வரிசை பக்கவாட்டு ஸீட்டில் அந்தப் பெண்ணைப் தேடின. ‘மடையா! அவள்தான் சேலத்திலேயே இறங்கிவிட்டாளே!’
யோசனைக் குதிரை பின்னோக்கி-அந்தப் பெண்ணை நோக்கி ஓடியது.
என்ன ஒரு அழகான பெண்?!! சென்னையில் தனியாய் ஏறினாள் வழியனுப்ப யாராவது வந்திருந்தார்களா என்று [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=chithran.wordpress.com&blog=235394&post=20&subd=chithran&ref=&feed=1" />]]></description>
			<content:encoded><![CDATA[<div class='snap_preview'><br /><p><strong><em>கல்கி : மே 1995</em></strong></p>
<p>பஸ் கோவையை நெருங்கிக் கொண்டிருந்தது. அரைகுறை தூக்கம் கலைந்து விழித்தேன். இடுப்பெல்லாம் வலித்தது. சென்னையிலிருந்து கோயமுத்தூருக்கு பன்னிரண்டு மணி நேரப் பயணமாகிவிட்டது. நிமிர்ந்து உட்கார்ந்தேன். சின்னக் கொட்டாவி ஒன்று நிதானமாய் ரிலீஸ் ஆனது.</p>
<p>கண்கள் அனிச்சையாய்த் திரும்பி என் வரிசை பக்கவாட்டு ஸீட்டில் அந்தப் பெண்ணைப் தேடின. ‘மடையா! அவள்தான் சேலத்திலேயே இறங்கிவிட்டாளே!’</p>
<p>யோசனைக் குதிரை பின்னோக்கி-அந்தப் பெண்ணை நோக்கி ஓடியது.</p>
<p>என்ன ஒரு அழகான பெண்?!! சென்னையில் தனியாய் ஏறினாள் வழியனுப்ப யாராவது வந்திருந்தார்களா என்று கவனிக்கவில்லை. அவள் முகத்தில் ஒரு தனி செளந்தர்யம். என் வரிசை ஸீட்டில் அவள் உட்கார்ந்ததற்கு எனது போன ஜென்மத்து புண்ணியங்கள் காரணமாயிருக்கலாம்.</p>
<p>ஆனால் அவள் இடதுகால்!? பஸ் படிகளில் ஏறும்போது அவள் நிறையவே சிரமபட்டதாய் உணர்ந்தேன். ஊனம் மெதுவாய் விந்தி விந்தி நடந்து ஸீட்டுக்கு வந்தாள். ஒரு கையில் சின்ன சூட்கேஸ். அழகைக் கொடுத்த இயற்கை, காலில் குறையையும் கொடுத்திருக்கிறது. திடீரென்று அந்தப் பெண்ணை எனக்கு ரொம்ப பிடித்துப் போனது.</p>
<p>என் தலைக்கு மேலுள்ள லக்கேஜ் கேரியரில் அவள் சூட்கேஸை வைக்க உதவினேன். புன்னகைத்தாள். அவளோடு பேச வேண்டும் என்றெழுந்த ஆவலைக் கட்டுபடுத்திக் கொண்டேன்.</p>
<p>சேலத்தில் அவள் இறங்கிக் கொண்டாள். அவளைப் பற்றின யோசனைகள் மனத்தைவிட்டு இறங்காமல் கோவை வரை பிடிவாதமாய் வந்துவிட்டன. ஊனமுற்ற அந்த அழகான பெண்ணிற்கு எந்த மாதிரி எதிர்காலம் காத்திருக்கிறது? சிந்தனைகள் வட்டம் அடித்தன.</p>
<p>“பஸ் ஸ்டாண்டு கேட்டது யாரு? இறங்குங்க&#8230;”</p>
<p>கண்டக்டர் கத்தினார். அதற்குள்ளாகவா கோயமுத்தூர் வந்துவிட்டது?</p>
<p>நான் வேகமாய் எழுந்து, லக்கேஜ் கேரியரிலிருந்து சரக்கென்று என் சூட்கேஜை உருவிக் கொண்டு இறங்கினேன்.</p>
<p>ராம் நகரில் என் அறைக்கு வந்து, பல் விளக்குவதற்காக பேஸ்ட் எடுக்க சூட்கேஸைத் திறந்தவன் திகைத்து நின்றேன்.</p>
<p>‘மைகாட்!’</p>
<p>அந்த சூட்கேஸீக்குள் இரண்டு புடைவைகள், ரவிக்கைகள் ஒரு சுரிதார் மற்றும் உள்ளாடை எல்லாம் தென்பட&#8230;</p>
<p>இது என் சூட்கேஸ் இல்லை!</p>
<p>அதிர்சியிலிருந்து மீளாமல் அதை மூடி மேல்புறம் பார்த்தேன். ‘எஸ். நீலா’ என்று ஆங்கிலத்தில் பெயர் தாங்கின ஸ்டிக்கர் ஒட்டியிருந்தது.</p>
<p>உண்மை உறைத்தது. உடலில் கலவரம் தொற்றிக் கொண்டது. சூட்கேஸ் கைமாறிவிட்டது. எப்படி? எப்படி? யோசிக்க ஆரம்பித்தேன். எங்கே வைத்திருந்தேன். அதை! தலைக்கு மேலேயே லக்கேஜ் கேரியரில். அங்கிருந்துதான் திரும்ப எடுத்&#8230; ஆம்! அந்தப் பெண்! அவன் சூட்கேஸையும் நான்தானே வாங்கி அதே இடத்தில் வைத்தேன். அதுவும் கூட இதே மாதிரிதானே இருந்தது. இல்லை. அதுதான் இது. என்னுடையது மாதிரியே. நிறம், உருவம், அளவு எல்லாம்.</p>
<p>என்னுடைய சூட்கேஸை அவள் எடுத்துக் கொண்டு போயிருப்பாள். ‘அந்த சூட்கேஸீக்குள் என்னுடைய அந்த..! ‘கடவுளே!’ என் அடிவயிற்றில் ஒரு பயம் மெல்ல கிளர்ந்தெழுந்து கொண்டிருப்பதை உணர்ந்தேன்.</p>
<p>ஒருவேளை அவள் ஏதாவது ஃப்ராடு கேஸோ? ச்சே! இருக்காது. அந்தக் குழந்தை முகத்தைப் பார்த்தால்; அப்படித் தெரியவில்லை.</p>
<p>எஸ். நீலா!</p>
<p>இதுதான் அவள் பெயரா? இந்த நீலாவை நான் எங்கே போய்த் தேடுவேன்? நான் அந்தப் பெட்டியை மறுபடி திறந்து புரட்டி அட்ரஸ் எதுவும் கிடைக்குமா என்று பார்த்தேன். வெறும் துணிகள். கோல்கேட் பேஸ்ட் பிரஷ் மற்றும் பெண்கள் சமாசாரங்கள். இரண்டு புத்தகங்கள் ‘மைக்ரோஸாஃப்ட் சி’, ‘கிவ் அண்ட்டேக்’ஒரு சின்ன பர்ஸ். இருநூற்றிப் பன்னிரண்டு ரூபாய் ஐம்பது பைசா அதில் இருந்தது. ஒரு காலி இன்லேண்ட் லெட்டர். அட்ரஸ் மட்டும் இல்லை.</p>
<p>ஆனால் என் சூட்கேஸீக்குள் இருக்கிற பொருட்கள்? வெறும் பொருட்களா அவை? உடைகள் ஷேவிங் செட்டை விடுங்கள். மற்றதெல்லாம்..</p>
<p>என் ஐம்பத்து மூன்று கவிதைகள் தாங்கிய ஸ்பைரல் போட்ட ஒரு குயர் நோட்டு. வித்யாவின் கழுத்து மணி மாலையிலிருந்து அறுந்து விழுந்த மணிகள், கடிதங்கள், மேலும் கடிதங்கள், சாலை விபத்தொன்றில் பலியான என் உயிர் நண்பன் எனக்கெழுதிய ஒரே ஒரு கடிதம், கையில் பொம்மை பஸ் வைத்துக் கொண்டு போஸ் கொடுத்த என் ஒரே குழந்தை ஃபோட்டோ, அழகான பூனைக் குட்டிகள் படம் போட்ட &#8211; குழந்தை ராஜி என் பிறந்த நாளுக்கு பரிசளித்த &#8211; போல்ஸ்கா நாட்டு ஸ்டாம்புகள், என் ஐடென்டிடி கார்டு, தாத்தா ஞாபகமாய் வைத்திருந்த பாக்கு சீவுகிற கத்தி, ஜீவா பா¢சளித்த தி. ஜானகிராமன் புத்தகங்கள், என் சிறுகதை வெளியான ஆனந்த விகடன் புத்தகத்தின் ஒரே பிரதி. பேனாக்கள், கண்ணாடி க்ளாஸ், ஒரு காய்ந்த பெல்ட், ஆடியோ கேஸட், வளையல் துண்டு, மயிலிறகு, என் டயரி, அதற்குள் நான் மிக முயற்சித்துப் பெற்ற அருமை வித்யாவின் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ&#8230; இன்னும் சில பொருட்கள்.</p>
<p>என்னைப் பொறுத்தவரை இது எல்லாமே பொக்கிஷங்கள் குப்பை என்று எதுவும் கிடையாது. கேட்பதற்குச் சிரிப்பாய்க்கூட இருக்கும். ‘சுத்த கிறுக்கனா இருக்க’ என்று சிலர் சொல்லியிருக்கிறார்கள். ஆனால் இந்தப்பொருட்கள் எல்லாமே ஒவ்வொருவருடைய நினைவுகளைத் தன்னுள் அடக்கிக் கொண்டு கிடக்கிற பொக்கிஷங்கள். எப்போதாவது எடுத்துப் பார்க்கும்போது கிடைக்கும் அந்த இனிமையான பழைய நினைவுகளுக்காய் ஒவ்வொன்றையும் பொக்கிஷமாய் பத்திரப்படுத்தியிருந்தேன். ஒவ்வொரு பொருளும் ஒவ்வொருவர் ஞாபகம்.</p>
<p>போச்சு! எல்லாம் போச்சு!</p>
<p>லீவில் ஊருக்குப் போன நான் இவை எல்லாவற்றையும் எப்போதும் என்னுடனேயே வைத்திருக்கலாமே என்று சூட்கேஸீக்குள் அடைத்துக் கொண்டு வந்தேன்.</p>
<p>நிமிடத்தில் எல்லாவற்றையும் இழக்க வேண்டியதாய்ப் போயிற்று. பிரமை பிடித்த மாதிரி இருந்தது. அழுகைகூட வரும்போல் தோன்றியது. உணர்வுகளைச் சிரமப்பட்டு அடக்கினேன். ஜீரணிக்க முடிகிற இழப்பாய்த் தோன்றவில்லை இது.</p>
<p>வெளியே வந்து ட்ராவல் ஏஜென்ஸிக்கு நம்பிக்கை இல்லாமல் ஃபோன் பண்ணிப் பார்த்தேன். நினைத்த மாதிரியே அவள் அட்ரஸ் எதுவும் கிடைக்கவில்லை. பேர் சொல்லிவிட்டுப் பணம் கட்டினால் கோயமுத்தூர் கொண்டு வந்து இறக்கி விடுகிறார்கள். ஸீட் நம்பர்கள் எழுதின லிஸ்டில் பெயருக்கு நேரே ஒரு கையெழுத்து. அட்ரஸ் எங்கேயிருந்து கிடைக்கும்? என்ன ட்ராவல் ஏஜென்ஸி நடத்துகிறார்களோ!</p>
<p>ஏன் சூட்கேஸில் என் ஐடென்டிடி கார்டு இருக்கிறதே. அதில் என் அட்ரஸ்!</p>
<p>லேசாய் எனக்கு உயிரும் நம்பிக்கையும் மீண்டும் வந்தது. அவள் பெட்டி என்னிடமிருக்க, அவள் என்னை நிச்சயம் தொடர்பு கொண்டுதான் ஆக வேண்டும். அதுவரை காத்திருக்கலாம்.</p>
<p>ஒரு வாரம் மகா சோகாய்க் கழிந்தது. என் பெட்டி இனி எனக்குக் கிடைக்காது என்று நான் தொண்ணூற்றைந்து சதவீதம் முடிவு செய்துவிட்டேன். அவளின் ‘மைக்ரோசாஃப்ட் சி’ யைப் புரட்டினேன். ஒரு மண்ணும் பு¡¢யவில்லை. ‘கிவ் அண்ட் டேக்’கை நடுநடுவில் படித்துப் பார்த்தேன்.</p>
<p>அடுத்தவாரம் அந்தப் பார்சல் வந்தது. ஆச்சா¢யம். ஏக குஷியானேன். என்னுடைய பொக்கிஷப் பெட்டி பாதுகாப்பாய் வந்து சேர்ந்திருந்தது. கூரியர் சர்வீஸ் வாழ்க! நான் சந்தோஷத்தால் வானத்துக்கும் பூமிக்கும் குதித்தேன்.</p>
<p>சூட்கேஸை அவசரமாய்த் திறந்தேன். நான் வைத்தபடி இல்லாமல் எல்லாம் கலைந்திருந்தன. ஆனால் எல்லாமே இருந்தன. சாய்ந்த கையெழுத்தில் ஒரு கடிதமும், பெயர் பார்த்தேன். நீலா. எஸ்.நீலா. அவளேதான். நிதானமாய்ப் படித்தேன்.</p>
<p>‘டியர் மிஸ்டர் பிரபாகர்&#8230;</p>
<p>இதோ உங்கள் உடைமை. (உங்களுடையதுதானென்று நினைக்கிறேன்.) அதுபோல் என்னுடையது உங்களிடம் இருக்குமென்று நம்புகிறேன். எல்லாவற்றிற்கும் காரணம் நான்தான். என் கவனக்குறைவு. மன்னிப்பீர்களா?</p>
<p>உங்கள் பெட்டியை அது பூட்டப்படாததால் திறந்து குடைந்தும் பார்த்தேன் -உங்கள் அனுமதியில்லாமல் மறுபடியும் மன்னிக்கவும். பெட்டியின் விஷயங்கள் ரொம்ப சுவாரஸ்யமாயிருந்தன. நீங்கள் எந்த மாதிரி ஆள்? பிடிப்படவில்லை.</p>
<p>கடிதங்களைப் படிக்க மனம் வரவில்லை. நாகரீகம் காரணம். கவிதை நோட்டை மூன்று மணி நேரம் செலவழித்துப் பொறுமையாய்ப் படித்தேன். அத்தனையும் வாவ்! எனக்கு ரொம்பப் பிடித்தது. நீங்கள் ஒரு கலைஞன் என்று புரிகிறது.</p>
<p>ஃபோட்டோவில் சிரிக்கும் அந்தக் கறுப்புக் குழந்தை யார்? ரொம்ப ஸ்வீட் ஐடென்டிடி கார்டின் ஃபோட்டோவில் நீங்கள் சுமார்தான்.</p>
<p>ஆனந்த விகடன் புத்தகத்திற்கு எதற்கு அட்டையெல்லாம் போட்டு வைத்திருக்கிறீர்கள்? அதுவும் பழைய்&#8230;ய புத்தகம். நான் உங்களின் தி. ஜானகிராமன் புத்தகங்களை ஆழ்ந்து படித்துக் கொண்டிருக்கும்போது ரூம்மேட் பானு அந்த சூட்டுக்காயை நிலத்தில் தேய்த்து, ‘சுள்’ளென்று சூடு வைத்த இடம் இன்னும் வலிக்கிறது. அந்த ஆடியோ கேஸட் கேட்க முடியவில்லை. பிழைத்தீர்கள்!</p>
<p>மேலும் வளையல் துண்டு, மயிலிறகு, மோதிரம், மணிமாலை&#8230; ஃபோட்டோவில் அந்தப் பெண். யார் அது? உங்கள் மனசுக்குள் இருப்பவளா? தப்பாய்க் கேட்டிருந்தால் ஸாரி&#8230;! கத்தி எதற்கு?</p>
<p>என் பெயர் நீலா, சென்னையில் தனியாய் பஸ் ஏறிச் சேலத்தில் இறங்கின கொஞ்சூண்டு அழகான பெண். கவனித்திருப்பீர்கள். (வேறொன்றையும் கவனித்திருக்கலாம்) சேலத்தில் ஹாஸ்டலில் தங்கிப் படிப்பு. முகவரி கீழே&#8230;</p>
<p>என் பெட்டி ப்ளீஸ்&#8230;</p>
<p>கீழே முகவரி இருந்தது. யப்பா! ஒன்றை விட்டுவைக்கவில்லை. புரட்டி எடுத்திருக்கிறாள். எனக்கு அதனால் கோபம் வரவில்லை. அவள் ஆர்வத்தை நினைத்து புன்னகை வந்தது.</p>
<p>இன்டரஸ்டிங் கேர்ள். இவளைப் போய் ஃப்ராடு என்றெல்லாம் நினைத்தேனே! ரொம்ப வெளிப்படையான டைப் போலும்.</p>
<p>‘நீலா’ என்று ஒருமுறை சொல்லிப் பார்த்துக்கொண்டேன். அவள் முகம் முழுதாய் நினைவுக்கு வராமல் கலைந்து கலைந்து போனது. ஒரே தடவை பார்த்தது. என் பொக்கிஷத்தைத் திருப்பி என்னிடமே ஒப்படைத்தவள்.</p>
<p>நீலாவின் சூட்கேஸை ஒழுங்குப்படுத்தினேன். என் மதிப்பான ஒரே கவிதை நோட்டை எடுத்தேன். அதன் உள் அட்டையில், ‘நீலாவுக்கு&#8230; நன்றியுடன் ப்ரபாகர்’ என்றெழுதி அதையும் அவள் சூட்கேஸில் வைத்தேன். ரொம்ப சந்தோஷமாயிருந்தது. சூட்கேஸை ரொம்ப சிரத்தையாய் பார்சல் செய்து அவள் முகவரி எழுதி அனுப்பி வைத்தேன்.</p>
<p>அப்புறம்&#8230; அவளின் அந்தக் கடிதத்தை அழகாய் மடித்து.. என் மற்ற பொக்கிஷங்களோடு அதையும் சேர்த்து பத்திரப்படுத்தி வைத்திருக்கிறேன். மற்றொரு ஞாபகச் சின்னமாய்!</p>
<img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/categories/chithran.wordpress.com/20/" /> <img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/tags/chithran.wordpress.com/20/" /> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/chithran.wordpress.com/20/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/chithran.wordpress.com/20/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/chithran.wordpress.com/20/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/chithran.wordpress.com/20/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/chithran.wordpress.com/20/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/chithran.wordpress.com/20/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/chithran.wordpress.com/20/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/chithran.wordpress.com/20/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/chithran.wordpress.com/20/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/chithran.wordpress.com/20/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=chithran.wordpress.com&blog=235394&post=20&subd=chithran&ref=&feed=1" /></div>]]></content:encoded>
			<wfw:commentRss>http://chithran.wordpress.com/2007/08/28/innumorugnabagam/feed/</wfw:commentRss>
		<slash:comments>1</slash:comments>
	
		<media:content url="http://1.gravatar.com/avatar/167f258ca8d521ae05fbc12e6086f005?s=96&#38;d=identicon&#38;r=G" medium="image">
			<media:title type="html">சித்ரன்</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>ஜனனம்</title>
		<link>http://chithran.wordpress.com/2007/08/28/jananam/</link>
		<comments>http://chithran.wordpress.com/2007/08/28/jananam/#comments</comments>
		<pubDate>Mon, 27 Aug 2007 20:26:37 +0000</pubDate>
		<dc:creator>சித்ரன்</dc:creator>
				<category><![CDATA[Uncategorized]]></category>
		<category><![CDATA[சித்ரன்]]></category>
		<category><![CDATA[சிறுகதைகள்]]></category>
		<category><![CDATA[மரத்தடி டாட் காம்]]></category>

		<guid isPermaLink="false">http://chithran.wordpress.com/2007/08/28/%e0%ae%9c%e0%ae%a9%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d/</guid>
		<description><![CDATA[மரத்தடி டாட் காம் - 2004
&#8220;ம்மா..&#8221; என்று அடி வயிற்றின் வேதனையடங்கிய குரல் எழுந்து அடங்கியது. பெரிதாய் வீங்கின வயிறுடன் நான்கு கால்களையும் பரப்பிக்கொண்டு மிரண்ட விழிகளுடன் அது தரையில் கிடந்தது. பலவீனமான மூச்சில் வயிறு ஏறி இறங்கிக்கொண்டிருந்தது. வைக்கோலின் உதவியால் தற்காலிகமாக மென்மையூட்டப்பட்ட மண் தரையில் &#8220;புஸ்ஸ்&#8221; என்ற பெருமூச்சுடன் அது புரள முயன்று தோற்றது.
அந்தப் பசுமாட்டைச் சுற்றி கவலையும் பதட்டமும் கலந்த முகத்தோடு எல்லோரும் நின்று கொண்டிருந்தோம். அமுதாவின் முகம் இதற்கு முன் எப்போதும் பார்த்திராத [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=chithran.wordpress.com&blog=235394&post=19&subd=chithran&ref=&feed=1" />]]></description>
			<content:encoded><![CDATA[<div class='snap_preview'><br /><p><em><strong>மரத்தடி டாட் காம் - 2004</strong></em></p>
<p>&#8220;ம்மா..&#8221; என்று அடி வயிற்றின் வேதனையடங்கிய குரல் எழுந்து அடங்கியது. பெரிதாய் வீங்கின வயிறுடன் நான்கு கால்களையும் பரப்பிக்கொண்டு மிரண்ட விழிகளுடன் அது தரையில் கிடந்தது. பலவீனமான மூச்சில் வயிறு ஏறி இறங்கிக்கொண்டிருந்தது. வைக்கோலின் உதவியால் தற்காலிகமாக மென்மையூட்டப்பட்ட மண் தரையில் &#8220;புஸ்ஸ்&#8221; என்ற பெருமூச்சுடன் அது புரள முயன்று தோற்றது.</p>
<p>அந்தப் பசுமாட்டைச் சுற்றி கவலையும் பதட்டமும் கலந்த முகத்தோடு எல்லோரும் நின்று கொண்டிருந்தோம். அமுதாவின் முகம் இதற்கு முன் எப்போதும் பார்த்திராத மிரட்சியுடன் இருந்தது. &#8220;லட்சுமிக்கு ஒண்ணும் ஆகாதுல்ல&#8221; என்றாள் டாக்டரைப் பார்த்து. தன் பெயர் உச்சரிக்கப்பட்டதில் ஒருமுறை பசுமாட்டின் உடல் குலுங்கி அடங்கியது. அமுதா அதன் தலையை வாஞ்சையாய்த் தடவிக் கொடுத்தாள்.</p>
<p>வெடர்னரி டாக்டர் நெற்றியைச் சுருக்கி மிகத் தீவிரமான யோசனையுடன் அமுதாவை நிமிர்ந்து பார்த்தார். அவர் வாயிலிருந்து வரும் செய்திக்காய் எல்லோரும் பரபரப்பாய் காத்திருக்க, பசுவின் வயிற்றினுள் பரிசோதிக்கக் கையுறையாய் பயன்படுத்திய பாலிதீன் கவரைக் கழற்றி ஓரமாய்ப்போட்டார். அவர் சட்டை வியர்வையில் ஒட்டியிருந்தது.</p>
<p>&#8220;மாட்டு வயத்துல கன்னு தல திரும்பிருக்கு. காலும் தலையும் இடம் மாறியிருக்கு&#8221; என்றார் மெல்லிய குரலில்.</p>
<p>அமுதாவின் கண்களில் இதுவரை அணையிட்டு நின்றிருந்த நீர் &#8220;சர்&#8221; என்று கன்னத்தில் கோடிட்டுக் கீழிறங்கியது. அழுகையை அடக்கப் பார்த்த பிரயத்தனத்தில் &#8220;ம்க்&#8221; என்று சப்தம் வந்தது அவளிடமிருந்து.</p>
<p>&#8220;கன்னு போடற நேரம் ஊருக்குப் போகவேண்டாம்னு அப்பவே சொன்னேன் கேட்டியா&#8221; என்றாள் அமுதா அழுகையினூடே அவள் அம்மாவைப் பார்த்து. சேலை முந்தானையால் வாயைப் பொத்தி மாடிப்படியோரம் செய்வதறியாது நின்றிருந்த அவளின் அம்மா &#8220;யாரு நெனச்சா&#8230; இப்படியெல்லாம் ஆகும்னு&#8230; என்னை எதுக்குடி குத்தம் சொல்ற?&#8221; என்றாள்.</p>
<p>தரையில் லட்சுமி என்கிற அந்தப் பசுமாடு மறுபடி புரண்டெழ முயற்சித்தது. மறுபடியும் ஒரு வேதனையடங்கிய &#8220;ம்மா&#8221;. அந்தி மயங்கத் தொடங்கின அந்த நேரத்தின் நிசப்தத்தில் அந்த சப்தம் கொஞ்சம் கலவரமூட்டிக் கலைந்தது..</p>
<p>&#8220;இங்க பாருங்க&#8230; பேசிக்கிட்டுருக்கிற நேரமில்ல இது. வயித்துக்குள்ள கன்னு உசிரோட இருக்கறதுக்கு சான்ஸ் கம்மி. உடனே எப்படியாவது வெளிய எடுக்கணும். இல்லைன்னா மாடும் போய்ச் சேந்துடும். கொஞ்சம் சிரமப்பட வேண்டிவரும். ஒரு ஆறேழு ஆம்பளைங்க உதவிக்கு வேணும். அப்பறம் நெறைய சுடுதண்ணி, வைக்கோலு, கொஞ்சம் கயிறு, நாலு எமர்ஜென்ஸி லேம்ப், நாலஞ்சு சாக்கு எல்லாம் ரெடி பண்ணுங்க. எதுக்கால இருக்கிற ஃபேக்டரி கிரவுண்டுக்கு எப்படியாச்சும் பசுமாட்ட கூட்டிட்டுப் போயிடுங்க. நைட்டு ஒரு மணி ரெண்டு மணி ஆகலாம். நான் போயிட்டு ஒரு ஒம்பது மணிபோல வரேன். கூடவே எனக்கு லுங்கி, துண்டு வேணும் எடுத்து வைங்க&#8221;</p>
<p>டாக்டர் சுவரோர பைப்பில் கை கழுவிக்கொண்டார். அமுதா கொடியிலிருந்து உருவின துண்டை நீட்ட அதில் துடைத்துக் கொண்டார்.</p>
<p>&#8220;எல்லாரும் தைரியமா இருங்க. முயற்சி பண்ணிப் பாக்கலாம்.&#8221;</p>
<p>டாக்டர் தன் பழைய லேம்ரட்டா ஸ்கூட்டரில் ஏறி தெரு முனையில் மறைந்த பிறகு நாங்கள் எல்லோரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டிருந்தோம்.</p>
<p>தூக்கலாய் மூத்திர-சாணி நாற்றமடிக்கும் அந்த தொழுவத்தில், நிலைமையின் தீவிரம் உணராத வேறு இரண்டு மாடுகள் கவலையற்று அசைபோட்டுக்கொண்டிருந்தன. ஓரத்தில் என்றோ உடைந்து உபயோகமற்றுப் போயிருந்த ஒரு ஆட்டுக்கல்லின் மேலமர்ந்து அமுதா தேம்பி அழ ஆரம்பித்திருந்தாள். எனக்கு என்ன சொல்வதென்று புரியவில்லையெனினும் என்ன செய்ய வேண்டுமென்று புரிந்தது. தோளில் மிதமாய் கனக்கிற டிபன் பாக்ஸ் மற்றும் அலுவலகக் காகிதங்கள் அடங்கிய லெதர் பேக் நான் இன்னும் வீட்டுக்குப் போகவில்லையென்பதை உணர்த்தியது. &#8220;இங்க பாரு அமுதா&#8230; சும்மா கவலப்பட்டு அழுதுகிட்டிருக்காத. வேணுங்கறதை ஏற்பாடு பண்ணு. நான் வீட்டுக்குப்போயி கைகால் மூஞ்சி கழுவிட்டு வந்துர்ரேன்.&#8221;</p>
<p>இதுவரை வியந்தோ, அதிர்ந்தோ, கவலையுற்றோ, வேடிக்கை பார்த்தோ நின்றிருந்த இரண்டு மூன்று பேர் தன்னிலை உணர்ந்து அமுதாவைத் தேற்ற முயற்சிக்க நான் மெல்ல நகர்ந்தேன். வீட்டுப் படியேறி செருப்பைக் கழற்றுமுன்..&#8221;என்னங்க அமுதா வீட்டு&#8230;&#8221; என்று ஆரம்பித்த ஹேமாவை &#8220;பாத்துட்டுத்தான் வர்றேன்&#8221; என்று நிறுத்தினேன். &#8220;பாவம்ல அந்த மாடு&#8221; என்றாள் நிறுத்தாமல். ஆபிஸில் என்றுமிருக்கும் டென்ஷன், பஸ் இறங்கி நடந்து வந்த களைப்பு, வந்ததும் கேள்விப்பட நேர்ந்த இந்த விஷயம் எல்லாம் சேர்ந்து வரவேற்பரை பிளாஸ்டிக் சேரில் என்னைக் கொண்டுபோய் அசதியாய் உட்கார்த்தி வைத்தது. இரண்டு மூன்று நிமிடங்கள் கண்மூடி அப்படியே சாய்ந்திருந்தேன். ஒரு நிலையில் நிற்காமல் யோசனைகள் ஓடின.</p>
<p>இரண்டு வீடுகள் தள்ளி இருக்கிற அமுதா வீட்டில்தான் தினசரி பால் வாங்குவது. மூன்று கறவை மாடுகள் இருக்கின்றன. இந்தத் தெருவில் நிறைய பேருக்கு இங்கிருந்துதான் பால் போகிறது. அது தவிர தேவைக்கேற்ப சாணி, வரட்டி என காசு கொடுத்து வாங்கிக் கொண்டு போகவும் ஆட்கள் வரும். ஒரு நகரத்தின் கான்க்ரீட் கட்டிடங்கள் அடங்கிய இந்தத் தெருவுக்கு மத்தியில் மாடுகள் அடங்கிய அவர்களின் வீடு கொஞ்சம் பிரதானமான வித்தியாசம்தான். மற்றவருக்கு என் வீடிருக்கிற பகுதியின் அடையாளம் சொல்வதற்குக்கூட அது வசதியாகவே இருந்தது.</p>
<p>தினமும் வழக்கமாய் பால் கறந்த கையோடு அமுதா அளந்து எடுத்துவந்து தந்துவிட்டுபோவாள். சில தினங்கள் ஹேமா போய் வாங்கி வருவாள். ஏதாவது ஓரிரு நாட்கள் அபூர்வமாய் நான் போவேன். அப்படி இரண்டு நாட்கள் முன்பு போனபோதுதான் அமுதா வீட்டுத் தொழுவத்தில் அந்த வெள்ளை சினைமாட்டைப் பார்த்தேன். அதன் பார்வையும், நிற்க முடியாமல் கால் மாற்றி நின்றிருந்த அதன் அவஸ்தை நிலையும், மாடுகளோடு எனக்கு எந்தப் பரிச்சயமும் இல்லையெனினும் ஏதோ ஒரு அசாதாரணத்தை உணர்த்தியது போலிருந்தது. &#8220;அல்லாரும் ஊருக்குப் போயிருக்காங்க&#8221; என்றபடி பால் நிரம்பின எவர்சில்வர் சொம்பை என்னிடம் நீட்டின அமுதாவின் அண்ணனிடம் மாட்டைப் பற்றி விசாரித்தபோது &#8220;எல்லாம் அமுதா வந்து பாத்துக்கும்&#8221; என்று சொல்லிவிட்டு சாவதானமாய் பீடி பற்ற வைத்துக் கொண்டான். அப்போதே கவனித்திருந்தால் இப்படி விபரீதமாகாமல் தடுத்திருக்கலாமோ?</p>
<p>ஒன்பது மணிக்கு நான் எழுந்துபோய் கைகால் முகம் அலம்பிக் கொண்டு வந்தேன். ஒரு மிகப் பெரிய செயலுக்கான ஆயத்தம் போல நான் எனக்குள் உணர்ந்தேன். என்றாலும் மாட்டு டாக்டர் வந்து என்ன செய்யப் போகிறார் என்று என்ன யோசித்தும் சரியாய் புரிபடவில்லை. ஹேமாவிடம் இரவு டிபன் வேண்டாமென்றேன். &#8220;கண்டிப்பா அவங்களுக்கு ஏதாச்சும் ஹெல்ப் பண்ணியாகணும். சரியா ஆம்பளை துணையில்லாத வீடு அது. பாவம். பால் வியாபாரத்துல இருந்து வீட்டு நிர்வாகம் வரைக்கும் எல்லா வேலையையும் அமுதா ஒத்தை ஆளா இருந்து பண்ணுது. பிரயோஜனமில்லாத அண்ணங்காரன். அப்பங்காரன். நான் போயிட்டு வர்றேன். நைட்டு ரெண்டு மணி ஆகுங்கிறாங்க. நீ கதவத் தாப்பாள் போட்டுட்டுப் படுத்துக்க.&#8221;</p>
<p>சட்டை பட்டனைப் போட்டுக் கொண்டு வெளியே வந்தேன். அமுதா வீட்டை நோக்கிப் போய்க் கொண்டிருந்த பக்கத்து வீட்டு நடராஜன் கையில் எமர்ஜென்ஸி விளக்கு இருந்தது. என்னைப் பார்த்ததும் சிரித்தார். &#8220;அங்கதானே?&#8230;வாங்க இன்னைக்கு நமக்கு நிறைய ஜோலி இருக்கும் போல. இந்தப் புள்ள அமுதா என்னடான்னா மாட்டைப் பாத்து பாத்து ஓ..ஓன்னு அழுது. ரொம்பப் பாசந்தான். இருந்தாலும்&#8230; அட.. கொஞ்சமாச்சும் தெகிரியம் வேணுமில்ல..&#8221; என்றார்.</p>
<p>பேசிக்கொண்டே தொழுவத்தை அடைந்தபோது பசுமாட்டை அங்கே காணவில்லை. எதிர்புற ஃபேக்டரி கிரவுண்டுக்கு அதை இடம் பெயர்த்தி விட்டார்கள் போல. வெளியே டாக்டரின் லேம்ப்ரட்டா நின்றிருந்தது. திறந்திருந்த கேட்டை தள்ளிக்கொண்டு கிரவுண்டுக்கு வந்தபோது ஒரு சின்னக்கும்பலின் நடுவே கால் மடக்கிச் சாய்ந்திருந்தது பசுமாடு. பாலண்ணன் நின்றிருந்தார். மளிகைக்கடை ஆறுச்சாமி இருந்தார். மேலும் சிவில் இன்ஜினியர் சுந்தரராஜன். கேபிள் டி.விக்காரர். இப்படி நிறைபேர் அங்கே உதவிக்குக் கூடியிருந்தார்கள் என்பது ஆச்சரியமான விஷயமொன்றுமில்லை. எல்லாம் அமுதாவின் குணத்துக்கும் முகத்துக்கும்தான். ஒரு நிகழ்ச்சியின் தொடக்கத்துக்கு முன்பான கசகசப்புபோல எல்லாரும் கூடி நின்று பேசிக்கொண்டிருந்தது காற்றில் கரைந்து தெளிவில்லாமல் காதுகளை வந்தடைந்தது. டாக்டர் தன் பேண்ட் சட்டையிலிருந்து லுங்கி பனியனுக்கு மாறியிருந்தார். போதுமான அளவு எமர்ஜென்ஸி லேம்புகள் கிடைக்காததால் வெளிச்சம் போதாமல் இருண்டிருந்தது அந்தப் பிரதேசம்.</p>
<p>கும்பலில் இருந்த எதிர்வீட்டு அழகப்பன் ஓரிரு நிமிட யோசனைக்குப் பிறகு வீட்டுக்கு ஓடினார். திரும்பி வரும்போது அவர் கையில் இரு பட்டிகளுடன் கூடிய ட்யூப் லைட்டுகளும் நிறைய ஒயர்களும் இருந்தன. அவர் பதினைந்து வயது மகன் கூடவே பெரிய ஸ்டூல் ஒன்றையும் எடுத்துவர.. பத்து நிமிடத்தில் பக்கத்துக்கூரையில் அவைகளை சேர்த்துக்கட்டி ஃபாக்டரி ஓனரிடம் போனில் அனுமதிபெற்று கனெக்ஷன் கொடுத்தார்கள். பளீர் வெண்மை வெளிச்சத்தில் இருள் விலகி பசுவின் அவஸ்தை இப்போது தெளிவாய்த் தெரிந்தது. நான் ஏறியிறங்கும் அதன் வயிற்றையே பார்த்துக்கொண்டிருந்தேன்.</p>
<p>&#8220;நீ இருக்கியா.. போறீயா?&#8221; என்றார் டாக்டர் அமுதாவிடம்.</p>
<p>&#8220;இருக்கேன்&#8221;.</p>
<p>&#8220;சரி நேரமாகுது ஆரம்பிக்கலாம். சிரமம் பாக்காம எல்லாரும் கொஞ்சம் ஹெல்ப் பண்ணுங்க&#8221; சொல்லிவிட்டு டாக்டர் மறுபடி பாலிதீன் கவர்களை கையுறைகளாய் அணிந்துகொண்டார். ஆங்காங்கே நின்றிருந்தவர்கள் பேச்சை நிறுத்திவிட்டு பசுமாட்டினருகே கூட ஆரம்பிக்க.. டாக்டர் ஒருமுறை மாட்டைத் தொட்டு வணங்கினார். அமுதாவை ஒருமுறை திரும்பிப் பார்த்துக்கொண்டார்.</p>
<p>பிறகு நிறைய வைக்கோல் பரப்பியிருந்த தரைக்கு பசுவை நகர்த்தலாம் என்றார். ஆனால் மாட்டை அதற்குமேல் நகர்த்துவது சிரமமாயிருந்ததால் வைக்கோல்கள் இடமாற்றப்பட்டு அதனடியில் முடிந்தவரை பரப்பினார்கள். ஒருக்களித்துச் சாய்ந்திருந்த மாடு படுக்க வைக்கப்பட்டது. அமுதாவிடமிருந்து கயிறுகள் வாங்கி மாட்டின் கால்களைக் கட்டினார். பிறகு &#8220;நாலு காலையும் அழுத்திப் புடிச்சுக்குங்க. அசையவிடாதீங்க.. வாலை யாராவது தூக்கிப் புடிங்க&#8221; என்றார் நானும் நடராஜனும் இரு கால்களை அழுத்திக்கொள்ள, மற்ற இருவர் மற்ற இரு கால்களை. டாக்டர் கையுறைக் கையை மாட்டினுள் செலுத்தி சிறிது நேரம் பரிசோதித்தார். மாட்டை அப்படியே நாலைந்து தடவை திருப்பித்திருப்பிப் புரட்டிப் போடவேண்டுமென்றார்.</p>
<p>ஒரு நாலைந்துபேர் சேர்ந்து அதன் நான்கு கால்களையும் பிடித்து உயர எழுப்பி ஒரு சாக்கு மூட்டையைத் திருப்புவதைப் போல அப்படியே வலதுபுறம் திருப்பிப்போட்டோம். பிறகு வலதுபுறம். &#8220;ம்&#8230; அப்படித்தான்&#8230;தூக்கிப்போடுங்க&#8230;&#8221; டாக்டரின் குரல் உயர்த்திக் கத்தினார். வலது. இடது. வலது. இடது. &#8220;ம்..மா&#8230;&#8221; என்ற ஈனமான குரல் அதன் அடிமடியிலிருந்து புறப்பட்டது. என் உடல் ஒரு முறை நடுங்கிக் குலுங்கியது. நடராஜன் முகத்தைப் பார்த்தேன். கைகளில் அப்பியிருந்த தரை மண்ணைத் தட்டிவிட்டுக்கொண்டு அவரும் என்னைப் பார்த்தார். ஆனால் இருவரும் பேசிக்கொள்ளவில்லை.</p>
<p>&#8220;இப்ப அப்படியே மொத்தமா புரட்டிப்போடுங்க. கால் ரெண்டும் கீழ போய் அப்பறம் மேல வர்ர மாதிரி..&#8221;</p>
<p>கடவுளே.</p>
<p>புரட்டிப்போட்டோம். தாங்கவொண்ணாத வேதனையில் இன்னொரு கத்தல். புஸ்..புஸ்ஸென்று பெருமூச்சு அதிகமாகி வயிறு அதிக உயரம் ஏறி இறங்க ஆரம்பித்தது. ஓரிரு நிமிடங்கள் இடைவெளிவிட்டு மீண்டும் டாக்டர் மாட்டின் வயிற்றினுள் கை செலுத்தி பரிசோதனை நடத்தினார். இந்தமுறை கொஞ்சம் அதிக நேரம். வைத்தகண் வாங்காமல் அனைவரும் டாக்டரின் செய்கையையே பார்த்துக்கொண்டிருக்க அங்கு நிலவின நிசப்தத்தை உடைத்துக்கொண்டு சிவப்பு கலந்த திரவம் கொழகொழவென்று வெளியேறி வழிந்தது.</p>
<p>நெற்றியிலிருந்து பெருக்கெடுத்து வழிந்த வியர்வையை இடது கையால் வழித்தெறிந்தார். தன்னை சிறிது ஆசுவாசப் படுத்திக் கொண்டார். பிறகு மீண்டும் பரிசோதனை. நான்கு நீளமான கயிறுகள் வாங்கி ஒவ்வொன்றின் முனையிலும் ஒரு சுருக்குப் போட்டுக்கொண்டு வயிற்றுக்குள் கைவிட்டு உள்ளே துழாவி அகப்பட்ட கன்றின் ஒவ்வொரு கால்களிலும் ஒவ்வொன்றாய்க் கட்டினார். துள்ளின மாடு பலப்பிரயோகத்தால் அடக்கப்பட்டது. இப்போது நான்கு கயிறுகள் மட்டும் மாட்டின் ஆசனத் துவாரத்தில் வெளிநீண்டிருந்தது. மாட்டைவிட பெரிதான பெருமூச்சொன்று டாக்டரிடமிருந்து புறப்பட்டது. எல்லோரும் உறைந்துபோய் நின்றிருக்க&#8230; முதலில் டாக்டர் பலம் முழுவதையும் திரட்டி இழுக்க அது லேசாய் வெளிவந்தது. கன்றின் ஒரு கால் குளம்பு.</p>
<p>&#8220;வாங்கப்பா இழுங்க. ஆனா விட்டுறக்கூடாது. அப்றம் கஷ்டம்.&#8221; டாக்டரின் கைகளுடன் இன்னும் பல கைகள் சேர்ந்துகொள்ள அந்தப் போராட்டம் ஆரம்பமானது. வெளித்தெறிந்த கன்றின் ஒரு காலை நான் பிடித்துக்கொள்ள மற்றவர்கள் கயிறுகளைப் பிடித்துக்கொண்டார்கள். குளம்பு, திரவத்தின் கொழகொழப்பில் பிடிகிடைக்காமல் வழுக்கியது. &#8220;ம்&#8230; இழுங்க..&#8221; என டாக்டரின் பத்து செகன்டுகளுக்கொருமுறை ஒலித்துக் கொண்டிருக்க பலங்கொண்டமட்டும் இழுக்க ஆரம்பித்தோம். திமிறின மாட்டை நான்குபேர் கால் அழுத்திப் பிடித்துக் கொண்டார்கள். ஆனால் அத்தனை எளிதில் எதுவும் நடந்து விடுவதாய்த் தோன்றவில்லை. முன் எப்பொழுதும் இல்லாத அளவுக்கு என் இதயத் துடிப்பு உயர்ந்து விட்டிருந்தது. எல்லோருடைய பெருமூச்சுகளும் இப்போது பூதாகரமாய் கேட்டது. கைகள் தகதகவென்று எரிந்து வலித்தன. இதெல்லாம் ஒரு வலியா?. குறைந்தபட்சம் இந்த தாய் மாட்டையாவது உயிரோடு காப்பாற்ற வேண்டுமே. இழு. இழு.</p>
<p>பட்டென்று கன்றின் குளம்பு மட்டும் குதிகாலோடு பெயர்த்துக் கொண்டுவிட.. இழுத்துக் கொண்டிருந்த எல்லோரும் மண்தரையில் தடுமாறிச் சரிந்தோம். அய்யோ என்று வாய் பொத்திக்கொண்டாள் அமுதா. &#8220;கெட்டுச்சு&#8221; என்றார் டாக்டர். &#8220;நகருங்க&#8221; என்று எல்லாரையும் விலக்கினார். மறுபடி வயிற்றுக்குள் கைவிட்டுத் துழாவினார். எதுவோ மீண்டும் அகப்படப் பலங்கொண்டமட்டும் பிடித்திழுத்தார். பட்டென்று ஒரு சப்தம் கேட்டது. &#8220;காலெலும்பு முறிஞ்சிருச்சுபோல&#8221; என்றார் யாரோ ஒருவர்.</p>
<p>&#8220;சும்மாருங்கய்யா&#8221; என்று டாக்டர் அதட்டினார். மாட்டின்மீதே சாய்ந்த மாதிரி படுத்துக்கொண்டிருந்தார் அவர். மீண்டும் ஒரு இழுப்பு. நீண்ட நேர முயற்சிக்குப்பின் ஒன்றும் முடியாமல் &#8220;சரி மூணு கயித்தையே இழுத்துப்பாப்போம். வாங்க&#8230;இழுங்க..&#8221; என்றார்.</p>
<p>இழுத்தோம். அத்தனை பேரின் பிரயத்தனமும் கவனமும் பலமும் பிரயோகிக்கப்பட்ட அந்த செயலில் கொஞ்சம் பலன் தெரியும்போல இருந்தது. வயிற்றுக்குள் நகர்ந்துகொடுக்கிற கன்றின் அசைவை கைகள் உணர்ந்தன. ஈரம் கலந்த ரத்தம், வழுக்கல்.. சணல் கயிற்றின் சொரசொரப்பில் கைகளின் எரிச்சல். &#8221;விட்டுராதீங்க&#8230; விட்டுராதீங்க&#8217; என்று டாக்டரின் எச்சரிக்கைக்குரல் அந்த நள்ளிரவில் எழுந்து எழுந்து அடங்கியது. எப்படியும் மணி பன்னிரண்டாவது இருக்கும்.</p>
<p>&#8220;கொடுமைங்க..&#8221; என்றார் நடராஜன் என் காதருகே. மீண்டும் அவரே சொன்னார். &#8220;வேற வழியில்ல..&#8221;</p>
<p>இப்போது மாடு தன் சக்தி முழுவதையும் இழந்து அரை மயக்க நிலைக்குப் போய்விட்டிருந்தது. மறுபடி ஒரு பத்து நிமிடங்கள் நடந்த அந்தப் போராட்டத்தின் முடிவில்.. குளம்பு முறிந்த கால் தவிர இன்னொன்றும் வெளித்தெரிந்தது. அதற்கப்புறம் எல்லாம் சுலபமாகிவிட்டது. இழுப்பின் திசையில் தாயின் மடியிலிருந்து கன்று சரேலென்று உருவிக்கொண்டு ரத்தக்கொழகொழப்புடன் சொத்தென்று வெளி வந்து விழ மறுபடி ஒரு முறை தடுமாறிச் சரிந்தோம். டாக்டரும்கூட. களைப்பான பெருமூச்சுக்களுடன் அத்தனை பேரின் பார்வையும் கன்றின் மேல் படிந்தது.</p>
<p>அமுதா ஓடிவந்து அதனருகே குனிந்தாள். அது உயிரோடிக்கிற சாத்தியக்கூறுகளை அவள் கண்கள் தேடி ஏமாந்தது. திறந்திருந்த அதன் அழகான விழிகளில் அதன் உயிர் எப்போதோ உறைந்து நிலைகுத்தியிருந்தது. அவள் கண்ணிலிருந்து நீர் பெருக்கெடுத்து வழிந்தது. கன்றின் உயிரற்ற சடலத்தினருகில் அப்படியே கால் மடங்கி உட்கார்ந்து கதறியழ ஆரம்பித்தாள்.</p>
<p>அந்த இடத்தின் அமைதியை விலக்கி பேச்சுக்குரல்கள் மெல்ல எழுந்தன. &#8220;ரொம்ப தேங்ஸ்ங்க. இத்தன பேரு உதவிக்குக் கிடைக்கும்னு நான் நெனைக்கவேயில்லை&#8221; என்று நன்றியோடு பார்த்தார் டாக்டர். மாட்டின் கால்களை அவிழ்த்துவிட்டார். கன்றினருகில் வந்து அதன் நான்கு கால்களையும் அலாக்காகத் தூக்கி மாட்டினருகில் &#8220;இந்தா&#8221; என்று போட்டார். அவரின் அந்த வார்த்தையில் நிறைய அர்த்தங்கள் புதைந்துகிடந்த மாதிரி உணர்ந்தேன். டாக்டர் கையுறைகளைக் கழற்றி வீசிவிட்டு பக்கெட்டில் வைக்கப்பட்டிருந்த தண்ணீரில் கைகழுவிக்கொண்டார்.</p>
<p>&#8220;ஒரு வழியா ஆச்சு&#8221; என்றபடி கைகழுவிவிட்டு நடராஜன் எமர்ஜென்ஸி விளக்கை எடுத்துக்கொண்டு புறப்பட்டுவிட்டார். ட்யூப் லைட்டுகள் கழற்றப்பட்டு மறுபடி இருள் சூழ்ந்தது. அழகப்பன் மறுபடியும் மகனுடன் ஸ்டுல் உட்பட தன் பொருள்களைச் சேகரித்துக்கொண்டு நகர்ந்தார். இஞ்ஜினியர், கேபிள்காரர், மளிகை ஆறுச்சாமி எல்லோரும்கூட நகர ஆரம்பித்தார்கள்.</p>
<p>மாட்டுக்கு மற்ற சிஷ்ருஷைகளையும், சோதனைகளையும் முடித்துவிட்டு &#8220;காலைல சீக்கிரமா மறுபடி வந்து பாக்கறேன்&#8221; என்று நடுநிசியின் நிசப்தத்தை கிழித்துக்கொண்டு டாக்டரின் லேம்ரட்டா புறப்பட்டுச் சென்றபிறகு மற்றவர்களும் கொட்டாவியைச் சுமந்தபடி நடையைக் கட்டினார்கள்.</p>
<p>நான் இன்னும் நின்றிருந்தேன். மனது கலக்கமாயிருந்தது. &#8216;உனக்கப்புறம் ஒரு பொட்டப்புள்ள ஆறுமாசத்திலயே குறையா பொறந்து இறந்துடுச்சு&#8217; என்று அம்மா என்றைக்கோ ஒருமுறை சொன்னது ஞாபகம் வந்து போனது. என் கண்கள் லேசாய் ஈரமாகிவிட்டிருந்ததை உணர்ந்தேன்.</p>
<p>&#8220;கேட்டை மூடிரலாங்களா&#8221; என்று ஃபாக்டரி வாட்ச்மேன் குரல் என் கவனத்தைக் கலைத்தது. கடைசியாய் அமுதாவும் நானும் மட்டும் வெகுநேரம் அமைதியாய் அங்கு நின்றுகொண்டிருந்தோம். வெளிச்சம் கரைந்த இருளில் நிழலுருவமாய் தெரிந்த அமுதாவின் கண்களில் இன்னும் நீர் இருந்தது.</p>
<p>வேதனை கொஞ்சம் தணிந்திருந்த பசுமாடு மெல்ல ஒருக்களித்து எழுந்து அருகில் கிடந்த இறந்த கன்றின் உடலை வாஞ்சையுடன் நக்கிக் கொடுத்துக்கொண்டிருந்தது. நான் அதையே உறைந்துபோன நெஞ்சோடு இன்னும் பார்த்துக்கொண்டிருந்தேன்.</p>
<p>வீட்டுக்குத் திரும்பும்போது கிரவுண்டிலிருந்து &#8220;ம்ம்..மா&#8221; என்கிற குரல் மறுபடி எழுந்து தேய்ந்தது. என் உடம்பு ஒரு முறை லேசாய் சிலிர்த்து அடங்கியது.</p>
<img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/categories/chithran.wordpress.com/19/" /> <img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/tags/chithran.wordpress.com/19/" /> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/chithran.wordpress.com/19/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/chithran.wordpress.com/19/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/chithran.wordpress.com/19/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/chithran.wordpress.com/19/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/chithran.wordpress.com/19/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/chithran.wordpress.com/19/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/chithran.wordpress.com/19/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/chithran.wordpress.com/19/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/chithran.wordpress.com/19/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/chithran.wordpress.com/19/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=chithran.wordpress.com&blog=235394&post=19&subd=chithran&ref=&feed=1" /></div>]]></content:encoded>
			<wfw:commentRss>http://chithran.wordpress.com/2007/08/28/jananam/feed/</wfw:commentRss>
		<slash:comments>1</slash:comments>
	
		<media:content url="http://1.gravatar.com/avatar/167f258ca8d521ae05fbc12e6086f005?s=96&#38;d=identicon&#38;r=G" medium="image">
			<media:title type="html">சித்ரன்</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>அறை</title>
		<link>http://chithran.wordpress.com/2007/08/28/arai/</link>
		<comments>http://chithran.wordpress.com/2007/08/28/arai/#comments</comments>
		<pubDate>Mon, 27 Aug 2007 20:12:10 +0000</pubDate>
		<dc:creator>சித்ரன்</dc:creator>
				<category><![CDATA[Uncategorized]]></category>
		<category><![CDATA[சித்ரன்]]></category>
		<category><![CDATA[சிறுகதைகள்]]></category>
		<category><![CDATA[மரத்தடி டாட் காம்]]></category>

		<guid isPermaLink="false">http://chithran.wordpress.com/2007/08/28/%e0%ae%85%e0%ae%b1%e0%af%88/</guid>
		<description><![CDATA[மரத்தடி டாட் காம்
எனக்கு எதிரே அந்த அறை இருந்தது. வார்னீஷ் உபயத்தில் வருடங்கள் தாண்டி இன்னும் மினுமினுக்குகிற அதன் பெரிய கதவில் என் கண்கள் நிலைத்திருந்தன. அந்தக் கதவில் ஒரு புத்தரின் உருவம் தாங்கின ஸ்டிக்கர் ஒன்று. கண்கள் மூடி போதி மரத்தடி ஞானம். அதை அந்த அறையெங்கும் பரப்ப முயற்சித்துக்கொண்டிருக்கிறது. என் முன்பாக இன்னும் திறக்கப்படாத அந்தக் கதவின் உட்புற மர்மங்களின் மேல் என் கவனம் வெறி கொண்டு அலைந்து கொண்டிருந்தது. ஷிவ்ராம் ஏன் அந்த [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=chithran.wordpress.com&blog=235394&post=18&subd=chithran&ref=&feed=1" />]]></description>
			<content:encoded><![CDATA[<div class='snap_preview'><br /><p><strong><em>மரத்தடி டாட் காம்</em></strong></p>
<p>எனக்கு எதிரே அந்த அறை இருந்தது. வார்னீஷ் உபயத்தில் வருடங்கள் தாண்டி இன்னும் மினுமினுக்குகிற அதன் பெரிய கதவில் என் கண்கள் நிலைத்திருந்தன. அந்தக் கதவில் ஒரு புத்தரின் உருவம் தாங்கின ஸ்டிக்கர் ஒன்று. கண்கள் மூடி போதி மரத்தடி ஞானம். அதை அந்த அறையெங்கும் பரப்ப முயற்சித்துக்கொண்டிருக்கிறது. என் முன்பாக இன்னும் திறக்கப்படாத அந்தக் கதவின் உட்புற மர்மங்களின் மேல் என் கவனம் வெறி கொண்டு அலைந்து கொண்டிருந்தது. ஷிவ்ராம் ஏன் அந்த அறையை மட்டும் இன்னும் எனக்கு திறந்து காட்டாமலிருக்கிறார்? என்ன இருக்கிறது அந்த அறைக்குள்? அது ஏன் பூட்டியே கிடக்கிறது?</p>
<p>இந்தக் கேள்வியை முன்பு ஒருமுறை அவரிடம் நான் கேட்டபோது மையமாகப் புன்னகைத்துவிட்டு பதில் சொல்லாமல் நழுவிவிட்டார்.</p>
<p>நான் அந்த அறைக் கதவின் எதிரே இருக்கிற ஸோபாவில் சாய்ந்து அதை உற்று நோக்கிக் கொண்டிருந்தேன். பல மாதங்களாக இங்கு வரும்போதெல்லாம் இது நடக்கிறது. ஷிவ்ராம் தனித்து வசிக்கும் இத்தனை பெரிய வீட்டிற்கு இந்த அறையை அவர் உபயோகிக்காமல் விட்டுவைப்பதில் அத்தனை நஷ்டமொன்றுமில்லைதான். ஆனால் இந்த வீட்டுக்குள் இத்தனை சுதந்திரமாய் உலவ எனக்கு அனுமதி தந்த ஷிவ்ராம் என்னை அந்த அறைக்குள் இன்னும் அனுமதிக்காமல் வைத்திருப்பது உறுத்துகிறது. அது பற்றிக் கேட்டபோது அது ஸ்டோர் ரூம் என்று ஏதாவது சொல்லிச் சமாளித்திருந்தால் மேற்கொண்டு நான் எதுவும் கேட்டிருக்க மாட்டேன். ஆனால் அன்று அவர் முகம் லேசாய் மாறியதும், &#8216;அதை எதுக்குப் பார்க்கணும், அங்கே ஒண்ணுமில்லை&#8217; என்று லேசான நடுக்கத்துடன் சொன்னதும் அதை திறந்து பார்க்கிற<br />
வலை அதிகப்படுத்திவிட்டது. மேலும் நாம் அதிகம் நேசித்து வசிக்கிற இடத்தில் அறைகள் முக்கியமில்லையா?</p>
<p>ஷிவ்ராமை நான் எங்கே எப்படி சந்தித்தேன் என்பது பெரிய சுவாரஸ்யமான விஷயம் அல்ல. இந்த ஒரு வருடத்தில் எங்கள் நட்பு எப்படி வலுப்பட்டு இறுகியது என்பது வேண்டுமானால் சிறப்புச் செய்தியாகச் சொல்லலாம். ஒரு தடவை என் லோக்கல் நகரத்தில் நடந்த ஒரு சர்வதேசத் திரைப்பட விழாவில் ·போர் ·பார் வெனிஸ் பார்க்கப் போனபோது அறிமுகமானவர் ஷிவ்ராம்.</p>
<p>அவருக்கு ஒரு அறுபத்தைந்து வயதிருக்கலாம். ஜிப்பா. வெண்தாடி. தீட்சண்யமான கண்களை அணைத்திருக்கிற கண்ணாடி. அவரிடமிருந்து ஒரு தலைமுறை தள்ளியிருக்கிற என்னை அவருக்கு எப்படி பிடித்துப்போனதென்று தெரியவில்லை. ஒரு வேளை நான் சினிமாவில் பணியாற்றிக்கொண்டு சினிமாவை நேசிக்கிறவனாக இருப்பதால்கூட இருக்கலாம். உலக சினிமாக்கள், தேசிய அரசியல், இசை, ஓவியம் எல்லாம் பற்றி அவர் பேசுவதைக் கேட்டுக்கொண்டேயிருக்கலாம்போல் இருக்கும்.</p>
<p>ஒரு நாள் வீட்டுக்கு வாயேன் என்று கூப்பிட்டார். போனேன். ஆறேழு அறைகளுடன் கூடிய பெரிய வீடு. பிரமிப்பாய் இருந்தது. நல்லவிதமாய் பராமரிக்கப்பட்ட அறைகள். வாழ்வுத் தேவைக்கு அதிகப்படியாய் வசதிகள். அத்தனை பெரிய வீட்டில் அவர் தனியாய் இருந்தார் என்பது ஆச்சரியத்தை அளித்தது. ஒரு வேலைக்காரர் மட்டும் அவ்வப்போது வந்து போவார்.</p>
<p>அவர் உறவுகள் பற்றி பொதுவாய் விசாரித்தபோது என்னை அவர் படுக்கை அறைக்கு அழைத்துச்சென்று டேபிள் ட்ராயரிலிருந்து போட்டோ ஒன்றை எடுத்து நீட்டினார். சுமார் முப்பத்தைந்து வயது மதிக்கத்தக்க ஒரு பெண்ணும், ஒரு பத்து வயதுப் பையனும் அதில் இருந்தார்கள்.</p>
<p>&#8220;என் மனைவியும், பையனும்..&#8221; கொஞ்சம் மெளன இடைவெளிவிட்டு &#8220;அவ சின்ன வயசிலயே போய்ச்சேர்ந்துட்டா.. பையன் கொஞ்சம் பெரியவனாகி..&#8221;</p>
<p>மேற்கொண்டு எதுவும் அவர் சொல்லவில்லை. எனக்கும் தயக்கத் திரைகளைக் கடந்து குடைந்து கேட்பதற்கும் விருப்பமில்லாமலிருந்தது. எத்தனை பழகினாலும் ஒவ்வொருவருக்கும் அந்தரங்கங்கள் வேறுவேறு. விருப்பமிருந்தால் அவராக ஒரு இளகின பொழுதில் எல்லாம் சொல்வார் என்று நம்பிக்கையிருந்தது. அதற்காக என் காதுகள் தயாராகவும் இருந்தன. பேசுவதை விட கேட்பது எனக்குப் பிடிக்கும்.</p>
<p>என்னிடம் மிகப் பிடித்த குணமும் அதுதான் என்று அவரே சொல்லியும் இருக்கிறார். &#8216;எப்படி நான் பேசறது எல்லாத்தையும் சகிச்சுக் கேட்டுட்டிருக்கிற?&#8217; என்றும் கேட்பார் சிரித்தபடி. ஷிவ்ராமிடம் எனக்கு என்ன பிடித்தது என்று யோசித்தால் முதலில் ஞாபகத்துக்கு வருவது மென்மையில் தோய்த்தெடுத்த அவரது குரல். மெல்லிசாய் ஆனால் உறுதியாய் வெளிப்படுகிற அந்தக் குரலில் யாருமே கட்டுண்டு போவார்கள்.</p>
<p>முதல் சந்திப்பில் சம்பிரதாயமாய் ரம்பித்த பேச்சு பரிணாம வளர்ச்சியடைந்து இப்போது வெகு தூரம் முன்னேறிவிட்டது. சில நாட்கள் நான் அவருக்கு சமைத்துப் போட்டிருக்கிறேன். வீட்டைச் சுத்தம் செய்திருக்கிறேன். வேலையில்லாதபோது ஒரு முழுநாளும் அவருடனேயே இருந்து பேசிக்கொண்டிருந்திருக்கிறேன். அவருடன் மேலும் ஓருசில உலக சினிமாக்கள் பார்த்திருக்கிறேன். என் வீட்டுக்குப் போகாமல் அவர் வீட்டிலேயே நிறைய நாள் தங்கியிருந்திருக்கிறேன்.</p>
<p>ஷிவ்ராம் அடுக்களையில் எங்களிருவருக்கும் காபி தயாரித்துக்கொண்டிருக்கிறார். இன்று மறுபடியும் அவரிடம் கேட்டுவிடலாம் என்று தோன்றியது. அந்த அறை ஏன் பூட்டியே கிடக்கிறது?</p>
<p>ஆவி பறக்க ட்ரேயில் காபியுடன் அவர் வந்த போது மெதுவாய் &#8220;ஷிவ்..&#8221; என்றேன். (என்னை அப்படித்தான் கூப்பிடச் சொல்லியிருக்கிறார்). &#8220;இ·ப் யூ டோன்ட் மைண்ட்.. எனக்கு அந்த ரூமைப் பாக்கணும்&#8221;</p>
<p>இந்தத் தடவை அவர் சமாளிப்பதற்கான பதில் தேடி எதுவும் யோசிக்கவில்லை. எனக்கு உடனேயே எந்த பதிலும் சொல்லவில்லை. காபியை உறிஞ்சிக்கொண்டே கீழே குனிந்து சிறிது நேரம் பேசாமலிருந்தார். நேரம் கடந்தது. காபியின் கடைசி ஸிப்பை ருசித்துவிட்டு எழுந்தார். மெல்ல நடந்து உள்ளறைக்குச் சென்றுவிட்டார். எனக்கு ஒரு மாதிரி இருந்தது. ரொம்ப உரிமை எடுத்துக் கொள்கிறேனோ என்று என் மேலேயே கோபமாய் வந்தது. காபியின் கசப்போடு இது வேறு சேர்ந்துவிட்டது.</p>
<p>ஷிவ் ஓரிரு நிமிடங்களில் திரும்பி வந்தார். அவர் கையில் ஒரு சாவிக்கொத்து இருந்தது. என்னை நெருங்கினார். என் வலக் கையை எடுத்து சாவியை அதில் திணித்தார். &#8220;நீயே திறந்து பாத்துக்கோ&#8221; என்றார் புன்னகைத்தபடி.</p>
<p>&#8220;ஷிவ் நான் ரொம்ப உரிமை எடுத்துக்கறனா உங்ககிட்ட?&#8221;</p>
<p>அவர் பதில் சொல்லவில்லை. சாவிக்கொத்தை நீட்டிய கையும், அவர் புன்னகையும் அப்படியே இருக்கிறது. சரி! இனி இதில் மறுக்க என்ன இருக்கிறது? மேலும் என் இத்தனை நாள் ஆவல் என்ன? அந்த அறையை திறந்து பார்ப்பதுதானே? அவரும்கூட அதை எனக்குத் திறந்து காட்டுகிற தீர்மானத்தில்தான் இருக்கிறார் என்றும் தெரிகிறது. அப்புறம் என்ன?</p>
<p>மெதுவாய் சாவியை வாங்கிக்கொண்டு அந்தக் கதவிடம் நகர்ந்தேன். நான் யோசனையுடன் மெதுவாய் சாவித்துவாரத்துக்குள் அதைச் செலுத்தித் திருப்புவதை ஷிவ் அதே புன்னகை மாறாமல் பார்த்துக்கொண்டிருந்தார். அந்தக் கதவின் மகா மெளனம் கலைகிற ஓசை &#8216;ப்ளக்&#8217; என்று கேட்டது.</p>
<p>நான் கதவை தள்ளித் திறந்தேன். மறுநொடி என் முகத்தில் வந்தமர்ந்து தாண்டவமாடிய உணர்ச்சிகளைச் சொல்லமுடியாது. அத்தனை பெரிய அறையை நான் அங்கே எதிர்பார்க்கவில்லை. நீளமாய் மிகப்பெரிய அறை. இத்தனை நாள் இந்த வீட்டைச் சுற்றிச் சுற்றி வந்தபோதெல்லாம் இதன் அமைப்பு எனக்கு பிடிபடாமல் போயிருக்கிறது. அதனுள்ளே லேசாய் நான் உள்நுழைய முற்பட குப்பென்று ஒரு நாற்றம் தாக்கியது. கதவில் பின்னியிருந்த சிலந்தி வலைகள் என் முகத்தில் கவிழ்ந்தன. காற்றில் தூசி நெடி மூக்கில் நெருடியது. பாதத்துக்குக் கீழே குப்பை நறநறத்தது. ஜன்னல்கள் திறக்கப்படாமலிருந்ததால் பாதி இருண்டிருந்தது.</p>
<p>அந்த அறைக்குள் நுழைந்தவுடன் என் ஆச்சரியத்தை பல மடங்கு உயர்த்திய அடுத்த விஷயம், அறையின் இரண்டு பக்கமும் பெரிய பெரிய அலமாரிகளில் நிரம்பி வழியும் புத்தகங்கள். நான் ஒரு புதையலைக் கண்டுபிடித்தவனின் உத்வேகத்துடன் அந்த புத்தகங்களை நெருங்கினேன். பெரியதும் சிறியதும் ஆக என்னென்னவோ புத்தகங்கள். குறைந்தபட்சம் மூவாயிரம் இருக்கும். அதிக பட்சம் ஆங்கிலம். ·போட்டோகிராபி பற்றி நிறைய இருந்தன. அப்புறம் அதுதவிர அலமாரிகளுக்கு மேல் ·ப்ரேம்கள் இடப்பட்ட பெரிய பெரிய புகைப்படங்கள். ஷிவ் ஒரு முறை காட்டிய அவர் மனைவி மற்றும் மகனின் ·போட்டோவும் அதில் இருந்தது. ஷிவ்ராமின் இளமைக்கால ப்ளாக் அண்ட் ஒயிட் போர்ட்ரைட் ஒன்று. சுவரில் சாய்த்து வைக்கப்பட்டிருந்த இரண்டு கிதார்கள். அதில் அதிர்ந்து அறுந்திருந்த கம்பிகள். அறையின் நடு நாயகமாய் ஒரு சுழல் நாற்காலி. ஒரு ஷெல்·பில் தூசு படிந்து இரண்டு மூன்று கேமராக்கள். லென்சுகள். புகைப்படங்கள் எடுக்க உபயோகிக்கப்படும் குடை ரி·ப்ளெக்டர் சமாசாரங்கள். ஓரிரு ட்ரைபாட் ஸ்டேண்ட். மேலும் என்னன்னவோ. ஒரு காலத்தில் அதிகம் புழக்கத்தில் இருந்த அறையாக இது இருந்திருக்கவேண்டும். இதை பூட்டி வைக்குமளவுக்கு என்ன கெட்டுப்போயிற்று<br />
இப்பொழுது?</p>
<p>நான் வியப்பு மாறாமல் திரும்பிப்பார்த்தபோது அவர் அறைக்குள் வராமல் வெளியிலேயே நின்றிருந்தார். வருடங்கள் கடந்து தாக்குகிற நெடியில் எனக்கோ அங்கே நிற்கவே முடியவில்லை. ஜன்னல்களையெல்லாம் திறந்து விடலாமா என்று யோசித்தேன்.</p>
<p>என்ன இதெல்லாம் என்று நான் கேட்பதை என் புருவ நெளிவிலிருந்து உணர்ந்துவிட்டார் போல. மெல்ல உள்ளே வந்தார். அறையை நாலாப்பக்கமும் கண்களால் அளவெடுத்தார். அவர் முகபாவங்கள் லேசாக மாறின. அறுந்து தொங்குகிற சிலந்திவலைத் தோரணங்களிலும், குப்பையிலும், கலைந்து கிடக்கிற புத்தகங்கள், கிதார், கேமராக்கள் என்று ஒவ்வொன்றின் மேலும் அவர் பார்வை படிந்து மறைந்தது. லேசாய் அவர் கண்கள் பனித்து அதைத் தொடர்ந்து வெளிப்பட்ட அவர் குரல் கரகரத்திருந்தது.</p>
<p>&#8220;ஏழு வருடங்களுக்கப்புறம் இந்த ரூமைத் திறக்கிறேன்.&#8221;</p>
<p>ஏழு வருடங்களா? இருக்கலாம். இதன் பராமரிக்கப்படாத அவலட்சணக் கோலமே அதை சொல்லுகிறதே. நான் அவர் மேலும் பேசக் காத்திருந்தேன்.</p>
<p>&#8220;என்னைப் பற்றி உனக்குத் தெரியாததையெல்லாம் முதலில் சொல்லிடறேன்?&#8221; என்றார். நான் தலையாட்டினேன்.</p>
<p>நிறுத்தி நிதானித்து அவர் சொன்னார். &#8220;நான் அடிப்படையில ஒரு பயாலஜி ப்ரொபஸர். அதற்கப்புறம் போட்டோகிராபி மேல் இருந்த அதீத ஆர்வத்தினால வேலையை உதறிவிட்டு ஒரு முழுநேரப் போட்டோகிராபரா யிட்டேன். அப்புறம் வைல்ட் லை·ப் போட்டோகிராபில இன்ட்ரஸ்ட் வந்து கொஞ்ச நாள் பைத்தியமாய் காடு மலைன்னு அலைஞ்சேன். அப்றம் மாடலிங் போட்டோகிராபி. நிறைய பெரிய அட்வர்டைஸிங் ஏஜன்ஸிகளுக்கு வேலை செஞ்சிருக்கேன். முக்கியமான நகரங்கள்ல போட்டோகிராபி ஒர்க்ஷாப் நடத்தியிருக்கேன். என்கிட்ட கத்துகிட்ட நிறைய பேரு இப்ப அந்தத் துறையில பல சாதனை படைச்சிருக்காங்க. நிறைய அவார்டுகள் வாங்கியிருக்கேன். இதோ இங்க நீ பாக்கிறது எல்லாம் நான் எடுத்ததுதான். ஒண்ணு ரெண்டு சினிமாட்டோகிராபிகூட பண்ணியிருக்கிறேன். இப்ப கூட ஷிவ்ராம்னு சொன்னா இண்டஸ்ட்ரீல எல்லாருக்கும் தெரியும். ரொம்ப ரொம்பப் பாப்புலர். கொஞ்சம் ஜாம்பவான் மாதிரிதான் இருந்தேன்.&#8221;</p>
<p>நான் விழிவிரிய அவர் சொல்வதைக் கேட்டுக்கொண்டிருந்தேன். ஷிவ்ராம் இவ்வளவு பெரிய ஆள் என்கிற விஷயத்தின் வியப்பில் அவரை நான் பிரமிப்புடன் வெறித்துக்கொண்டிருக்க அவர் தொடர்ந்தார்.</p>
<p>&#8220;உலகம் பூரா சுத்தினேன். நிறைய சம்பாதிச்சேன். பெரிய உயரத்துக்கு வந்தேன். எப்பவும் அலைச்சல். வேலை. வீட்டுக்கு என்னிக்காவது வருவேன். எப்பவும் புத்தகம் படிச்சுட்டு இருப்பேன். இதோ இது பூரா நான் கலெக்ட் பண்ணினது. கடைசில என்னாச்சு? என் பையனை கவனிக்காம விட்டுட்டேன். சின்ன வயசில அம்மாவை இழந்த பையன். கூடப்பிறந்தவங்க யாரும் கிடையாது. அவனுக்கு நிறைய பணம் குடுத்தேன். செல்லமா ஆனா தனியா வளர்ந்தான். ரொம்பத் தனியா! என்னோட அக்கறையும் கவனிப்பும், கண்டிப்பும் இல்லாம. நிறைய சுத்தினான். காலேஜ் படிக்கும்போது சிகரெட் கத்துக்கிட்டான். நான் பெரிசா கண்டுக்கலை. தண்ணி அடிக்க ஆரம்பிச்சான். எல்லாமே நிறைய. அப்புறம் போதைப் பழக்கம். நான் அதை சரியா கவனிக்க ஆரம்பிக்கும்போது ரொம்ப எல்லை மீறிப் போயிருந்தது. டி-அடிக்ஷன் சென்டர்ல விடும்படியா ஆயிடுச்சு. யாரும் கவனிப்பாரற்ற தனிமையில அவனுடைய இயல்பு நடவடிக்கையில நிறைய மாற்றம். கொஞ்சம் வயலண்டா ஆயிடுவான் அப்பப்ப. அப்றம் சைக்காலஜிஸ்ட்கிட்ட கன்ஸல்ட்.. இப்படி நிறைய நடந்தது.</p>
<p>கொஞ்சநாள் ஒழுங்கா இருந்தான். எனக்கு என் வேலை எப்பவும் சரியா இருந்தது. மறுபடி அவனை சரியா கவனிக்க முடியாம சந்தர்ப்பங்கள் அமைஞ்சுபோச்சு. ஒரு நாள் ஒரு நீண்டநாள் டூரிலிருக்கும்போது அவசர தகவல் கிடைச்சு வீடு வந்து சேர்ந்தேன் அவன் இதோ இந்த ரூமுக்குள்ளதான் செத்துக்கிடந்தான். அவன் செத்து மூணுநாள் கழிச்சுத்தான் அவனை இந்த ரூமுக்குள்ளேர்ந்து கண்டுபிடிச்சு வெளியே எடுத்தோம்.&#8221;</p>
<p>தழுதழுத்த குரலில் அவர் நிறுத்த நான் உறைந்துபோய் நின்றிருந்தேன். அந்தச் செய்தியின் அதிர்வை என் உடம்பு உள்வாங்கிக் கொண்டதில் சர்வ நரம்புகளும் நடுங்கின.</p>
<p>&#8220;ஐம் ஸாரி ஷிவ்.&#8221; என்றேன்.</p>
<p>&#8220;நானில்லாதபோது ஒருநாள் அவனுக்கு உடம்பு சரியில்லாமல் போயிருக்கு. மஞ்சள் காமாலைன்னு சொன்னாங்க. அதோடயே நிறைய குடிச்சிருக்கான். உடம்பு தாங்கலை. போய்ட்டான். உனக்கு இன்னொன்னு தெரியுமா? அவன் நல்லா கிதார் வாசிப்பான்.&#8221; மறுபடி கொஞ்சம் நிறுத்தி &#8220;கவனிப்பில்லாத தனிமை அவனைக் கொன்னுடுச்சு. அதோ அந்த ஸோபால கவுந்து கிடந்தான் கடைசியா<br />
பார்க்கும்போது.&#8221; என்றார்.</p>
<p>நான் திரும்பிப் பார்த்தேன். அப்போதுதான் அந்த அறையின் மீதிப் பகுதிக்குள் பிரவேசிக்காமல் அங்கேயே நின்று கொண்டிருந்தது உறுத்தியது. அதிகம் வெளிச்சமற்று இன்னும் இருண்டிருந்த பகுதிக்கு மெதுவாய் எட்டு வைத்து நடந்தேன். புத்தக ஷெல்·புகள் ஓரிடத்தில் முடிந்து சரேலென்று இன்னொரு ஷெல்·ப் தொடங்கியது. அதில் முழுக்க பாட்டில் பாட்டிலாக நிறைந்து கிடந்தன. அவைகளில் வெவ்வேறு அளவுகளில் நிறைந்திருந்த ஆல்கஹால் திரவங்கள். அதன் மூக்கைத் துளைக்கும் நெடி. ஒரு டீப்பாய். அதன் மேல் ஷ்ட்ரே. அது முழுக்க புகைத்த சிகரெட் துண்டுகள் ஏராளமாய் கிடந்தன. அது தவிர நிறைய சிகரெட் டப்பாக்கள். பின் ஓரிரு சிரிஞ்சுகள். அப்புறம்.. அப்புறம்.. அப்போதுதான் நான் அதைப் பார்த்தேன். ஒரு அலமாரியில் புத்தகங்கள் பாதி எரிந்து கரியாய்க் கிடந்தன. என்ன இது?</p>
<p>&#8220;அவன் எரிச்சதுதான். ஒரு நாள் எம்மேல இருந்த கோவத்துல&#8221; என்றார் ஷிவ்ராம். &#8220;அவன் இறந்தப்ப இந்த ரூம் எப்படியிருந்ததோ அப்படியே விட்டுட்டு இந்தக் கதவைப் பூட்டிட்டேன். ஒரு பொருளை நகர்த்தலை. அப்புறம் திறக்கவும் இல்லை. யாரையும் உள்ளே விடவும் இல்லை. ஒரு மனுஷன் எப்படி வாழக்கூடாதுங்கறதுக்கு ஒரு மோசமான உதாரணம் இந்த ரூம். ஒரு அப்பங்காரன் தன் பிள்ளைங்ககிட்டே<br />
எப்படியிருக்கணுங்கறதுக்கும்கூட. இல்லையா? எனக்கு எல்லாத்துலேயும் பிடிப்பு போய்டுச்சு. ரொம்ப கில்டியா ·பீல் பண்ணினேன். என் வாழ்க்கையை திரும்பிப் பார்த்தா எனக்கே கேவலமா இருந்தது. எதுக்காக வாழ்ந்தேன்? எதுக்காக அவார்டு? விரக்தியடைஞ்சு எல்லாத்தையும் விட்டுட்டேன். போட்டோகிராபி உட்பட. இப்ப எனக்கு எதுவும், யாரும் கிடையாது. இதையெல்லாம் மனசுவிட்டு யார்கிட்டேயும் சொல்லணும்னுகூட தோணினதே கிடையாது. யாரும் கேட்டதும் இல்ல. கேட்டாலும் சொல்ல மாட்டேன். என் வைராக்கியத்தை முதல் முதலா நீ உடைச்சிருக்க&#8221;.</p>
<p>இதைச் சொல்லிவிட்டு ஷிவ்ராம் அங்கிருந்து நகர்ந்துவிட்டார். திடீரென்று கனத்துப் போன மனசுடன் நான் திகைத்து நின்றிருந்தேன். என் பிரியத்துக்குரிய ஒரு மனிதரின் பின்னால் இத்தனை பெரிய சோகம் இருக்குமென்று நான் நினைத்துக்கூட பார்க்கவில்லை. என் முன் ஒரு புதிராய் மெளனமாய் இருந்த இந்த அறை இப்போது தன்னை திறந்து காட்டி தன் அவலங்களையும் மர்மங்களையும் வெளிப்படுத்திவிட்டது. என்ன செய்யப் போகிறேன் நான்? ஷிவ்ராமுக்கு! ஒரு மாபெரும் இழப்பை என்றும் உணர்த்திக்கொண்டிருக்கும் இந்த அறைக்கு! அவர் விரும்பிப் படித்த புத்தகங்களுக்கு!.</p>
<p>எனக்கு என் அப்பாவும், அவர் புத்தகம் படித்துக்கொண்டு கிடக்கிற அவரின் அறையும் ஞாபகத்துக்கு வந்தது. அதற்குள் ஒரு நாளாவது நுழைந்திருப்பேனா? ஒரு நாளாவது அங்கே அவருடன் அமர்ந்து ஒரு கொஞ்ச நேரம் பேசியிருப்பேனா? பெரியவனானதுக்கப்புறம் எப்படியெல்லாம் அவர் வார்த்தைகளைப் புறக்கணித்திருக்கிறேன். வாஞ்சையுடனான அவர் பார்வைகளைப் தவிர்த்திருக்கிறேன். எல்லாவற்றிற்கும் எல்லோருக்கும் நேரமில்லாமல் போய்விட்டது.</p>
<p>இந்த அறை இப்படியே கிடந்துவிடவேண்டுமா? நான் மெதுவாய் ஷெ·ல்பிலிருந்து ஒரு கேமராவை எடுத்தேன். நல்ல விலையுயர்ந்த கேமரா அது. அதைப் சுற்றிப் பொதிந்திருந்த தூசியை ஊதினேன். கர்ச்சீப் எடுத்துத் துடைத்தேன். அதன் வியூ ·பைண்டரின் வழியே கண்ணைப் பொருத்தி அந்த அறையைப் பார்த்தேன். அறை ஒரு மகா அமைதியுடன் என்னைப் பார்ப்பதுபோலிருந்தது. அதை எடுத்த இடத்தில் வைத்தேன்.</p>
<p>இழந்தவைகள் இழந்தவைகளாக இருந்துவிட்டுப் போகட்டும். இருப்பவைகள் வெறுமையாகாமல் ஏதாவது ஒன்றால் நிரப்பப்பட்டேயாகவேண்டும். அது மட்டும் புரிந்தது. ஷிவ்ராமுடன் எனக்கிருக்கிற நட்பும் நெருக்கமும் இப்போது இன்னும் அதிகமாய் கதவு திறந்துவிட்டன. திறந்த கதவுக்குப்பின் ஹோவெனப் பரந்து கிடக்கிற வாழ்வின் மீதிக்கு வேறு ஏதாவது வேண்டும்.</p>
<p>அறைக்குள்ளிருந்து வெளிவரும்போது சுவரில் சாய்த்து வைக்கப்பட்ட கிதார்களைப் பார்த்தேன். வா என்று என்னை இழுத்ததுபோல் நான் அதனருகில் போனேன். ஒரு கிதாரைக் கையில் எடுத்து மெதுவாய் அறுந்து போகாமல் மிஞ்சியிருந்த நரம்பில் விரலால் சுண்டினேன். &#8220;டிய்ங்&#8221; என்று அதிர்ந்து கிளம்பிய இசை தூசிகளைக் கிளப்பி அந்தப் பெரிய அறையின் மெளனத்தை ஊடுருவி நிறைந்தது.</p>
<img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/categories/chithran.wordpress.com/18/" /> <img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/tags/chithran.wordpress.com/18/" /> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/chithran.wordpress.com/18/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/chithran.wordpress.com/18/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/chithran.wordpress.com/18/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/chithran.wordpress.com/18/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/chithran.wordpress.com/18/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/chithran.wordpress.com/18/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/chithran.wordpress.com/18/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/chithran.wordpress.com/18/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/chithran.wordpress.com/18/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/chithran.wordpress.com/18/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=chithran.wordpress.com&blog=235394&post=18&subd=chithran&ref=&feed=1" /></div>]]></content:encoded>
			<wfw:commentRss>http://chithran.wordpress.com/2007/08/28/arai/feed/</wfw:commentRss>
		<slash:comments>1</slash:comments>
	
		<media:content url="http://1.gravatar.com/avatar/167f258ca8d521ae05fbc12e6086f005?s=96&#38;d=identicon&#38;r=G" medium="image">
			<media:title type="html">சித்ரன்</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>திருப்பம்</title>
		<link>http://chithran.wordpress.com/2007/08/28/thiruppam/</link>
		<comments>http://chithran.wordpress.com/2007/08/28/thiruppam/#comments</comments>
		<pubDate>Mon, 27 Aug 2007 20:09:27 +0000</pubDate>
		<dc:creator>சித்ரன்</dc:creator>
				<category><![CDATA[Uncategorized]]></category>
		<category><![CDATA[சித்ரன்]]></category>
		<category><![CDATA[சிறுகதைகள்]]></category>
		<category><![CDATA[தமிழோவியம்]]></category>

		<guid isPermaLink="false">http://chithran.wordpress.com/2007/08/28/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%ae%e0%af%8d/</guid>
		<description><![CDATA[தமிழோவியம் &#8211; தீபாவளி மலர் 2005 
குல்மொஹர் மரத்தில் போஸ்ட் பாக்ஸ் கட்டியிருந்த தெரு முக்கில் திரும்பும்போது செல்வாவின் கால்கள் தயங்கி நின்றன. அங்கிருந்து நாலாவது காம்பெளண்டின் பச்சை கேட்டில் ஜேவியம்மா நிற்கிறாளா என்று பார்த்தான். வாசல் மரத்தில் ஒரு காகத்தைத் தவிர மற்றபடி ஒருவரின் நடமாட்டத்தையும் காணோம். &#8220;அப்பாடா&#8221; என்று அவன் வாய் முணுமுணுத்தது. கூட வந்துகொண்டிருந்த வாசுவும் நின்று &#8216;என்னடா&#8217; என்றான் புரியாதமாதிரி.
&#8220;அந்தம்மா இருக்குதான்னு பாத்தேன். நல்ல வேளை ஆளக் காணோம். மத்தியானம் பாபு வீட்டுக்குப் [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=chithran.wordpress.com&blog=235394&post=17&subd=chithran&ref=&feed=1" />]]></description>
			<content:encoded><![CDATA[<div class='snap_preview'><br /><p><strong><em>தமிழோவியம் &#8211; தீபாவளி மலர் 2005 </em></strong></p>
<p>குல்மொஹர் மரத்தில் போஸ்ட் பாக்ஸ் கட்டியிருந்த தெரு முக்கில் திரும்பும்போது செல்வாவின் கால்கள் தயங்கி நின்றன. அங்கிருந்து நாலாவது காம்பெளண்டின் பச்சை கேட்டில் ஜேவியம்மா நிற்கிறாளா என்று பார்த்தான். வாசல் மரத்தில் ஒரு காகத்தைத் தவிர மற்றபடி ஒருவரின் நடமாட்டத்தையும் காணோம். &#8220;அப்பாடா&#8221; என்று அவன் வாய் முணுமுணுத்தது. கூட வந்துகொண்டிருந்த வாசுவும் நின்று &#8216;என்னடா&#8217; என்றான் புரியாதமாதிரி.</p>
<p>&#8220;அந்தம்மா இருக்குதான்னு பாத்தேன். நல்ல வேளை ஆளக் காணோம். மத்தியானம் பாபு வீட்டுக்குப் போலாம்னு வந்தப்ப கூட நின்னுட்டிருந்தா. அப்படியே திரும்பிப் போயிட்டேன்&#8221; என்றான். வாசு பச்சை கேட்டின் திசைநோக்கி ஒரு அலட்சியப் பார்வையை வீசிவிட்டு அதை அப்படியே செல்வாவிடம் திருப்பினான். &#8220;ஏண்டா இப்படி அந்தம்மாவுக்கு பயந்து சாவறீங்க!&#8221; என்றான் சலிப்பாக.</p>
<p>வாசு அப்படிக் கேட்டது கொஞ்சம் அவமானமாகத்தான் இருந்தது. செல்வா அவனுக்கு பதில் சொல்லாமல் நடந்தான். ஜேவியம்மா காம்பெளண்டை நெருங்கும்போது வழக்கம்போல ஒரு பதட்டச் சுழல் நெஞ்சில் மையம் கொண்டது. அதை முகத்தில் காட்டினால் போச்சு! வாசு அவன் அட்வைஸ் கட்டை அவிழ்க்க ஆரம்பித்து விடுவான். அத்தனை நேரம் கலகலப்பாகப் பேசிக்கொண்டு வந்தது இந்தத் தெரு முனை திரும்பியதும் திடீரென்று நின்று போய்விட்டது.</p>
<p>செல்வாவின் பிரச்சனைகள் எல்லாவற்றிற்கும் காரணம் ஜேவி சார் என்று சுருக்கமாக அழைக்கப்படுகிற ஜே. விஸ்வநாதன். அவரைச் சொல்லிக் குற்றமில்லை. அவர் பண்ணின முதல் தப்பு செல்வா படிக்கிற கல்லூரியில் அவனுக்கு லெக்ட்சரராக வந்து வாய்த்தது. மேலும் ஹெட் ஆ·ப் த டிபார்ட்மெண்ட்டாக வேறு இருந்து தொலைத்தார். இரண்டாவது தப்பு செல்வாவின் நண்பன் பாபுவின் வீட்டுக்கு அருகிலேயே நான்கு மாதத்துக்கு முன் குடிவந்து தொலைத்தது. மூன்றாவது தப்பு ஜேவியம்மா என்கிற இந்த பிசாசைக் கல்யாணம் செய்திருப்பது. (அதாவது அவள் ஜேவி சாரின் மனைவியாக இருக்கிறபடியால் ஜேவியம்மா என்று காலனியில் எல்லோராலும் அழைக்கப்பட்டாள் என்று குறிப்பிட வேண்டியதில்லை). நாலாவது மிக முக்கியமான தப்பு ஜேவி சார் தன் மனைவிக்கு அடங்கின புருஷனாய் எப்போதும் வளையவருவது.</p>
<p>ஜேவியம்மா என்கிற இந்த அம்மணிக்கு வேறு வேலையே இல்லை என்பதுபோல எப்போதும் வாசல் கேட்டிலேயே கையை ஊன்றிக்கொண்டு தெருவை வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பாள். பாபுவின் வீட்டுக்கு அடிக்கடி வந்து போகிற செல்வா தன் கணவனின் மாணவன் என்பதை அவள் எப்படித்தான் தெரிந்து கொண்டாளோ! செல்வாவுக்கு அன்றைக்கு ஆரம்பித்தது பிரச்சனை. ஒரு நாள் சாயங்காலம் செல்வா ஜேவி சாரின் வீட்டைத்தாண்டும்போது &#8220;ஏய்.. இங்க வா!&#8221; என்று கேட்டுக்குள்ளிருந்து அதிகாரம் தோய்ந்த குரல் வந்தது.</p>
<p>திடுக்கிட்டுத் திரும்பினபோது ஜேவியம்மா முகத்தில் ஒரு வில்லித்தனமான புன்னகையுடன் நின்றிருந்தாள். சுற்றிக்கட்டிய புடவைக்குள் இரட்டை நாடி உருவம். உருளும் கண்கள். பக்கத்தில் அவள் பெண். அவளுக்கு ஒரு பதினாறு பதினேழு வயசிருக்கும். அவளை பஸ் ஸ்டாப்பில் ஓரிரு முறை மார்பில் புத்தகங்களோடு பார்த்த ஞாபகம் வந்தது. வாசுவைக் கேட்டால் எங்கே படிக்கிறாள் என்று தெரிந்துவிடும். ஜேவியம்மா &#8216;க்கும்&#8217; என்று கணைத்துவிட்டு, &#8220;செல்வாதான ஒம்பேரு&#8221; என்றாள்.</p>
<p>தன் பெயர் அவளுக்கெப்படி தெரிந்தது என்று அவன் குழப்பமாய் யோசித்தான். ஆமாம் என்று தலையாட்டினான்.</p>
<p>&#8220;ஸ்டுடன்ட்டா லட்சணமா இல்லாம ரவுடி மாதிரி லுங்கிய எதுக்கு மடிச்சுக் கட்டியிருக்க? எறக்கி விடு. மாடியிலேர்ந்து ஜேவி சார் பாக்கறாரு பாரு&#8221;</p>
<p>செல்வா சரேலென்று லுங்கியை இறக்கிவிட்டான். பயத்துடன் நிமிர்ந்து மாடியைப் பார்த்தபோது அங்கே ஒரு ஜீவனையும் காணோம். ஜேவியம்மாவின் பெண் களுக் என்று வாயில் கைவைத்துச் சிரித்தாள். செல்வாவுக்கு அந்த நிமிஷம் அவளை ஓங்கி அறையவேண்டும் போல் இருந்தது.</p>
<p>&#8220;இந்தவாட்டி எக்ஸாம் ஒழுங்கா எழுதினியா?&#8221;</p>
<p>&#8220;ம்ம்?&#8221; என்றான் எரிச்சல் மாறாமல்.</p>
<p>&#8220;எக்ஸாம் பேப்பர் கட்டு எங்க வீட்டுக்குத்தான் வந்திருக்கு. உனக்கு நான் பாத்து மார்க் போட்டாதான் உண்டு. அவன் யாரு உங்கூட எப்பவும் லுங்கிய தொடை தெரிய தூக்கிக் கட்டிக்கிட்டே திரியறான். பேரென்ன?&#8221;</p>
<p>செல்வா துணுக்குற்று &#8220;யாரைக் கேக்கறீங்க?&#8221; என்றான் தெரியாத மாதிரி.</p>
<p>&#8220;ஹ! அதான் ஒசரமா.. தாடி வுட்டுட்டு&#8230; நடேசய்யர் பையன்தான? அவன் பேரென்ன?&#8221;</p>
<p>&#8220;வாசு&#8221;</p>
<p>&#8220;ம். அவன்தான். உங்க ப்ரண்ட்ஸ் செட்டுல எல்லார் ஜாதகமும் தெரியும். முக்குத் திட்டுல உக்காந்து அரட்டையடிக்கிறது. போற வர்ர பொட்டப் புள்ளைங்களைப் பாக்கறது.. ஒண்ணும் தெரியாதுன்னு நெனச்சுக்காத. ஒழுங்கான ஸ்டூடண்ட்டா நடந்துக்க!.. இல்லைன்னா எக்ஸாம் பேப்பர்ல கை வெக்கவேண்டியிருக்கும். நான் நெனச்சா உன்ன காலேஜிலேர்ந்தே தூக்கிருவேன் தெரியுமிலல? உங்கப்பா ஈ.பி-ல என்ஜினியர்தான? அவர் பேரக் கெடுத்துராத. இன்டெர்னல் மார்க் கூட என் கையிலதான் இருக்கு. நீ நல்ல பையனாதான் தெரியற. அந்த வாசுதான் செரியில்ல.&#8221;</p>
<p>செல்வா பொத்துக்கொண்டு வந்த கோபத்தை அடக்கிக்கொண்டான். இத்தனை விவரங்களை எங்கிருந்து சேகரித்தாள் என்று ஆச்சரியமும் வந்தது. ஆனாலும் இப்படியொரு ப்ளாக்மெயிலை அவன் நிச்சயம் எதிர்பார்க்கவில்லை. ஒரு வேளை அந்தம்மா சொல்வது உண்மையாகக்கூட இருக்கக்கூடும். அவனை பெயிலாக்கி விடக்கூடிய சகல அதிகாரமும் அவளுக்கு இருக்கிறதோ என்னவோ! என்ன சொல்வது, செய்வதென்று தெரியாமல் திருதிருவென்று முழித்துக்கொண்டு நின்றான்.</p>
<p>ஜேவியம்மா அவன் குழப்பத்தை பொருட்படுத்தாமல் சட்டென்று குரலைத் தணித்துக்கொண்டு &#8220;சரி எனக்கு ஒரு ஹெல்ப் பண்றியா செல்வா&#8221; என்றாள்.</p>
<p>அவனது பதிலுக்குக் காத்திராமல் முந்தானை முடிச்சிலிருந்து ஒரு நூறு ரூபாய்த் தாளைப் பிரித்து அவனிடம் கொடுத்து, நைட் டிபனுக்கு பூரி மாவு தீர்ந்து போய்விட்டதாகவும், கிச்சான் கடைக்குப் போய் ஒரு அரைக்கிலோ வாங்கிக் கொண்டு வருகிறாயா என்றும் பவ்யமாய்க் கேட்டாள்.</p>
<p>முக்குத்திட்டில் உட்கார்ந்து பொறுமலோடு மீதிக் கதையைச் சொன்னபோது வாசு கபகபவெனச் சிரித்தான். &#8220;நல்ல வேளை நானும் பாபுவும் வேற காலேஜ். தப்பிச்சோம். பாவம்டா நீ&#8221; என்றான். &#8220;அந்தம்மாவப் பத்தி காலனியே பேசுது.. இது பரவாயில்ல. பாபுவோட அப்பாகிட்ட வத்தி வெச்சுருக்குது. உங்க பையன சிகரெட்டும் கையுமா பாத்தேன்னு. எப்டி? அவனுக்கு வீட்ல சரியான மாத்து. பக்கத்து வீட்டு குடும்பப் பிரச்சனைக்குள்ளயெல்லாம் மூக்க நுழைக்குதாம். அந்தம்மாவை பாரதி மகளிர் மன்றத்துல தெரியாம மெம்பராக்கிட்டோம்னு கனகா மாமி புலம்புது. ஒரே டாமினேஷன். காலைல காய்கறிக்காரனப் புடிச்சு மெரட்டிட்டிருந்துச்சாம். இஸ்திரி மாணிக்கம் சொல்றான். அந்தம்மா புருஷன் வேற ஒரு வாயில்லாப் பூச்சி. அந்தாளுக்கு கூட டெய்லியும் அடி உழுதோ என்னமோ வூட்டுல. அவரு பொண்ணு சுதா கொஞ்சம் அம்சமா இருக்குது. என்ன அவங்கம்மா மாதிரி கொஞ்சம் லொள்ளு..&#8221;</p>
<p>என்னைவிட அதிகம் பாதிக்கப்பட்டவனைப் போல அன்று வாசு நிறுத்தாமல் பேசிக்கொண்டிருந்தான்.</p>
<p>ஜே.வி சார் ஏன் அப்படியிருக்கிறார் என்று யோசித்தபோது எரிச்சல் மண்டியது. இப்படியுமா ஒருத்தர் பெண்டாட்டியிடம் பயந்த பேடியாக இருப்பார்? பெண்டாட்டியிடம்தான் இப்படியென்றால் வகுப்பில் கூடவா? பாடம் எடுக்கும்போது குரலே வெளிவராது. சளசளவென்று வகுப்பில் எல்லாரும் பேசிக்கொண்டிருக்கிற சத்தம் மட்டும் கேட்டுக்கொண்டிருக்கும். அவர் முதுகு காட்டிப் பாடம் நடத்துகிறபோது கடைசி டெஸ்க் நாகராஜ்கூட அடிக்கடி ரகசியமாய் வெளியே போய்விட்டு திரும்ப வந்து உட்காருவான். வகுப்பில் யாருக்கும் அவரிடம் பயம் என்பதே கிடையாது. இவரெல்லாம் எப்படி ஹெச்.ஓ.டி ஆனார் என்பதே பெரிய புதிர். சின்னதாய் ஒரு முணுமுணுப்புக் கேட்டால்கூட சரேலென்று திரும்பி புருவம் உயர்த்தி என்ன என்று முறைப்பாய் கேட்கிற லெட்சரர் மணிவாசகத்தின் தோரணை ஏன் இவரிடம் இல்லாமல் போய்விட்டது? கோபம் வந்தால் நோட்டுப் புத்தகங்களை கதவுக்கு வெளியே விசிறியடிக்கிற புரபசர் ராமலிங்கத்தின் கம்பீரம் இவருக்கு ஏன் வாய்க்கவில்லை என்றெல்லாம் செல்வா நிறைய யோசித்திருக்கிறான். ஜேவியம்மா மாதிரி ஒரு நாள்கூட அவரைக் காம்பெளண்ட் கேட்டருகில் வைத்துப் பார்த்ததில்லை. மனிதர் வந்தால் வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடப்பார் போல. ஒரு சில சமயம் ஜேவி சாரின் வீட்டைத் தாண்டும்போது அவரிடம் ஏதோ சண்டையிடுவதைப்போல ஜேவியம்மாவின் குரல் ஓங்கி ஒலித்துக்கொண்டிருக்கும். மறுகுரலாய் ஒரு போதும் அவரின் குரல் கேட்டதில்லை.</p>
<p>காலனிக்குள் பார்க்கிற ஆட்களெல்லாம் ஜேவியம்மாவைப்பற்றி மாய்ந்து மாய்ந்து எதையாவது சொல்லிவிட்டுத்தான் போனார்கள். அவளுடன் பேசுவதற்கே பயந்து காலனி மாமிகளும், ஆண்ட்டிகளும் விலகிப்போனார்கள். ஜேவியம்மாவுக்கும் பாபுவின் அம்மாவுக்கும்கூட ஒருநாள் குடுமிப்பிடி சண்டையாகிவிட்டது. கனகா மாமி இடைப்புகுந்து தடுக்காமலிருந்திருந்தால் ரணகளமாயிருக்குமாம். ச்சே&#8230; என்ன பொம்பளை என்று தோன்றியது செல்வாவுக்கு. இப்படியுமா ஒரு பஜாரி?!.</p>
<p>முந்தா நேத்து கிச்சான் கடை தட்டி மறைப்பில் நின்று செல்வா திருட்டு தம் அடித்துக்கொண்டிருக்கும் போது ஜேவியம்மா பார்த்துத் தொலைத்துவிட்டாள். &#8220;உங்கப்பாவை மார்க்கெட்ல பாத்தப்போ சொல்லலாம்னு நெனச்சேன்&#8221; என்று சின்னதாய் மிரட்டி அவனிடம் எலக்ட்ரிசிட்டி பில் கட்டிவிட்டு வரச்சொன்னாள்.</p>
<p align="center">ooOoo</p>
<p>இன்றைக்கும் தெருமுனையில் தயங்கித் திரும்பியதுகூட அவளுக்கு பயந்துதான். பச்சை கேட்டைக் கடக்கும்போது பயந்த மாதிரியே திடீரென்று எங்கிருந்தோ காம்பெளண்டுக்குள் தோன்றினாள் ஜேவியம்மா. பின்னாலேயே வாலைப் பிடித்துக்கொண்டு அவள் பெண் சுதா. ஜேவியம்மா செல்வாவைப் பார்த்து &#8220;ஓய்&#8230;&#8221; என்றாள். செல்வா வலுக்கட்டாயமாக வரவழைத்துக்கொண்ட புன்னகையோடு அவளை ஏறிட்டான். வாசு மடித்துக்கட்டியிருந்த லுங்கியை அவிழ்த்து வேண்டுமென்றே தொடை தெரிய தூக்கிக் கட்டிக்கொண்டான். தொண்டை நீரை க்ர்ர் என்று பண்ணிவிட்டு கேட்டருகேயிருந்த விளக்குக் கம்பத்தினடியில் பான் பராக்கைத் துப்பினான். அவன் தினம் துப்பித் துப்பியே அந்தக் கம்பம் நாறிப்போய்விட்டது. அவனுக்கென்ன! ஜேவியம்மாவைப் பார்த்து பயப்படுவதற்கான காரணம் எதுவும் அவனுக்கில்லை. அவன் ஜேவி சாரின் மாணவன் அல்ல. இந்த மாதிரி ஆயிரம் பண்ணுவான். செல்வாவுக்கு அப்படியெதுவும் செய்துவிடக்கூடிய துணிச்சலோ, சுதந்திரமோ எதுவும் இந்த வீதிக்குள் பறிபோய் ரொம்ப நாளாகிவிட்டது.</p>
<p>வாசு கொஞ்சம் தள்ளிப் போய் நின்றுகொண்டு ஜேவியம்மாவின் பெண்ணை லேசாய் ஓரக்கண்ணால் பார்க்க ஆரம்பிக்க இன்றைக்கு என்ன வம்போ என்று யோசித்தபடி செல்வா கேட்டருகில் போனான். சொல்லப்போனால் இதெல்லாம் செல்வாவுக்குப் பழகியும் விட்டது. ஜேவியம்மா எதையோ சொல்ல வாயெடுத்தாள். அதற்குள் தெருவில் ஏதோ அரவம் கேட்க நான்கு பேரும் திரும்பினார்கள். திபுதிபுவென்று யாரோ யாரையோ துரத்திக்கொண்டு ஓடிவந்தார்கள். என்னவென்று புரியாமல் வயிற்றில் உருண்ட கலவரத்துடன் பார்த்தபோது, முதலில் ஓடிவந்தவன் சடாரென்று கனகா மாமியின் வீட்டுக்குள் புகுந்துவிட்டான். துரத்திக்கொண்டு வந்தவனை அடையாளம் தெரிந்தது. கறிக்கடை முருகேசு! வந்த வேகத்தில் அவனும் மாமியின் வீட்டுக்குள் பாய்ந்தான். அடுத்ததாக கனகாமாமியின் கூக்குரலுடன் வீட்டு அடுக்களையிலிருந்து பாத்திரங்கள் உருள்கிற சப்தம் கேட்டது. செல்வாவும் வாசுவும் என்னவென்று புரியாமல் நிற்கும்போதே கூட்டம் சேர்ந்துவிட்டது. இப்போது முருகேசு அந்த ஆளை தரதரவென்று வெளியே இழுத்துக்கொண்டு வந்து தெருப் புழுதியில் போட்டு மிதிக்க ஆரம்பித்தான். சகாதேவன் வந்து அவனை விலக்கி என்னவென்று விசாரித்தார்.</p>
<p>&#8220;பட்டபகல்ல சுப்ரமணிய கவுண்டர் வூட்ல புகுந்து திருடப்பார்த்தான். நான் பாத்தாங்காட்டி ஆச்சு. அவ்ளோ லேசுல வுட்ருவமா? தொரத்திப் புடிச்சமில்ல&#8230; தே&#8230;.. மவன&#8221; என்று சொல்லிவிட்டு அவனை மறுபடி உதைத்தான். விஷயம் கேள்விப்பட்டவுடன் கூடியவர்கள் ஆளுக்கொரு மிதி மிதித்தார்கள். வாசுவும் கூட்டத்தில் புகுந்து அருகில் சென்று பொளேர் என்று அறைந்தான். &#8220;எத்தன பேருடா கெளம்பியிருக்கீங்க&#8230;&#8221; என்று இடது கையால் அவனது குரல் வளையைப் பிடித்துக் கேட்டான். ஒரு முறை திரும்பி ஜேவியம்மாவின் பெண்ணை ஸ்டைலாகப் பார்த்தான். செல்வா கனகா மாமியின் காம்பெளண்டு ஓரமாய் ஒதுங்கி நின்றிருந்தான்.</p>
<p>எல்லோரும் செத்த பாம்பை அடிக்கிறார்கள். பேசக்கூட திராணியற்ற நிலைக்குத்தான் முருகேசு முதலிலேயே அந்த ஆளை அடித்துத் துவைத்திருந்தான். மேலும் அந்த ஆளிடமிருந்து வீசின விஸ்கி வாசனை அவன் குடித்திருந்தான் என்பதைச் சொல்லியது. அவன் ஒரு பிச்சைக்காரனைப் போலிருந்தான். அவன் கட்டியிருந்த லுங்கி முருகேசு மிதித்த மிதியில் கிழிந்து தொங்கியது. அவன் இப்போது எதையோ முனகியபடி தரையில் கிடந்தான்.</p>
<p>ஜேவியம்மா திடீரென காட்சிக்குள் வந்தாள். &#8220;கொஞ்சம் நகருங்க&#8230; நான் விசாரிக்கிறேன்&#8221; என்று கூட்டத்தை விலக்கி அந்த ஆளைப் பார்த்தாள். கூடவே அவள் பெண்ணும் எட்டிப்பார்த்தது. அடிவாங்கி அவ்வளவு நேரம் தொய்ந்து போய்க்கிடந்தவனுக்கு எங்கிருந்துதான் தெம்பு வந்ததோ&#8230;தெரியவில்லை. சட்டென்று எழுந்தான். &#8220;தாய்க்குலமே&#8230;. அடிக்கிறாங்க தாய்க்குலமே..&#8221; என்றான் போதைக் குழறலாய். ஏற்கெனவே பாதி தளர்ந்திருந்த அவன் லுங்கி முழுவதுமாய் அவிழ்ந்து விழுந்ததை அவன் பொருட்படுத்தாமல் தள்ளாடியபடி ஜேவியம்மாவின் திசையை நோக்கி வேகமாய் நெருங்கினான். ஜேவியம்மாவும் அவள் பெண்ணும் பின்வாங்கினார்கள்.</p>
<p>&#8220;ஏய்&#8230; போங்கடீ வீட்டுக்கு.. இங்க என்ன வேல உங்களுக்கு&#8230;&#8221; திடீரென ஒரு குரல் கூட்டத்தைப் பிளந்து வந்தது. எல்லோரும் திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தபோது ஜே.வி சார் நின்றிருந்தார். &#8216;இருங்க&#8230; இந்தாளை&#8230;&#8221; என்று ஆரம்பித்த ஜேவியம்மாப் பார்த்து மறுபடி அவர் இரைந்தார்.</p>
<p>&#8220;இன்னும் ஒரு நிமிஷம் இங்க நின்னீன்னா அறை விழும். போடீ&#8230;&#8221;</p>
<p>ஜேவியம்மா போகாமல் அவரை முறைத்துப் பார்த்தாள். &#8220;உங்களுக்கென்ன தெரியும்? காலனிக்குள்ள இவ்ளோ பெரிய ப்ரச்சனை நடக்குது&#8230;&#8221; என்று மறுபடி ஆரம்பித்தவளின் கன்னத்தில் ஆக்ரோஷமாய் &#8220;சப்ப்&#8221; என்று ஜேவி சாரின் கை இறங்க.. கூட்டம் ஸ்தம்பித்து நின்றது.</p>
<p>&#8220;போடீன்னா&#8230;&#8221;</p>
<p>பொறி கலங்க விழுந்த அறையில் சட்டென்று கண்களில் மல்கிய நீருடன் ஜேவியம்மா கேட்டைத் திறந்துகொண்டு விருட் என்று வீட்டுக்குள் போனாள். மகளும் பின்னாலேயே. &#8220;ஸ்டுப்பிட் ·பெல்லோஸ்..&#8221; என்று கோபமாய் முணுமுணுத்துவிட்டு ஜேவி சாரும் வீட்டுக்குள் போய் கதவை அறைந்து சாத்தினார். செல்வா திகைப்புடன் வாசுவைப் பார்த்தபோது அவன் பேயறைந்த மாதிரி நின்றிருந்தான். என்ன நடந்ததென்று இருவருக்கும் ஒரு நிமிடம் ஒன்றுமே புரியவில்லை. காலனியில் யாரும் எதிர்பார்க்காத அதிர்ச்சித் திருப்பம் அது. செல்வாவுக்கு ஏனோ கொஞ்சம் குதூகலமாயிருந்தது. இனி ஜேவியம்மாவுக்கு பயந்து நடக்க வேண்டியதிருக்காது என்றுதான் உடனே அவன் மனதில் தோன்றியது. வீட்டில் அவர்தான் ஆம்பிளை என்று ஜேவி சார் கூட்டத்திற்கு முன் நிரூபித்துவிட்டுப் போய்விட்டார்.</p>
<p>அடுத்தநாள் ஜேவி சாரின் பச்சை கேட்டைக் கடக்கும்போது அந்தக் காம்பெளண்டு வெறிச்சோடிக் கிடந்தது. வாசு லேசாய்த் தயங்கி உள்ளே எட்டிப் பார்த்துவிட்டுச் சொன்னான்.</p>
<p>&#8220;என்ன இருந்தாலும் அப்படி பப்ளிக் முன்னால ஜேவி சார் அப்படி நடந்திருக்கக் கூடாதுடா. ரொம்ப பாவமா இருந்துச்சு அந்தம்மாவப் பாக்கறதுக்கு.. எனக்கே கொஞ்சம் கஷ்டமா இருந்துச்சுன்னா பாத்துக்கோயேன். நீ என்ன நினைக்கிற இதைப்பத்தி&#8221; என்றான் வாசு. இத்தோடு பதிமூன்றாவது தடவையாக அதைச் சொன்னான்.</p>
<p>அந்த கேட்டை நெருங்கியபோது வாசு மடித்துக்கட்டியிருந்த லுங்கியை அநிச்சையாய் தளர்த்திவிட்டுக் கொண்டதையும், இன்று அவன் விளக்குக் கம்பத்தினருகில் எச்சில் துப்பவில்லை என்பதையும் கவனித்தான் செல்வா.</p>
<p>&#8220;சரிதான்&#8221; என்றான்.</p>
<img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/categories/chithran.wordpress.com/17/" /> <img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/tags/chithran.wordpress.com/17/" /> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/chithran.wordpress.com/17/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/chithran.wordpress.com/17/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/chithran.wordpress.com/17/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/chithran.wordpress.com/17/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/chithran.wordpress.com/17/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/chithran.wordpress.com/17/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/chithran.wordpress.com/17/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/chithran.wordpress.com/17/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/chithran.wordpress.com/17/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/chithran.wordpress.com/17/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=chithran.wordpress.com&blog=235394&post=17&subd=chithran&ref=&feed=1" /></div>]]></content:encoded>
			<wfw:commentRss>http://chithran.wordpress.com/2007/08/28/thiruppam/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:content url="http://1.gravatar.com/avatar/167f258ca8d521ae05fbc12e6086f005?s=96&#38;d=identicon&#38;r=G" medium="image">
			<media:title type="html">சித்ரன்</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>ஆரஞ்சுப் பழங்கள்</title>
		<link>http://chithran.wordpress.com/2007/08/28/aaranjupazangal/</link>
		<comments>http://chithran.wordpress.com/2007/08/28/aaranjupazangal/#comments</comments>
		<pubDate>Mon, 27 Aug 2007 20:05:44 +0000</pubDate>
		<dc:creator>சித்ரன்</dc:creator>
				<category><![CDATA[Uncategorized]]></category>
		<category><![CDATA[சித்ரன்]]></category>
		<category><![CDATA[சிறுகதைகள்]]></category>
		<category><![CDATA[செந்தமிழ் டாட் காம்]]></category>

		<guid isPermaLink="false">http://chithran.wordpress.com/2007/08/28/%e0%ae%86%e0%ae%b0%e0%ae%9e%e0%af%8d%e0%ae%9a%e0%af%81%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%b4%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/</guid>
		<description><![CDATA[செந்தமிழ் டாட் காம் 2006
இரவு மணி ஒன்பதரை ஆகிவிட்டது. முதல் தெரு முக்கில் சோடியம் விளக்குக்கடியில் அவர்கள் நின்று பேசிக்கொண்டிருந்தார்கள். வேணு விரல்களினிடையே சிகரெட் சாம்பலைத் தட்டினான். இந்த இரண்டு மணி நேரத்தில் நாலாவது சிகரெட். ஒரு நீண்ட பேச்சுக்கப்புறம் விடைபெறும் தருணம் போன்ற சூழ்நிலை இருவருக்குள்ளும் விரவி நின்றது. பெங்களூர்க் காற்று குளிர் கண்டிருந்தது. யாரையோ இறக்கிவிட்டு ஒரு ஆட்டோ திரும்பியது. மற்றபடி ஆள் நடமாட்டமற்று தெரு நீண்டிருந்தது.கார்த்தி மறுபடி வாட்சைப் பார்த்தான். அதற்குள் ஒன்பதரை மணி ஆகிவிட்டது [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=chithran.wordpress.com&blog=235394&post=16&subd=chithran&ref=&feed=1" />]]></description>
			<content:encoded><![CDATA[<div class='snap_preview'><br /><p><span class="style7"><span style="font-size:x-small;font-family:Latha;"><strong><em>செந்தமிழ் டாட் காம் 2006</em></strong></span></span></p>
<p><span class="style7"><span style="font-size:x-small;font-family:Latha;">இரவு மணி ஒன்பதரை ஆகிவிட்டது. முதல் தெரு முக்கில் சோடியம் விளக்குக்கடியில் அவர்கள் நின்று பேசிக்கொண்டிருந்தார்கள். வேணு விரல்களினிடையே சிகரெட் சாம்பலைத் தட்டினான். இந்த இரண்டு மணி நேரத்தில் நாலாவது சிகரெட். ஒரு நீண்ட பேச்சுக்கப்புறம் விடைபெறும் தருணம் போன்ற சூழ்நிலை இருவருக்குள்ளும் விரவி நின்றது. பெங்களூர்க் காற்று குளிர் கண்டிருந்தது. யாரையோ இறக்கிவிட்டு ஒரு ஆட்டோ திரும்பியது. மற்றபடி ஆள் நடமாட்டமற்று தெரு நீண்டிருந்தது.கார்த்தி மறுபடி வாட்சைப் பார்த்தான். அதற்குள் ஒன்பதரை மணி ஆகிவிட்டது என்றான். அவன் அப்படிச் சொல்வது இரண்டாவது தடவை. அவனுக்கு நேரமாகிவிட்டது என்பதை மறைமுகமாக உணர்த்துகிறான். வேணுவுக்குக் கிளம்ப மனசில்லை. இப்படி யாருடனாவது நின்று மனம்போன போக்கில் எதையாவது பேசிக்கொண்டேயிருக்கலாம் என்று தோன்றியது. அல்லது இப்படியே டவுன் பஸ் ஏறி மெஜஸ்டிக் போய் வேறொரு பஸ்ஸோ ட்ரெயினோ பிடித்து கோயமுத்தூருக்குப் போய்விடலாம் என்று தோன்றியது.</p>
<p>இப்போதைக்கு அது சாத்தியமில்லை. அவனுக்காக பெரியம்மாவும் பெரியப்பாவும் காத்துக் கொண்டிருப்பார்கள். இன்னும் கொஞ்ச நேரம் அவனைக் காணாவிடில் அவர்கள் கார்த்தியின் வீட்டுக்குக்கே தேடி வந்து விடக்கூடும். வேணு அவனிடம் விடை பெற்றுக்கொண்டு ஆர்.ஆர் லே-அவுட்டை நோக்கி நடக்கத் தொடங்கினான். ஒரு ஹால்ஸ் மிட்டாயை பிரித்து வாயில் அடக்கிக் கொண்டான். கையில் வைத்திருந்த •போல்டரில் அன்று அவனுக்குக் கிடைத்த வேலையின் அப்பாயிண்ட் ஆர்டர் ஏகத்துக்கு கனப்பதுபோல் உணர்ந்தான். அதை அந்தக் கம்பெனியிலிருந்து வெளியே வந்தவுடன் கிழித்துப்போட்டுவிடத்தான் விருப்பமாயிருந்தது.</p>
<p>பெரியப்பாவுக்குத் தெரிந்த ஏதோ பெரிய மனிதரின் சிபாரிசின் பேரில் கிடைத்த வேலை. பெரியப்பா அவனுக்காக ரொம்பவே சிரமம் எடுத்துக்கொள்கிறார். ஆர்டர் கையில் கிடைத்தவுடன் உடனே கொண்டுவந்து பெரியப்பாவிடம் காண்பித்திருக்கவேண்டும். ஆனால் ஏனோ அது அவனுக்குத் தோன்றவில்லை. அவன் நேராக கார்த்தியைப் பார்க்கப் போய்விட்டான்.</p>
<p>கார்த்தியிடம் சொல்லிவிட்டுக் கிளம்பினான். தயக்கம் பின்னி இழுக்கிற கால்களுடன் பெரியம்மாவின் வீட்டை நெருங்கும்போது பெருமூச்சாக வந்தது. கடந்த பத்து நாளாக தவிர்க்க முடியாமல் தினசரி இந்த உணர்வுதான். அவன் நினைத்தமாதிரியே பெரியம்மாவும் பெரியப்பாவும் வாசற்படியிலேயே உட்கார்ந்து கொண்டிருந்தார்கள். அவர்களுடன் ரோஸ் நிற நைட்டியணிந்த எதிர்வீட்டுப் பெண்ணும் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தது. இவனைப்பார்த்ததும் எழுந்துகொண்டது. அவள் கை அநிச்சையாய் நைட்டியை கழுத்துப்பக்கம் இழுத்துவிட்டுக்கொண்டது.</p>
<p>&#8220;நான் சொன்னேன்ல? வேணுன்னு.. அது இவந்தான்.&#8221; என்றார் பெரியம்மா அந்தப் பெண்ணிடம். அறிமுகப்படுத்திவைத்த பாவத்துக்கு &#8220;ஹலோ&#8221; என்றான் வேணு. அவளும் தயக்கமாய் ஒரு ஹலோ சொல்லிவிட்டு &#8216;வர்றேன் ஆன்ட்டி&#8217; என்று எழுந்து போய்விட்டாள்.</p>
<p>&#8220;உனக்காகத்தான் காத்துட்டிருக்கோம். இவ்வளவு நேரம் எங்க போயிட்ட?&#8221; என்றார் பெரியப்பா.  பெரியம்மா எதுவும் கேட்காமல் வழக்கமான புன்சிரிப்புடன் அவனைப் பார்த்தார்.</p>
<p>உள்ளே போனதும் முதல் வேலையாய் அப்பாயிண்ட் ஆர்டரை எடுத்து நீட்டினான் அவன். &#8220;செலக்ட் பண்ணிட்டாங்க பெரீப்பா! திங்கக்கிழமைலேர்ந்து வரச்சொன்னாங்க&#8221;</p>
<p>&#8220;தெரியும். பின்ன கெடைக்காமலா இருக்கும்? பெரிய சிபாரிசு&#8221;</p>
<p>பெரியப்பா அவனை முதுகில் தட்டிக் கொடுத்தார். &#8220;நல்ல கம்பெனி. அங்கெல்லாம் வேல கெடைக்கறது கஷ்டம். அப்படியே கெட்டியா புடிச்சு படிப்படியா முன்னேறப்பாரு..&#8221; என்றார். பிறகு டைனிங் டேபிள் கூடையிலிருந்து ஒரு ஆரஞ்சுப் பழத்தை எடுத்து சுளைகளை உரித்துக்கொண்டே மேலும் சில உபதேசங்கள் சொன்னார். அவர் அனுபவத்துக்கு அவை எல்லாம் சரியான உபதேசங்களே என்றாலும் அவனுக்கு அதில் மனம் லயிக்கவில்லை. வெறுமனே தலையாட்டிக் கொண்டு உட்கார்ந்திருந்தான். பெரியப்பா உரித்த சுளைகளை தட்டில் வைத்து வேணுவிடம் நீட்டினார். பெரியம்மா சமையல் முடிக்கிறவரை அதைச் சாப்பிடுமாறு சொன்னார்.  வேண்டாம் என்று சொன்னால் பெரியப்பா என்ன சொல்வார் என்று தெரியும். அவன் தட்டிலிருந்து பேருக்கு ஒன்றை எடுத்து விழுங்கிக்கொண்டான். பெரியம்மா அடுப்பில் குக்கரை வைத்துவிட்டு வந்தார். என்ன மாதிரி வேலை, எத்தனை மணிக்குப் போகவேண்டும், கேண்டீன் இருக்கிறதா என்றெல்லாம் விசாரித்தார். பிறகு, வேணு ஒரு வருடம் முன்பே இங்கே வந்திருந்தால் எப்போதோ அவனுக்கு வேலை கிடைக்கச் செய்திருக்கலாமென்றும், ஒரு வருடத்தை அவன் வீணாய் கழிக்க நேரிட்டது குறித்தும் சொல்லிக் கொண்டிருந்தார். அதைச் சொல்வது பத்தாவது தடவை. வேணு வலுக் கட்டாயமாய் வரவழைத்துக் கொண்ட புன்னகையுடன் அமைதியாய் உட்கார்ந்து கொண்டிருந்தான். திடீரெனத் தோன்றிய அலுப்பிலும் மனத் தளர்விலும் அவனுக்குப் பேசாமல் போய் படுத்துக்கொள்ள வேண்டும் என்று தோன்றியது. சாப்பிடாமல் படுப்பதாவது! அப்புறம் பெரியம்மாவிடமிருந்து உரிமையாய் பாட்டுக் கேட்க நேரிடும்.</p>
<p>கொஞ்ச நேரத்தில் சமையல் முடிந்து பெரியம்மா வந்தார். அவனை முகம் கழுவி விட்டு வரச் சொன்னார். பாத்ரூமில் பக்கெட்டில் தண்ணீர் நிரப்பி வைத்திருக்கிறதென்றார். டர்க்கி டவலை நீட்டினார். அவனிடமிருந்து பெருமுச்சொன்று புறப்பட்டது. பாத்ரூமில் குழாயைத் திறந்தால் தண்ணீர். என்றாலும் பெரியம்மா தவறாமல் அவனுக்காக பக்கெட்டில் நிரப்பி வைத்து விடுவதும், கைக்கெட்டுகிற தூரத்தில் இருக்கிற துண்டை அவன் முகம் கழுவினதும் நீட்டுவதும்.. ஹ¥ம்ம்.. கழுவின முகத்தைத் துடைத்துவிடுவது ஒன்றுதான் பாக்கி. இது தினசரி நடக்கிற விஷயம்தான். எல்லாமே ஒரு கனிந்த அக்கறையின் பொருட்டுதான் என்றாலும் அவனுக்கு அது சலிப்பாய் இருந்தது. எல்லாமே அவனே செய்து கொள்ளக் கூடிய சின்னச் சின்ன வேலைகள்தான். ஆனால் அதையெல்லாம் எதற்காக இப்படி பெரியம்மா இழுத்துப் போட்டுக் கொண்டு செய்கிறாள் என்று லேசான எரிச்சல் கூட எழுந்தது அவனுக்கு.</p>
<p>முகம் கழுவும்போது திங்கட்கிழமை முதல் வேலைக்குப் போகவேண்டுமே என்ற நினைப்பு எழுந்தது. உடனே தலையை உலுக்கிக் கலைத்தான். தொடர்ந்து பெரியம்மா வீட்டிலே இருக்க வேண்டிய சூழ்நிலை பற்றி அதற்குமுன் நிறைய யோசித்தாக வேண்டும். வேணு ரொம்பக் குழப்பமாக உணர்ந்தான்.</p>
<p>ஏனென்று தெரியாமல் அவனுக்குள் ஒரு வாரமாய் தொடர்ந்து கொண்டிருக்கிற அவஸ்தை. இப்போது வேலை கிடைத்ததும் இன்னும் அதிகமாகிவிட்டது. வேறு யாராவதாக இருந்திருந்தால் பெரியம்மாவின் இத்தகைய<br />
கவனிப்பில் உருகிப் போயிருப்பார்கள்தான். கவனிப்பென்றால் சும்மா அப்படி இப்படி இல்லை. ராஜ கவனிப்பு! சொந்தப் பையனை எப்படி கவனித்துக்கொள்வார்களோ அப்படி! ஆனால் வேணு அதை காலில் குத்தின முள்ளை அகற்றிய பின்னும் இருக்கிற நெருடல் உணர்வு மாதிரி உணர்ந்தான். இதென்ன தவழ்கிற குழந்தைக்கு அளிக்கிற மாதிரி முழு நேர கவனிப்பு? விருந்தாளிகளைக் கவனிக்கிற மாதிரி சதா உபசரிப்பு. கூட்டணிக்கு இந்தப் பெரியப்பா வேறு. ஆரஞ்சுப் பழத்தை எனக்கு உரித்துச் சாப்பிடத் தெரியாதா?</p>
<p>பெரியம்மாவுக்கும் பெரியப்பாவுக்கும் குழந்தைகள் இல்லை. வேணுவை இத்தனை கவனிப்பதற்கு அதுதான் காரணமோ என்னமோ!? இருந்தாலும் இந்த கவனிப்பு எனக்கு முள் படுக்கை மாதிரி இருக்கிறது என்று சத்தம் போட்டுச் சொல்ல வேண்டும்போல் இருந்தது அவனுக்கு! வேணு சின்னப் பையனாய் இருந்தபோது ஸ்கூல் லீவு விட்டால் அடிக்கடி இங்கே வருகிற வழக்கம்தான். அப்போதெல்லாம் பெரியவர்களின் வேலைக்கும் அரட்டைக்கும் நடுவில் அவன் செய்கிற குறும்பும், புதுசு புதுசாய் எதையாவது நோண்டிக் கொண்டிருக்கிற ஆர்வமும், விளையாட இடமும், விளையாட்டுப் பொருட்கள் தேடுகிற மும்முரமும் மட்டுமே அப்போதிருந்தது. அப்போதிருந்த மாதிரியே அந்தக் கவனிப்பும் அன்பும் பெரியம்மாவிடம் இன்றைக்கும் மாறாமல்தான் இருக்கிறது. ஆனால் அவன்தான் வளர்ந்துவிட்டான். இப்போது மனசில் குடிவந்துவிட்ட பெரிய மனுஷத்தனத்தால் அதை முழுசாக ஏற்றுக்கொள்ள முடியாமல் மறுக்கத் தோன்றுகிறது.</p>
<p>பெரியப்பா வேணுவின் அப்பாவுக்கு ஏதோ விஷயமாய் •போன் பண்ணியதிலிருந்துதான் எல்லாமே ஆரம்பமானது. அவன் படித்துவிட்டு வேலையில்லாமல் வெட்டியாய் சுற்றிக் கொண்டிருப்பதாக அவன் அப்பா சும்மா இருக்காமல் பெரியப்பாவிடம் புலம்பிவிட்டார்.</p>
<p>&#8220;இதெல்லாம் ஒரு பிரச்சனையா? அவன இங்க பெங்களூர்க்கு அனுப்பு சாரங்கா! ஒரு வாரத்துல வேல வாங்கித்தர்றேன். இங்கிருந்தேகூட வேலைக்கு போய் வந்திட்டிருக்கட்டும்.&#8221;</p>
<p>போனை கீழே வைத்த கையோடு ஒரு மூட்டை உபதேசங்களையும், ட்ராவல் பேகையும் கையில் கொடுத்து அப்பா அவனை பெரியப்பாவிடம் அனுப்பிவைத்துவிட்டார். இதோ பெங்களூருக்கு வந்து பத்து நாட்களாகிவிட்டது. சொன்னபடி பெரியப்பா ஒரே வாரத்தில் வேலையும் வாங்கிக் கொடுத்துவிட்டார். அவனுக்கு வேலை கிடைத்த அலுவலகம் மல்லேஸ்வரம் ஏரியாவில் ரொம்ப பந்தாவாகப் பெரியதாகத்தான் இருந்தது. அதில் அட்மின் செக்ஷனில் ட்ரெயினியாக சேரச் சொல்லியிருக்கிறார்கள். ஒரு வருஷத்துக்கப்புறம் நிரந்தரமாக்குவார்களாம்.</p>
<p>எல்லாம் சரிதான். பெரியப்பாவின் சிபாரிசு பாதாளம் வரை பாய்ந்துவிட்டது. பின்னே இன்டர்வ்யூவில் சுரத்தேயில்லாமல் பதில் சொன்ன அவனை வேலைக்கு எடுத்துக் கொண்டார்கள் என்றால் சும்மாவா? அங்கே இன்டர்வ்யூவுக்குப் போவதற்கேகூட அவனுக்கு அத்தனை சலிப்பாகத்தான் இருந்தது. அப்பா சொன்னதற்காக பெங்களூர் வந்தான். பெரியப்பா சொன்னதற்காக இன்டர்வ்யூவுக்குப் போனான். தன் வாழ்வு யாராலோ இயக்கப்படுவதாகவும், யாரோ போட்ட கோட்டில் அவன் நகர்ந்து கொண்டிருப்பதாகவும் அவ்வப்போது தோன்றுகிற நினைப்பால் அவனுக்கு ரொம்ப ஆயாசமாக இருந்தது. செலவுக்குக் காசிருக்கிறதாஎன்றுகேட்டு அவன் வேண்டாம் என்று சொல்லியும் கேட்காமல் அவன் பாக்கெட்டில் முந்நூறு ரூபாயைத் திணித்திருந்தார் பெரியப்பா. ஒவ்வொரு கிங்ஸ் புகைக்கும்போதும் அது வேறு உறுத்திக்கொண்டேயிருக்கிறது. கார்த்தி பெங்களூரில் இருப்பது ஒரு ஆறுதல். அதுவும் பெரியப்பாவின் வீடிருக்கிற ஏரியாவிலேயே அவன் வசிப்பது வேணுவின் அதிர்ஷ்டம். வந்த பத்துநாட்களுக்குள் அவனுடன் சேர்ந்து இரண்டு சினிமா பார்த்துவிட்டான்.</p>
<p>&#8220;இன்னிக்கு நான் ஸ்பெஷலா பாயசம் பண்ணியிருக்கேன். நியாயமா இன்னிக்கு நீ ஸ்வீட்டோட வீட்டுக்கு வந்திருக்கணும். பரவாயில்லை. முதல் சம்பளத்திலயாவது ஏதாவது வாங்கிட்டு வர்ரியான்னு பாப்போம்&#8221;<br />
சாப்பாடு பரிமாறும்போது பெரியம்மா சிரித்தபடி சொன்னார். மனதில் நெருடிய குற்ற உணர்வை மறைத்துவிட்டு பொதுவாய் சிரித்து வைத்தான். வேலை கிடைத்த விஷயத்தை அப்பாவுக்கு இன்னும் போன் பண்ணிச் சொல்லவில்லை என்பது திடீரென்று ஞாபகத்திற்கு வந்தது.</p>
<p>&#8220;பெரீப்பா கோயமுத்தூருக்கு ஒரு போன் பண்ணிக்கட்டுமா?&#8221;</p>
<p>&#8220;உங்கப்பாவுக்குத்தானே? நீ இன்டர்வ்யூ முடிச்சவுடனேயே உன்னை செலக்ட் பண்ணிட்டதா எனக்கு போன் வந்துரிச்சு. நான் மத்தியானமே அவனைக் கூப்பிட்டுச் சொல்லிட்டேன்.&#8221; பெரியப்பா பெருமிதமாய்<br />
சிரித்தார்.</p>
<p>சாப்பிட்டுவிட்டு வாசற்படியில் இளைப்பாற நின்றபோது பின்னாலிருந்து பெரியம்மாவின் குரல் கேட்டது. &#8220;படுக்கை தட்டிப் போட்டிருக்கேன். டயர்டா இருந்தா பால் சாப்டுட்டு போய் படுத்துக்கோ! இல்ல டி.வி பாக்கறதுன்னா பாரு! ரூம்ல கொசுவத்தி பத்த வெச்சிருக்கேன்.&#8221;</p>
<p>இன்றைக்கு ஒரு முடிவுக்கு வந்துவிடவேண்டும் என்று நினைத்துக்கொண்டான். ஒன்றோ கிடைத்த வேலையில் சேர்ந்து கொண்டு இங்கேயே இருப்பது. அல்லது கோயமுத்தூருக்கு மூட்டையைக் கட்டிவிடுவது. பின்னதுதான் உசிதம் என்று தோன்றியது. அங்கே போய் ஏதாவது ஒரு சின்ன வேலை கிடைத்தால்கூடப் பரவாயில்லை. அவன் வீட்டிலிருந்தே சுதந்தரமாய் போய் வந்து கொண்டிருக்கலாம். சுதந்திரம்! ஆம் அது ரொம்ப முக்கியம். எந்தக் காரணத்தைக் கொண்டும் அதை இழந்துவிடக்கூடாது. மேலும், அம்மா கையால் சாப்பாடு. எத்தனை கொடுத்தாலும் ஈடாகாத விஷயமில்லையா அது?</p>
<p>வெப்பத்தைத் தாங்க முடியவில்லையெனில் சமையலறையை விட்டு வெளியேறுங்கள் என்று காப்மேயர் கூட சொல்லியிருக்கிறார். பெங்களூர் பிடிக்கவில்லை. என்ன செய்யலாம்? இந்த அப்பாயின்ட்மெண்ட் ஆர்டரைக் கிழித்துப் போட்டுவிட்டு ஞாயிற்றுக் கிழமை ட்ரெயின் ஏறி விடவேண்டியதுதான். என்ன இருந்தாலும் சொந்த ஊரும் வீடும் மாதிரி வராது. அவன் சடுதியில் தீர்மானித்துவிட்டான். அம்மாவையும், பெரிம்மாவையும் எப்படியாது சமாளித்து விடலாம். அப்பாவும், பெரியப்பாவும்தான் அதிர்ச்சியாகிவிடுவார்கள். முக்கியமாய் பெரியப்பா ஏதாவது நினைத்துக்கொள்வாரோ என்று லேசாய் பயமாயிருந்தது. என்ன வேண்டுமானாலும் நினைத்துக் கொண்டால் என்ன?. என் எண்ணங்களையும், சுதந்திரத்தையும் முன் வைத்து என்னை இருப்பை நிரூபித்துக்கொள்ள வேண்டிய நேரமிது என்று நினைத்துக்கொண்டான். யாரோ சொல்கிறார்கள் என்று எதையாவது செய்வதாவது? அப்புறம் என் கருத்தென்று என்னதான் இருக்கிறது? அந்த முடிவுக்கு வந்தபிறகு வேணு கொஞ்சம் ஆசுவாசமாக உணர்ந்தான்.</p>
<p>பக்கத்து வேப்ப மரம் சிலுசிலுவென்று காற்றை அனுப்பியது. மேலே வானத்தில் அரை நிலாவும் ஒரு சில மேகப்பஞ்சுகளும் இருந்தன. எங்கிருந்தோ &#8220;பவ்&#8221; என்று குரல் கேட்டது. வேணு திடுக்கிட்டுத் திரும்பினான். எதிர் வீட்டிலிருந்து கேட்டைத் திறந்து ரோஸ் நைட்டிப் பெண் பாமரேனியன் நாய்க்குட்டியுடன் வெளிப்பட்டதைப் பார்த்தான். அவளது பேரைத் தெரிந்துகொள்ளாமல் போய்விட்டோமே என்று வருத்தப்பட்டான்.</p>
<p>முன் வாசல் ட்யூப்லைட் வெளிச்ச உபயத்தில் பளபளக்கிற கண்களுடன் அவள் வேணுவைப் பார்த்துச் சிரித்தது மந்தகாசமாய் இருந்தது. அவன் ஒரு நொடி சிலிர்த்துத் தடுமாறி பதிலுக்குச் சிரித்து வைத்தான். எப்படி அவள் இத்தனை நாள் கண்ணில் படாமல் போனாள் என்று யோசித்தான்.</p>
<p><span class="style7"><font face="Latha" size="2">திங்கட்கிழமை காலை பெரியம்மா பூஜை செய்து கொடுத்த விபூதியை நெற்றியில் பூசிக்கொண்டு இருவர் காலிலும் விழுந்து நமஸ்கரித்துவிட்டு நன்றாய் அயர்ன் பண்ணின உடையணிந்து, பாலிஷ் இடப்பட்ட ஷ¤வுடன் ஆ•பிஸ¤க்குக் கிளம்பினான். மறக்காமல் அப்பாயிண்ட்மெண்ட் லெட்டரை எடுத்துக்கொண்டான்.</p>
<p></font><br />
</span></span></span></p>
<img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/categories/chithran.wordpress.com/16/" /> <img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/tags/chithran.wordpress.com/16/" /> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/chithran.wordpress.com/16/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/chithran.wordpress.com/16/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/chithran.wordpress.com/16/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/chithran.wordpress.com/16/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/chithran.wordpress.com/16/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/chithran.wordpress.com/16/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/chithran.wordpress.com/16/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/chithran.wordpress.com/16/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/chithran.wordpress.com/16/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/chithran.wordpress.com/16/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=chithran.wordpress.com&blog=235394&post=16&subd=chithran&ref=&feed=1" /></div>]]></content:encoded>
			<wfw:commentRss>http://chithran.wordpress.com/2007/08/28/aaranjupazangal/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:content url="http://1.gravatar.com/avatar/167f258ca8d521ae05fbc12e6086f005?s=96&#38;d=identicon&#38;r=G" medium="image">
			<media:title type="html">சித்ரன்</media:title>
		</media:content>
	</item>
	</channel>
</rss>